
உயர்ந்த குடியில் பிறந்தீர் -நீவிர்
உலகம் மெச்ச வாழ்ந்தீர்
கயவன் செய்த செயலால் -அன்று
கல்லு முள்ளில் நடந்தீர்
அன்பு காட்ட எனக்கு -ஏனோ
அருகில் நீங்கள் இல்லை
பண்பு ஊட்டி வளர்த்தாள் -நான்
பாடி புகழும் என்தாய்
ஈர்க்கும் முகத்தின் அழகு -உள்ள
இரக்கம் அவரது செய்கை
யார்க்கும் உதவி வேண்டின் -தன்
யாக்கை கூடவும் தருவார்
கணவன் அருகில் இருந்தாள் -அவள்
காலம் முழுதும் உழைத்தாள்
துன்பம் சூழ்ந்த போதும் -தனது
தோளில் வைத்து சுமந்தாள்
உழைத்து உழைத்து உயர்ந்தீர் -தொழிலில்
உன்னத புகழினை பெற்றீர்
நிலைத்த பெருமை அடைந்தீர் -என்
நெஞ்சினில் கோவில் கொண்டீர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக