
நல்லவர் இருப்பது நாடு -அது
நல்லவர் வாழ்ந்திடும் வீடு
தொல்லை வந்திடில் சாடு -தினம்
சூழ்ந்துமே வெற்றியை தேடு
சத்தியம் பெற்றிட்ட உருவம் -என்றும்
சஞ்சலம் கொண்டிடா பருவம்
இத்தரை காத்திடும் சொத்து -இங்கு
எளிமைக்கு கிடைத்த முத்து
நீதியை பேணிட நிற்கும் -அதன்
நேர்மையில் எதிரியும் வெட்கும்
சாதியை ஒழித்திட முந்தும் -எங்கும்
சமரசம் பொங்கிட செய்யும்
ஊருக்கு உழைத்திட வந்தாய் -தன்னிடம்
உள்ளது யாவையும் தந்தாய்
பாருக்குள் தெய்வமாய் ஆனாய் -நான்
பாடிட பொருளாகி நின்றாய்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக