செவ்வாய், 12 மே, 2009

வெக்காளி


வெயிலிலே
நிற்கிறாள் வெக்காளி -அந்த
விமலனின் மேனி இல் சரிபாதி
தனியாக நின்றாயே தவக்கோலம் -அம்மா
தட்சனுக்கு மகளானாய் ஒருகாலம்

வேப்பிலைஇன் மகத்துவம் தெரிய செய்தவள் -பலர்
வேண்டும் வரமத்தனையும் தந்து மகிழ்பவள்
யாப்பறியா புலவனுக்கும் பாடம் சொல்பவள் -அடியேன்
யாத்திருக்கும் பாடலுக்கும் மூலம் ஆனவள்

குங்குமத்தின் சிறப்பதனை அறிய செய்பவள் -நம்
கோதையரின் வாழ்வினையே சிரக்கவைதவள்
மங்கையரின் கற்ப்பினுக்கு மகிமை சொன்னவள் -மண்ணில்
மாகாளி திரிசூலி மாரி யானவள்

சிங்கமுக வாகனத்தில் பவனி வருபவள் -நல்ல
சீர் வளரும் உறையூர் பதி நாயகியாமவள்
எங்கள் குறை தீர்த்திடவே இங்கிருக்கிறாள் -நம்
எல்லோர்க்கும் படி அளக்கும் ஈஸ்வரியாமவள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக