செக்கர் வானத்தில் இளம் பரிதி -அண்ணன்ஜெயமே அடைவார் இது உறுதிகொக்கும் தவளையும் கூச்சலிடும் -அவர்கொடுக்கும் அடியில் தலை கவிழும்வெட்கம் இல்லாத சிறு நரிகள் -அவரைவீழ்த்த நினைக்கிற தற்குறிகள்நிச்சயம் அழிவது உண்மையடா -என்றும்நேர்மையே உலகினில் நிலைக்குமடாவெற்றி திரு மகள் அழைக்கின்றாள் -அண்ணனைவிரும்பி தழுவிட விழைகின்றாள்சுற்றி நாமும் சூழ்ந்திருப்போம் -அந்தசுகத்தை எண்ணி உழைத்திடுவோம்
பொங்கல் இங்கு பொங்கட்டுமே -பொங்கிபுத்தொளி எங்கிலும் தங்கட்டுமேதிங்கள் மாரி பொழியட்டுமே -பொழிந்துதேசம் சிறப்புற வாழட்டுமேவள்ளல் குணமிங்கு வளரட்டுமே -வளரவறுமை உலகினில் குறையட்டுமேகள்ள எண்ணம் மறையட்டுமே -மறையகருணை உள்ளம் பிறக்கட்டுமேஅமைதி இனிமேல் நிலவட்டுமே -நிலவிஆனந்தம் வீட்டினில் நிலைக்கட்டுமேகலைகள் பெருகி சிறக்கட்டுமே-நாடேகாவியம் ஓவியம் ஆகட்டுமே
கவிஞர் குலத் தலைவன்கற்பனைக்கு மறு கம்பன்புவியரசு போற்றி நிற்கும்கவியரசு எங்கள் அண்ணன்கை அசைந்தால் காவியமாம்கண் திறந்தால் நாடகமாம்மெய் எங்கும் தமிழ் மனமாம்மேன்மையே அவர் குணமாம்வெள்ளி விழா கவிதை தந்தாய்வெற்றி பல காணவேண்டும்உளமகிழ வாழ்த்தி நின்றோர்வுவகையுடன் வாழி வாழி
பொன்னிற வானம்பூத்திட காலையில்புதியவன் வந்தான் -ஒருபுதுமையை கண்டேன் தோழிதன்னை மறந்துவிண்ணில் அலைந்ததலைவனை கண்டேன் தோழி -நெஞ்சில்தயக்கமும் கொண்டேன் தோழிதாமரை மகளின்தளிருடல் தழுவிதலைவன் சிரித்தான் தோழி -உடன்தலை குனிந்தா ளந்த தலைவிபுள்ளினம் கூவிடபுது மலர் வாழ்த்திடமெல்ல சிரித்தாள் தலைவி -அவன்மேகத்தில் நுழைந்தான் தோழிமுல்லை சிரிப்பினில்மோகன அழகில்கொள்ளை யடித்தான் தோழி -மனதைகொண்டே சென்றான் தோழிஆலய மணிகள்அண்ணலின் வரவைஆடியே முழக்குதடி-உள்ளம்தினம் நாடியே செல்லுதடிஎத்தனை உள்ளங்கள்என்னென்ன எண்ணங்கள்எங்கும் அவனேயடி -இன்னும்எப்படி உன்னிடம் சொல்வேனடி
சிங்கார கொட்டடி சேலை கட்டி -ஒருசெந்தாழம் பூவினை தலையில் சூட்டிமங்கிய ஒரு நாள் காலைஇலே-புதுமங்கை வந்தாள் தேரினிலேதங்கத்தை யள்ளி குடித்து விட்டு -இளன்தாமரை கொடியில் உடலெடுத்துசெங்கனி வாயில் முத்துடைத்து -இன்றுதேரினில் வந்தவள் யாரெநிலொ (வேறு )திங்களும் புதனும் போன்றவளாம்தேசத்தை காப்பதில் வல்லவளாம்எங்குமே இன்பம் தருபவளாம்இராறு மாதத்தில் வருபவளாம்வந்ததும் வரமே தருபவளாம்வாழ்வுக்கு துணையே புரிபவளாம்சொந்தம் கொண்டிட சோதரியாம்சொர்க்கத்தை தந்திடும் சித்திரையாம்
மார்கழி மாசி இருவரிடை நல்லமகவாய் பிறந்த தைமகளேபோர்குரல் காதினில் கேட்கிறதா -உள்ளம்பொங்கி கொதிப்பது புரிகிறதாயாரெதிர் வரினும் விட மாட்டோம் -உள்ளயாவையும் அரிதென கொள்ள மாட்டோம்நேரெதிர் சென்றே போரிடுவோம் -என்றும்நேர்மையே உணர்வாய் கொண்டிருப்போம்கொட்டி முழக்கிடும் வெடியோசை -காதுகுளிரக் கேட்பதில் தனி ஆசைவெட்டி வீழ்த்திடும் பல சடலம் -எமதுவெற்றி கதைகோர் புதுப்படலம்பொங்கி பீறிடும் செங்குரிதி -எமக்குபுதுமையை கூறிடும் சிற்றருவிஎங்கும் முனகிடும் சோக ஒலி -இரவில்இமைகளை மூடிடும் இன்ப ஒலிகாலடி மிதிபடும் சடலங்கள் -எங்கள்கைவண்ணம் காட்டிடும் எழிற்சிலைகள்இன்னும் சொல்லிட பலவுமுண்டு -ஆனால் -இருந்திடும் நேரமோ மிகவும் கொஞ்சம்வாரி வழங்கிடும் வள்ளல்களும் -உள்ளவழிமுறை தெரிந்திட்ட நல்லவரும்ஊரினில் இருப்பதை நீயறிவாய் -என்றஉண்மையை நன்மையை யாமறிவோம்பொங்கிடும் உணர்வினில் இருப்பவளே -எம்பூமியை காத்திடும் தூயவளே -உன்தங்க திரு முகம் நினைக்கின்றோம் -நீதாயாகி இன்றே காத்திடுவாய்
பழுத்த இலை உதிரும் -புதுபச்சை இலை துளிரும்திளைத்த இன்பம் வேண்டி -வண்டுதேன் மலரை மூடும்குயில்கள் கூட்டம் கூடும் -தங்கள்குரலை கொஞ்சம் காட்டும்மயீல்கள் வந்து ஆடும் -இளமான்கள் எங்கும் ஓடும்காமன் அங்கு வருவான் -உடன்காதல் பாணம் தருவான்வேகம் மீறி போகும் -நெஞ்சில்விரக தாபம் சேரும்கொட்டும் அருவி யோரம் -காதல்கொதிப்பும் அடங்கி போகும்வெட்ட வெளியில் நடக்கும் -அதுவிடியும் வரைக்கும் கிடைக்கும்காற்று வந்து வீசும் -நல்லகவிதை உடனே பிறக்கும்நேற்று இன்று நாளை -என்றநினைவே மறந்து போகும்இன்பம் இன்பம் இன்பம் -அதில்இணைய மறுத்தால் துன்பம்அன்பு பெருகி சிறக்கும் -உலகின்அமைதி காலம் வாழி
சித்திரை இன்று பிறந்ததினால்செல்வம் எங்கும் நிறையுமம்மாஇத்தரை வாழும் உறவுகளேலாம்இன்ப கடலினில் நீந்து தம்மாகல்வி கலைகள் வளருமம்மாகாவியம் ஓவியம் பெருகுமம்மாஎல்லையோர சண்டை எல்லாம்இனிமேல் நலமாய் முடியுமம்மாபஞ்சம் பசிபிணி தீருமம்மாபாரதம் சிறப்புற விளங்குமம்மாதஞ்சம் தஞ்சமுன் பாதமம்மாதாயாகி எங்களை காருமம்மா
தேடி அலைவதென்ன -கண்கள்சென்றே வருவதென்னவாடி மெலிவதென -அந்தவள்ளலை காணாமல்அன்றொரு நாள் வந்தார் -எனக்குஆயிரம் தான் தந்தார்கன்றிய என்மேனி -காதற்கதை சொல்லுமே தோழிநிலவிங்கு வர வேண்டாம் -வந்துபல நினைவுகள் தர வேண்டாம்மலருக்கு மணம் வேண்டாம் -மலர்ந்துமயக்கத்தை பெற வேண்டாம்வானுக்கு ஒளிஇல்லை -பேதைவாழ்வுக்கு சுகமில்லைதேனுக்கு சுவைஇல்லை -எந்தன்தெய்வத்தை காணும் வரைவீசிடும் பூங்காற்றே -என்வேதனை கேளாயோபேசிடும் நிலை யானேன்றே-சற்றுபுரிந்திட நீயும் சொல்லாயோபாடிடும் பறவைகளே -நான்படும் துயர் அறிவீரேநாடிய நாயகனை -அழைத்துநாளைக்கே வருவீரோ
உத்தமர் ஒருவர் மறைந்து விட்டார் -இந்தஉலகினை காத்தவர் பிரிந்து விட்டார்சத்திய வழிஇனில் நடந்து வந்தார் -என்றும்சாந்தமே உயிராய் கொண்டிருந்தார்கூடி வாழ்தல் இன்ப மென்றான் -பிறர்கொள்கைக்கு மதிப்புமே தந்திருந்தான்நாடு உயர வேண்டு மென்றான் -அதற்குநல்லன செய்திட தூண்டி நின்றான்அல்லும் பகலும் பாடு பட்டார் -நாட்டின்அவலத்தை போக்கைஇல் கூடு விட்டான்சொல்லும் செயலுமாய் இணைந்து நின்றான் -நமைதுடிக்க விட்டேன் பறந்து சென்றான்
வண்ண மலர் சோலையில் -தினம்வந்து பாடும் குயிலே என்ன சொல்லி பாடுகிறாய் -அங்கேயாரை நீ தேடுகிறாய்காதல் எண்ணம் வந்ததோ -மனதில்கலக்கம் அதிகம் தந்ததோகீதம் சோகம் ஆனதா -நெஞ்சில்கிளர்ச்சி பொங்கி போனதோகாக்கை கூட்டில் பிறந்ததால் -என்றும்கருமை உனக்கு கிடைத்ததோகருமை அதிகம் உள்ளதால் -உன்கானம் இனிமை யானதோஇறைவன் தனது கருணையை -உலகில்எடுத்து சொல்ல வேண்டியேகுறைவில்லாத நல் இனிமையை -கருங்குயில் உனக்கு தந்ததோ
உயர்ந்த குடியில் பிறந்தீர் -நீவிர்உலகம் மெச்ச வாழ்ந்தீர்கயவன் செய்த செயலால் -அன்றுகல்லு முள்ளில் நடந்தீர்அன்பு காட்ட எனக்கு -ஏனோஅருகில் நீங்கள் இல்லைபண்பு ஊட்டி வளர்த்தாள் -நான்பாடி புகழும் என்தாய்ஈர்க்கும் முகத்தின் அழகு -உள்ளஇரக்கம் அவரது செய்கையார்க்கும் உதவி வேண்டின் -தன்யாக்கை கூடவும் தருவார்கணவன் அருகில் இருந்தாள் -அவள்காலம் முழுதும் உழைத்தாள்துன்பம் சூழ்ந்த போதும் -தனதுதோளில் வைத்து சுமந்தாள் உழைத்து உழைத்து உயர்ந்தீர் -தொழிலில்உன்னத புகழினை பெற்றீர்நிலைத்த பெருமை அடைந்தீர் -என்நெஞ்சினில் கோவில் கொண்டீர்
இரவும் பகலும் நினைத்திருப்பேன் -உன்னைஇரண்டு கைகளால் அணைத்திருப்பேன்உறவை எண்ணி சிரித்திருப்பாய் -வரும்உணர்ச்சியில் யாவையும் மறந்திருப்பேன்காலம் முழுதும் கலந்திருப்பேன் -நான்கனவில் கண்டு ரசித்திருப்பேன்ஞாலம் பார்த்து தலை குனிவாய்-அந்தநாணத்தில் இன்பம் கண்டிருப்பேன்காணும் பொருளில் உன்நினைவு -சிறிதுகண்களை மூடினால் உன்கனவுநாளும் கிடந்து வாடுகிறேன் -இளையநங்கையே உன்னை தேடுகிறேன்துன்ப மேகம் கலையாதோ -என்சோகம் ஒரு நாள் விடியாதோகண்ணை உறக்கம் தழுவாதோ -கொண்டகாதல் இன்றே வாழாதோ
அல்லி மலர் சோலையடி -உன்அன்பு மனம் வேலியடிகன்னி முகம் கண்டதுமே -நெஞ்சில்காதற் கலை மீறுதடிவான மென்னும் பூந்துகிலே -கூடவந்து செல்லும் கார்முகிலேமோன சுகம் கண்டதுண்டோ -நீமுத்த மழை உண்டதுண்டோதுள்ளி வரும் மானினமே -அழகுதோகை இவள் மேனி என்னமுல்லை மலர் பூச்சரமோ -தீராமோக மது இருப்பிடமோகெண்டை விழி சண்டையிட -தினம்கிண்கிணி ஒலி தாளமிடவண்டு மன வாசலிலே -கொஞ்சும்வஞ்சி வந்த மாயமென்னபுன்னகையில் தேன் சுரக்கும் -இந்தபூவை இதழ் நிலவிருக்கும்கன்ன மிரண்டும் தேன்குடமோ -அதுகற்கண்டு சுவை தருமோஊரறிய மாலை சூட்டி -அன்றுஉன்னுடனே நான் கலந்துபேறு பெறும் காலமெப்போ -நமதுபிள்ளை வரும் கோலமேப்போ
தீப வோளிகன்னி வந்தாள் -எங்கும்தேனான சுகம் கோடி தந்தாள்சோக நிலை இனிமேல் மறையும் -மண்ணில்சூழும் வளம் பொங்கி நிறையும்புத்தம் புதிய உடை அணிந்து -மனம்பூரிக்க அவள் கருணை நினைந்துநித்தம் நேர்மை வழி நடப்போம் -என்றும்நிலைக்கும் புதுமை வாழ்வு படைப்போம்
வாழ்க்கை என்பது சிறைவாசம் -இதில்வருவதும் போவதும் வனவாசம்யாருக்கும் நிலையில்லை சுகவாசம் -நன்றாய்அறிந்தும் எதுக்கு வெளிவேஷம்சொந்தம் தருவது தொல்லையடா -அதுதொடர்ந்தால் துயரமே எல்லையடாவந்தவன் கதையில் வரவுமில்லை -அவன்வாழ்ந்ததை பார்க்கையில் மீதமில்லைசேர்த்திட மனிதன் எண்ணுகிறான் -உடன்தீமைகள் செய்வதில் முந்துகிறான்காத்திட்ட பொருளினை அடையாமல் -தானேகடைசியில் எங்கோ ஓடுகிறான்
நல்லவர் இருப்பது நாடு -அதுநல்லவர் வாழ்ந்திடும் வீடுதொல்லை வந்திடில் சாடு -தினம்சூழ்ந்துமே வெற்றியை தேடுசத்தியம் பெற்றிட்ட உருவம் -என்றும்சஞ்சலம் கொண்டிடா பருவம்இத்தரை காத்திடும் சொத்து -இங்குஎளிமைக்கு கிடைத்த முத்துநீதியை பேணிட நிற்கும் -அதன்நேர்மையில் எதிரியும் வெட்கும்சாதியை ஒழித்திட முந்தும் -எங்கும்சமரசம் பொங்கிட செய்யும்ஊருக்கு உழைத்திட வந்தாய் -தன்னிடம்உள்ளது யாவையும் தந்தாய்பாருக்குள் தெய்வமாய் ஆனாய் -நான்பாடிட பொருளாகி நின்றாய்