ஞாயிறு, 10 மே, 2009

மனிதன்


அறிவாயோ -இங்கே
ஏனோ பிறந்தாய் தெரிவாயோ
ஓடாய் தேய்ந்து உழைதிடவோ -அன்றி
உலக சுகத்தில் மிதந்திடவோ

காலை மாலை கண்டாயோ -உழைத்து
களைப்போ மிகவும் கொண்டாயோ
நாளை நினைத்து நொந்தாயோ -தினம்
நலிவதை எண்ணியே வெந்தாயோ

உள்ளதை வைத்து வாழ்ந்துவிடு -அதில்
உன்மன வாசல் திறந்துவிடு
நல்லதை என்றும் செய்துவிடு -அதுவே
நன்மையை தந்திடும் அமைதிப்படு

கண்களை நீதிக்கு இரவல் கொடு -உன்
கரங்களால் ஏழைக்கு வாழ்வு கொடு
பெண்களை மதிக்கத் தெரிந்துவிடு -எங்கும்
பெருமையே தருவதை புரிந்துவிடு

உலகம் என்பது மாயையடா -இதை
உணர்ந்து நடப்பவன் முனிவனடா
கலகங்கள் தினமும் தோன்றுமடா -ஆசை
கண்களை மறைத்திடும் வேடமடா

வந்தவன் போவது வழக்கமடா -இது
வழி வழி வந்திட்ட பழக்கம்டா
படைதிட்டவன் செய்திட்ட வேலையடா -நீ
பார்த்து இன்றே தெளிந்திடடா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக