திங்கள், 11 மே, 2009

காந்தி


அன்பினால்
உலகை ஆள்வதற்கு -நம்மிடை
அண்ணல் காந்தி அவதரித்தார்
உண்மை பெருமை சொல்லிவைத்து -மக்கள்
உள்ளத்தில் தெய்வமாய் குடி புகுந்தார்

அள்ளி இறைக்க செல்வமுண்டு -அவர்
ஆடி களிக்க இளமையுண்டு
தள்ளி பிரற்கென உழைத்ததனால் -இன்றும்
தணலில் தங்கமாய் மின்னுகிறார்

பூட்டிய விலங்கை உடைத்தெறிந்து -அன்றே
புதுமையை எங்கும் விளைத்து விட்டார்
ராட்டைஇன் உதவி அறிவோமேனில் -இந்திய
நாட்டையே மீட்டிட முடியுமென்றார்

சொல்வதை செயலில் கடை பிடித்தார் -வெள்ளையர்
சூதினை எதிர்த்தே படைஎடுத்தார்
நல்வழி தன்னில் நடந்ததினால் -உலகம்
நாளுமே வணங்கிடும் பேறு பெற்றார்

எத்தனை காலங்கள் சென்றாலும் -எங்கள்
இந்திய நெஞ்சங்கள் மறப்பதில்லை
சத்தியம் என்பது உள்ளவரை -இங்கு
சாகா வரமுடன் வாழ்ந்திடுவார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக