வியாழன், 7 மே, 2009

எங்கள்தங்கம்



இதய
கோவிலில் இருப்பவன் -என்றும்
இன்னல் கண்டதும் துடைப்பவன்
உதய சூரியனாய்ஒளிர்பவன் -கொடை
ஓங்கு புகழில் மிளிர்பவன்

செக்கர் வானமாய் சிவந்தவன் -மக்கள்
சிந்தனை கொலுவிற்கு வுவந்தவன்
மக்கள் திலகமாய் ஆனவன் -தமிழ்
மண்டலம் வாழ்த்திடும் மாயவன்

ஆவல் கொண்ட மனதிலே -நல்ல
அன்பு விதைகளை தூவியே
காவல் காரனாய் நின்றவன் -திரை
களத்தில் பலரையும் வென்றவன்

குண்டடி பட்டும் வாழ்ந்தவன் - தூய
குணத்தில் தங்கத்தை வெல்பவன்
எண்டிசை போற்றிடும் இனியவன் -நான்
என்றுமே தொழுதிட உரியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக