திங்கள், 18 மே, 2009

மோகம்


தென்றல் காற்று வருகையில் -இன்ப
தேனை அள்ளி தருவதால்
அன்று பூத்த மலரிலே -நல்ல
அழகு வாசம் செய்கிறாள்

ஓடும் அருவி மீதிலே -தினம்
ஒய்யார நடம் ஆடுகிறாள்
பாடும் இனிய பாட்டிலே -பல
பாவம் காட்டி நிற்கிறாள்

ஆட்டம் காட்டும் மயிலுக்கு -அவள்
அடி எடுத்து தருகிறாள்
தோட்டம் கழனி எங்கிலும் -என்றும்
சூழ்ந்து வளமை பொழிகிறாள்

வான வில்லின் நிறங்களாய் -தூய
வாழ்வு சொல்லும் அரங்களாய்
மோன பொருளின் உருவமாய் -நெஞ்சில்
மோகம் தீர்க்க வருகிறாள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக