
வானில் வுலவும் நிலவு -மண்ணில்
வர்ண ஜாலம் காட்டுகையில்
கானில் வாழும் மிருகமோ-சற்று
கண்ண யர்ந்து தூங்குதடா
நிலவது வருகை கண்டு -முற்றும்
நீங்க வொண்ணா காதலுற்ற
அலைகள் நடம் ஆடுதடா -பொங்கி
ஆடிய பின்னே வீழுதடா
மொட்டு விட்ட முல்லை மலர் -நெஞ்சில்
மோக வெறி கொல்லுதடா
பட்டான மேனி காட்டி - இரவில்
பளபளத்து கண்ணை பறிக்குதடா
வெள்ளை மனம் கொண்டவர்கள் -வீட்டில்
வீழ்ந்து ரங்கும் நேரமதில்
கள்ள மனம் வுள்ளவர்கள் -தனது
காசை எண்ணி பார்க்குதடா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக