
சிரிக்கத் தெரியாமல் இருக்காதே -துன்பம்
சேர்ந்து வரும்போது மயங்காதே
நினைத்தபடி வாழ்வை நடத்தாதே -சொல்லில்
நேர்மை தவறிவிட நினைக்காதே
வந்து பிறந்தவற்கும் மரணமுண்டு -தினம்
வாடி அழுவதிலே என்னவுண்டு
சொந்த பந்தமென துவளாதே -வாழ்வில்
தூய வழி தள்ளி பிரலாதே
அன்பு படராத இடமேது - அதில்
அடங்கி நடக்காத வுறவேது
ஒன்று இரண்டின்றி மூன்றேது -இந்த
வுலகம் நமதன்றி வேறேது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக