
வண்ண மலர் சோலையில் -தினம்
வந்து பாடும் குயிலே
என்ன சொல்லி பாடுகிறாய் -அங்கே
யாரை நீ தேடுகிறாய்
காதல் எண்ணம் வந்ததோ -மனதில்
கலக்கம் அதிகம் தந்ததோ
கீதம் சோகம் ஆனதா -நெஞ்சில்
கிளர்ச்சி பொங்கி போனதோ
காக்கை கூட்டில் பிறந்ததால் -என்றும்
கருமை உனக்கு கிடைத்ததோ
கருமை அதிகம் உள்ளதால் -உன்
கானம் இனிமை யானதோ
இறைவன் தனது கருணையை -உலகில்
எடுத்து சொல்ல வேண்டியே
குறைவில்லாத நல் இனிமையை -கருங்
குயில் உனக்கு தந்ததோ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக