திங்கள், 11 மே, 2009

கோலம்


பொங்கிய
அரிசி சிரிக்குதடி -அதை
பூவையர் கூட்டம் ரசிக்குதடி
எங்கும் மகிழ்ச்சி சிறக்குதடி-அந்த
இன்பத்தில் கவிதைகள் பிறக்குதடி

தைஎனும் பெண்ணால் தரணியில் பிறக்க
தர்மங்கள் உலகில் என்றுமே நிலைக்க
வையக வாழ்வில் வளமை சுரக்க
வற்றாத அன்னை கருணையில் திளைக்க

மங்கல மங்கையர் மகிழ்ந்திடும் பொங்கல்
மாடுகள் ஒட்டி ஆடிடும் பொங்கல்
திங்களில் முதலாய் சிறந்திட்ட பொங்கல்
தேசத்தின் உயர்வினை காத்திடும் பொங்கல்

சோறு கொடுத்திடும் தூயவர் பேரை
சொல்லி உலகினர் வணங்கிடும் காலம்
ஏறு பிடித்தவர் நாளும் செழித்திட
இதயத்தில் நல்லவர் எழுந்திடும் கோலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக