வெள்ளி, 22 மே, 2009

இனிமை


வண்ண மலர் சோலையில் -தினம்
வந்து பாடும் குயிலே
என்ன சொல்லி பாடுகிறாய் -அங்கே
யாரை நீ தேடுகிறாய்

காதல் எண்ணம் வந்ததோ -மனதில்
கலக்கம் அதிகம் தந்ததோ
கீதம் சோகம் ஆனதா -நெஞ்சில்
கிளர்ச்சி பொங்கி போனதோ

காக்கை கூட்டில் பிறந்ததால் -என்றும்
கருமை உனக்கு கிடைத்ததோ
கருமை அதிகம் உள்ளதால் -உன்
கானம் இனிமை யானதோ

இறைவன் தனது கருணையை -உலகில்
எடுத்து சொல்ல வேண்டியே
குறைவில்லாத நல் இனிமையை -கருங்
குயில் உனக்கு தந்ததோ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக