சனி, 16 மே, 2009

திருநாள்


மங்கையர்
சங்கொலி மங்களம் முழங்க
மாவிலை தோரணம் எங்கணும் விளங்க
பொங்கல் பிறந்தது பாருங்கடி -மனம்
பூரித்து ஒன்றென சேருன்கடி

வாசலில் கோலம் போடுங்கடி -அங்கு
வரிசையாய் பானைகள் வையுங்கடி
நேச நெல்மணி கொட்டுங்கடி -அதில்
நெய்யுடன் பாலையும் நிரப்புங்கடி

குபுகுபுவென சாதம் கொப்பளிக்க -காணும்
கோதையர் கைவளை முரசொலிக்க
தகுதிமி திமியென தாளமுடன் -இளன்
தையலார் சேர்ந்திங்கு ஆடுங்கடி

வாழ்வை காத்திடும் உழவருக்கும் -அவர்
வணங்கிட பெற்றிடும் மாடுகட்கும்
தாளினை பணிந்தே சோறிடுவோம் -இன்ப
தமிழ் திருநாளென்று கூறிடுவோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக