
மார்கழி மாசி இருவரிடை நல்ல
மகவாய் பிறந்த தைமகளே
போர்குரல் காதினில் கேட்கிறதா -உள்ளம்
பொங்கி கொதிப்பது புரிகிறதா
யாரெதிர் வரினும் விட மாட்டோம் -உள்ள
யாவையும் அரிதென கொள்ள மாட்டோம்
நேரெதிர் சென்றே போரிடுவோம் -என்றும்
நேர்மையே உணர்வாய் கொண்டிருப்போம்
கொட்டி முழக்கிடும் வெடியோசை -காது
குளிரக் கேட்பதில் தனி ஆசை
வெட்டி வீழ்த்திடும் பல சடலம் -எமது
வெற்றி கதைகோர் புதுப்படலம்
பொங்கி பீறிடும் செங்குரிதி -எமக்கு
புதுமையை கூறிடும் சிற்றருவி
எங்கும் முனகிடும் சோக ஒலி -இரவில்
இமைகளை மூடிடும் இன்ப ஒலி
காலடி மிதிபடும் சடலங்கள் -எங்கள்
கைவண்ணம் காட்டிடும் எழிற்சிலைகள்
இன்னும் சொல்லிட பலவுமுண்டு -ஆனால் -
இருந்திடும் நேரமோ மிகவும் கொஞ்சம்
வாரி வழங்கிடும் வள்ளல்களும் -உள்ள
வழிமுறை தெரிந்திட்ட நல்லவரும்
ஊரினில் இருப்பதை நீயறிவாய் -என்ற
உண்மையை நன்மையை யாமறிவோம்
பொங்கிடும் உணர்வினில் இருப்பவளே -எம்
பூமியை காத்திடும் தூயவளே -உன்
தங்க திரு முகம் நினைக்கின்றோம் -நீ
தாயாகி இன்றே காத்திடுவாய்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக