வெள்ளி, 8 மே, 2009

நான்



உலகம்
அறியாத பிள்ளை -என்
உள்ளம் முழுவதும் வெள்ளை
கலகம் வாழ்வில் தெரியாது -வீணில்
கவலை கொள்வதும் கிடையாது

இரவு பகலெனும் காலமில்லை -எனக்கு
இன்ப துன்பங்கள் ஒன்றுமில்லை
உறவு சொல்லிட உலகமுண்டு -அதில்
உள்ள பேர்களில் நல்ல நண்பருண்டு

நெஞ்சில் இருப்பதை தெய்வமேன்பேன் -அந்த
நினைவில் நானும் வாழ்ந்திடுவேன்
கொஞ்சும் தமிழை செல்வமென்பேன் -தினம்
கொள்ளை இன்பம் பெற்றிடுவேன்

கண்ணில் காதலினை வளர்த்து -அதன்
கருத்தில் என்னை பறிகொடுத்து
எண்ணி அலையும் வழக்கமில்லை -பெண்
ஏக்கம் இன்னமும் பிறக்கவில்லை

பிறந்ததால் மண்ணில் இறப்பதுண்டு -ஒரு நாள்
பின்னே மறுபடி பிறப்பதுண்டு
என்றும் நிலைப்பது எழுத்தல்லவோ -இந்த
ஏழைக்கு அதுவே பெரிதல்லவோ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக