சனி, 16 மே, 2009

அமுது


எங்கே போவாய் என்னவளே -இங்கு
இருப்பதுஎன்னிடம் உன்னினைவே
பொங்கும் உணர்வுகள் தெரியலையோ -இந்த
பூவைக்கு இளகிடும் மனமிலையோ

வாலிபம் என்பது வரவாக -உலக
வாழ்க்கையில் நாமினி உறவாக
நாளைய பொழுது நமக்காக -கொஞ்சம்
நாணத்தை விலக்கிடு எனக்காக

வளர்கின்ற காதலை வாழ்த்திவிடு-இனி
வாலிப விருந்தினை பருகவிடு
குளிருக்கு போர்வையாய் மாறிவிடு -உந்தன்
கோவை இதழினில் தேனைகொடு

இரண்டினில் ஒன்றாய் கலந்துவிடு -அந்த
இன்பத்தில் உலகினை மறந்துவிடு
கறந்த பாலின் சுவையாகி -நம்
காதல் அமுதினை இனிக்கவிடு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக