செவ்வாய், 12 மே, 2009

தீபாவளி


தீபஒளி மண்ணில் தெரியுதடி -உள்ள
தீமைகள் எங்கையோ மறையுதடி
பாவஇருள் நீங்கி போகுதடி -மனம்
பக்குவ தேன்குடமாகுதடி

ஆண்டிற் கொருமுறை அவனியில் வரவும்
அழ கிய மாதத்தில் ஆனந்தம் தரவும்
வேண்டும் மனிதர் வினைகள் தீரவும்
வெற்றியே வாழ்வில் நிச்சயம் பெறவும்

வண்ண புத்தாடை வாங்கிய கைகளில்
வான வேடிக்கை வரிசையாய்நடந்திடும்
சின்ன சிறியவர் சேர்ந்திங்கு ஒன்றாய்
செய்திடும் வெடிஒலிசிம்மத்தை தோற்றிடும்

எண்ண புதுமையடி தீபாவளி -உலகில்
இன்ப பெருக்கோடு அன்பினோலி
வண்ண மலரெடுத்து வாழ்துவோமடி -என்றும்
வருகவென தலையினை தாழ்துவோமடி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக