
சிங்கார கொட்டடி சேலை கட்டி -ஒரு
செந்தாழம் பூவினை தலையில் சூட்டி
மங்கிய ஒரு நாள் காலைஇலே-புது
மங்கை வந்தாள் தேரினிலே
தங்கத்தை யள்ளி குடித்து விட்டு -இளன்
தாமரை கொடியில் உடலெடுத்து
செங்கனி வாயில் முத்துடைத்து -இன்று
தேரினில் வந்தவள் யாரெநிலொ
(வேறு )
திங்களும் புதனும் போன்றவளாம்
தேசத்தை காப்பதில் வல்லவளாம்
எங்குமே இன்பம் தருபவளாம்
இராறு மாதத்தில் வருபவளாம்
வந்ததும் வரமே தருபவளாம்
வாழ்வுக்கு துணையே புரிபவளாம்
சொந்தம் கொண்டிட சோதரியாம்
சொர்க்கத்தை தந்திடும் சித்திரையாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக