
உள்ளம் அறிந்தவன் ஒருவனடா -அந்த
ஒருவன் பெயரே இறைவனடா
நல்லதை செய்திட மறந்ததில்லை -தன்னை
நம்பிய பேரை கெடுத்ததில்லை
இதயத்தில்ஓரிடம் வைத்திருந்தேன் -அதில்
இரக்கத்தை வைத்து காத்திருந்தேன்
புதையலாய் போற்றி பார்த்திருந்தேன் -வீணில்
புழுதியை நாடி சென்றுவிட்டாய்
சிரித்து பேசி உலமகிழ்வாய் -தினம்
சிக்கி தவித்து நானிருப்பேன்
வெறுத்து பிரியும் நிலையாகி -உலகில்
வேதனை ஒன்றே பரிசளித்தாய்
தனக்கென நானும் வாழ்ந்ததில்லை -அள்ளி
தருவதால் மேலென சொல்லவில்லை
உனக்கென வாழ்ந்தது உண்மையடா -இந்த
உறவினை உணர்ந்தால் நன்மையடா
ஆசைகள் அதிகம் கொண்டதினால்
அலைமேல் படகென ஆடுகிறேன்
மோசமேசெய்தவர் வாழ்ந்திருக்க -நீதி
மூலையில் நின்றிடும் கதையானேன்
இருக்கும் வரையில் நினைத்திருப்பேன் -என்
இதயத்தை திறந்து வைத்திருப்பேன்
சிரிக்கும் காலம் பொறுத்திருப்பேன் -அன்றே
ஜீவனை விட்டு பறந்திருப்பேன்
Vekkali & Malaikottai is Good
பதிலளிநீக்கு