திங்கள், 18 மே, 2009

கற்கண்டு


அல்லி மலர் சோலையடி -உன்
அன்பு மனம் வேலியடி
கன்னி முகம் கண்டதுமே -நெஞ்சில்
காதற் கலை மீறுதடி

வான மென்னும் பூந்துகிலே -கூட
வந்து செல்லும் கார்முகிலே
மோன சுகம் கண்டதுண்டோ -நீ
முத்த மழை உண்டதுண்டோ

துள்ளி வரும் மானினமே -அழகு
தோகை இவள் மேனி என்ன
முல்லை மலர் பூச்சரமோ -தீரா
மோக மது இருப்பிடமோ

கெண்டை விழி சண்டையிட -தினம்
கிண்கிணி ஒலி தாளமிட
வண்டு மன வாசலிலே -கொஞ்சும்
வஞ்சி வந்த மாயமென்ன

புன்னகையில் தேன் சுரக்கும் -இந்த
பூவை இதழ் நிலவிருக்கும்
கன்ன மிரண்டும் தேன்குடமோ -அது
கற்கண்டு சுவை தருமோ

ஊரறிய மாலை சூட்டி -அன்று
உன்னுடனே நான் கலந்து
பேறு பெறும் காலமெப்போ -நமது
பிள்ளை வரும் கோலமேப்போ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக