செவ்வாய், 26 மே, 2009

பாராட்டு


கவிஞர் குலத் தலைவன்
கற்பனைக்கு மறு கம்பன்
புவியரசு போற்றி நிற்கும்
கவியரசு எங்கள் அண்ணன்

கை அசைந்தால் காவியமாம்
கண் திறந்தால் நாடகமாம்
மெய் எங்கும் தமிழ் மனமாம்
மேன்மையே அவர் குணமாம்

வெள்ளி விழா கவிதை தந்தாய்
வெற்றி பல காணவேண்டும்
உளமகிழ வாழ்த்தி நின்றோர்
வுவகையுடன் வாழி வாழி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக