வியாழன், 29 ஆகஸ்ட், 2019

இளமை 7 7 5

கண்ணில்         ஆடும்       கனியே   ---என் 
கருத்தில்       வாழும்     கிளியே 
பொன்னில்     செய்த     மனமே   ---உனக்கு 
பூசை       செய்வேன்    அனுதினமே 

எண்ண க்      கனவுகள்      கோடி   ---நாம் 
இணைந்து    மகிழ்ந்திட     வாடி 
கன்னல்        மொழியோ  கவிதை   ---என்றும் 
கலந்து       உண்போம்     அமுதை 

வானம்       தேடிப்       பறப்போம்     ---பேசும் 
வார்த்தை      மறந்து     ரசிப்போம் 
கானம்      பாடித்      திரிவோம்    ----வீசும் 
காற்றில்     உலவியே    வருவோம் 

ஒன்றில்        சேருமே       ஒன்று     ---அந்த 
உணர்ச்சி      வருவது      என்று 
அன்றில்    பறவைகள்    ஆவோம்   ---இந்த 
அகிலம்       சிறக்க      வாழ்வோம் 

இளமை        அழகு       இனிமை   ---இதனை 
இருவரும்      ரசிப்பது    திறமை 
களவுப்        பாடங்கள்     சொல்லு    ---உன் 
காதலில்       என்னையே    வெல்லு 

புள்ளி மான் 7 7 4

கண்ணில்      பாராய்ப்        பெண்ணே    ---என்
காதல்        இன்பத்     தேனே
உன்னில்     பாதி       நானே   ---நானும்
உயிரைத்     தருவேன்    அன்பே

தென்றல்      காற்று      வீசும்   ---அது
தேனை      யள்ளி    போடும்
ஒன்று      ஆவோம்     இன்று  ---நீ
உதவி     செய்தால்    நன்று

பள்ளி       சொல்லும்    பாடம்   ---அதை
படிக்க     மனமும்     ஓடும்
புள்ளி     மானாய்த்     துள்ளி  ---நீ
புறப்பட்டு    வாயேன்    கள்ளி

இன்பம்      இங்கே       கோடி   ---நா ம்
இருவரும்   ஒன்றாய்    கூடி
அன்பில்    ஆடிப்     பார்ப்போம்  ---இனி
அணைத்துக்    கலைகளைக்   கற்போம்

எண்ண        எண்ண        இனிப்பு    ---அடி
ஏனடி         இன்னும்      வெறுப்பு
கண்ணே       மணியே      வாடி    ---நம்
காதற்      பண்ணைப்     பாடி 

பதிவுகள் 7 7 3

அன்பே     அழகியே    ---என்
ஆருயிர்ச்     செல்வியே
என்னை    அணைத்திட   --நீயும்
இன்றே     நெருங்கிடு

காற்றில்      ஏறுவாய்   --பெரும்
கடலிலும்     நீந்துவாய்
பார்க்கும்      இடங்களில்  ---உன்
பதிவுகள்      தெரியுமே

இளமையின்    இலக்கணம்   ---நான்
உன்னிடையினைச்   சுமக்கணும்
புலமை     பெருகனும்    ---உன்னால்
புதுமைகள்     அறியணும்
காதல்      வந்தது   ---அது
உந்தன்    கண்களிலாடுது
மோகச்    சிலையடி    ---நீதான்
முக்தி      அளிப்பவள்
இரவில்     வருபவள்   ---நீ
இளமைக்குப்    பெரும்தீனி
உறவால்     மலர்ச்சியே  ---இனி
உயர்வேன்     வளர்ச்சியில்
வானின்     அமுதம்  நீ  ---என்றும்
வற்றாக்      குமுதம் நீ
தேனின்     சுவையும்    நீ  ---திகட்டா
திருக்குறள்    உரையும்   நீ


திங்கள், 26 ஆகஸ்ட், 2019

மோகினி 7 7 2

முன்னாலே          நடந்பாரம்மா தது          நியாயமா   ---என்
மோகினியே     நீ போடும்      வேசமா
பின்னாலே     அலையுறேனே    தெரியுமா    ---நானும்
பித்தாகிப்      போனதுவும்      புரியுமா

கண்ணாலம்     கட்டிக்கொள்ள      ஆசையா  ---என்
கண்ணாட்டி     உனக்குத்   தினம்    பூசையே
உண்ணாமல்     தவிக்கிறேனே   பாரம்மா    --நீயும்
உகந்த   பதில்    நல்லபடி     கூறம்மா

கண்ணாடி      போன்ற     எந்தன்     மனசிலே   ---நல்ல
கச்சிதமாய்ப்      பதிந்தது      உன்   உருவமே
பொன்னாலே    செய்து  வைத்த     வீட்டிலே   ---நல்ல
பொறுப்போடு    வாழ்ந்திடுவாய்    என்  கூட்டிலே

கண்ணாலே     என்னைக்    கொஞ்சம்   நீ  பாரம்மா   ---உன்னை
காலமெல்லாம்  வாழ  வைப்பேன்     கேளம்மா
சொன்னாலே     நம்பிவிடு     எந்தன்     தோழியே   ---உனது
தோளினில்       சாய  வேண்டும்    சில  நாழியே

தேனோடு        பாலாகும்     நமது     திருமணம்   ---அது
தினம்தோறும்     வீசிடுமே    புதிய  நறுமணம்
ஊனோடு      உயிராக    ஒன்று     கலக்கலாம்   ---நாமும்
ஒற்றுமையாய்ப்     பலகாலம்     உலகில்     வாழலாம் 

ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2019

ஆலயம் 7 7 1

நிலவு     வரும்    நேரத்திலே     நீந்திடலாமா   ---நீயும்
நானும்     ஒன்றாக     அங்கே    மகிழ்ந்திடலாமா
களவுமுறை   அத்தனையும்   நாம்  கற்றிடலாமா   --என்
கண்மணி    உந்தன்  மனதில்  நானும்  இடம்  பெறலாமா

வட்ட  நிலவை    உனக்காக    வளைக்கப்    போகிறேன்  ---என்
வடிவழகி      உன்னழகை     ரசிக்கப்     போகிறேன்
தொட்டு      உன்னை    நானும்     தூக்கப்    போகிறேன்   ---உன்
துடியிடையில்     நானுமின்று     துயிலப்   போகிறேன்

இதழில்   ஊறும்    கனிரசத்தை    ருசிக்கப்   போகிறேன்   ---உன்
இடை வளைத்து     புது விருந்து    படைக்கப்    போகிறேன்
குழலான    உனது  கூந்தல்      விரிக்கப்     போகிறேன்  --அதில்
கோடி மலர்கள்    தினம்     சொரிந்து    படுக்கப்   போகிறேன்

நடந்து    வரும்     நடையினிலே    பரத  நாட்டியம்    கண்டேன்   ---எனது
நாயகி    உன்னசைவில்     காதல்      மோகமும்    கொண்டேன்
கடக்கப்   போகும்     காலங்களை    கணக்கில்   கொள்ளுவேன்  ---எந்தன்
கற்பகமே     உன்னை யள்ளிச்    சுமக்கப்     போகிறேன்

வாழ்க்கையே    உன்னைச்     சுற்றி      வட்டம்   போடுது  ---நீ
வழங்கப்      போகும்    பரிசுகளை     வாங்கத்    துடிக்குது
ஆழ்மனதில்     உனக்கென   ஒரு    ஆலயம்     அமைப்பேன்   ---அதில்
அழகாக     உன்னை    வைத்துப்    பூசைகள்     செய்வேன் 

மானினம் 7 7 0

எந்நாளும்          நீவருக       என்னிடம்   ---என்
இதயமே       உள்ளது       உன்னிடம்
மின்னாமல்     வருகின்ற     மேகமே  --உன்மேல்
நான்      கொண்டேன்     புது  மோகமே

தண்ணீரில்      நீந்துவது      மீனினம்  ---என்
தையலின்       ஜாதியோ     மானினம்
கண்ணீரில்      ஆடுதம்மா    என்மனம்   ---நீ
கண்ணசைக்க      ஆகுமடி   நம் திருமணம்

பொன்னையே      பூவாக்கிப்    பூசை  செய்யவா   --உன்
பொங்கி   வரும்     அழகினிலே    மையல்    கொள்ளவா
தன்னாலே    சொன்னதால்    தள்ளி     விடாதே   ---என்
தங்கமே     உன்னை  நானும்     மறந்திட  மாட்டேன்

இனிதாக       புது வாழ்வு     நமக்காகுமே   ---நம்
இருவருக்கும்     புது வரவு    உருவாகுமே
கனிதாங்கும்   இடையோடு    படை  கொள்ளுவாய்  ---என்
கண்ணாட்டி  எனைவென்று   காதல்  சுகம்   ஊட்டுவாய்

நீரோடும்     அருவியிலே     நாமும்     நீந்திடலாமா  ---உன்
நெற்றியில்     குளிர் முத்தம்    நான்  தந்திடலாமா
பாரோர் கள்   முன்னிலையில்   நம்  பதிவுத்   திருமணம்   --நீயும்
பாசத்துடன்     இசைந்திடனும்    பருவப்     பைங்கிளி 

மின்னல் 7 6 9

அவன் -- கண்டாலே        நழுவுரியே     கண்ணம்மா   --என்
                  காதலைச்      சொல்கிறேன்    கேளம்மா
                  கண்ணாலம்    செய்துக்க     வாரியா    ---உன்
                 கட்டழகை     எனக்கள்ளித்     தாரியா               

அவள் --தண்டால்      எடுக்க   வேணும்    மைனரே   ---உன்னை
                 தாளிச்சுக்     கொட்டிடுவேன்     தைரியமா
                 பெண்டாள     நினைக்கிறியா     பேதையே   ---நீயும்
                 பிதற்றுவது    உனக்கேறும்       போதையே

அவன் --ஒழுங்காகக்     கேட்டாலே       சொல்லிடு   --இல்லை
                 உதை       வாங்க    முடியாமல்     ஓடிடு
                கிழங்காட்டம்    உன்னை   விடவும்    முடியுமா  ---நீயோ
               கிணத்தில்     உள்ள     தண்ணியின்னு    தெரியுமா

அவள் --ஊரு    சனம்      கூட்டி     வைப்பேன்   ---உனக்கு
                உதை       கொடுத்து      ஓட    செய்வேன்
              யாரு       கிட்டே    பேசறேன்னு    தெரியுமா  ---என்
              அப்பன்       சேதி     உனக்கேதும்   புரியுமா

அவன் --ஆசையோடு     கேட்டதுக்கு     கோவமா    ---என்
                அத்தை       மவ     நீதான்னு     தெரியுமே
               மீசை   வைச்ச      ஆம்பிள    நான்    புரியுதா   ---அடி
               மின்னல்     போல     வெட்டுறியே    விவரமா 

சனி, 24 ஆகஸ்ட், 2019

வாராய் 7 6 8

பொன்னில்          செய்த        பூவே    ---உன்னை
பூசை        செய்வேன்      நானே
கண்ணில்     நின்றாய்      அன்று    ---நாம்
காதல்          செய்தல்      நன்று

உன்னை       எண்ணி       வாழ்வேன்   ---நீ
உதறிப்       போனால்     வீழ்வேன்
பண்ணில்     ஸ்வரங்கள்     இனிமை    ---என்னை
பரிதவிக்க     விடுதல்      கொடுமை

வானில்        நிலவை       ரசிப்பேன்    ---உன்னை
வாரி        யணைத்து     ருசிப்பேன்
கானம்      காதில்      இசைப்பேன்   ---பொங்கும்
காதல்        கடலில்     மிதப்பேன்

அங்கம்      முழுதும்      தங்கம்   ---அதில்
அழகு      வழியும்     எங்கும்
திங்கள்     வானம்     சாட்சி    ---அடியே
தினமும்      உனது      ஆட்சி

அள்ளிக்      கொடுக்க     வாராய்   ---எனக்கு
ஆசை       முத்தம்   நீ      தாராய்
சொல்லிக்      கொடுப்பது     நீயல்லவா   ---அந்த
சொர்க்கம்      நீ  தரும்     வரமல்லவா 

காவல் 7 6 7

அவன்   ;  கண்ணாலே        பேசுறியே       கண்ணம்மா   --நாம
                    கண்ணாலம்     செஞ்சாலே      என்னம்மா
                    உன்மேல      ஆசை  வச்சேன்    நில்லம்மா   --எனக்கு
                    உசந்த      பதிலை     நீயுமினி     சொல்லம்மா


அவள்  ;  முண்டாசை        தலையில        கட்டி  ---நல்ல
                  முழுக்கையில்    சட்டையப்   போட்டு
                  கண்டவரை     வம்பிழுக்கும்     கண்ணையா  --உன்
                  கவனம்      என்மேல்       வந்தது    என்னய்யா

அவன் ;  பழுத்துக்      குலுங்கும்       பழத்தோட்டம்     ---நானும்
                  பறித்துத்       தின்பேன்     கிளியாட்டம்
                  அழுத்தமான     பொண்ணு நீயி   அன்னம்மா   ---நா
                  ஆசை       வச்சா      தப்பில்லே     பொன்னம்மா

அவள் ;  வக்கணையாப்     பேசி      வாரே    ---உனக்கு
                 வாய்த்    துடுக்கு      ரொம்ப     நீளம்
                 அக்கா     மகளா     நானுனக்கு    சின்னய்யா  --நீயும்
                அதட்டி    உருட்டி      மிரட்டிடாதே      கேணையா

அவன் ;கோவம்      வேண்டாம்      கன்னி  மானே   ---நான்
                கொட்டித்     தாறேன்     தங்கம்     தானே
               ஆவலுடன்     கேட்டதும்     தப்பு தான்    --நீ
               அன்பு    காட்டினா    எனக்கென்றும்    ஜாலி  தான்

இருவரும் ;; கண்ணும்   கண்ணும்   சேர    காதலாச்சு   --இது
                         கண்ணாலம்     வரையிலும்    நீண்டு  போச்சு
                        பொண்ணும்  ஆணும்     சேர்ந்து   போச்சு   ---நமக்கு
                         பெரியவங்க     இனிமேல்     காவலாச்சு  

சாரதி 7 6 6

ஆயர்   பாடிக்         கண்ணனே  ---தூய
அன்பு      கொண்ட     மன்னனே
வாயினில்     உலகினைக்    காட்டினாய்   ---உன்
வல்லமையால்     உயிர்களைக்     காக்கிறாய்

வெண்ணெய்     திருடித்      தின்றவா    ---தினம்
வேடிக்கை       நிறையச்     செய்தவா
அன்னை      யசோதை     மடியிலே  ---எங்கள்
அன்புக்       கண்ணனே     சிரிக்கிறாய்

காளிங்க      நர்த்தனம்      ஆடினாய்  ---கொடிய
கம்சனையும்    வதம்  செய்து     முடித்தனை
பாற் கடல்   தன்னில்     உறங்கினை    ---உன்
பக்கத்தில்    திருமகள்    இருந்தனள் --

பார்த்தனுக்கு      சாரதி      யாகினாய்   ---பெரும்
பாரதப்       போர்தனை      முடித்தனை
பார்த்திடும்     கண்களுக்கோ     எளியவன்   ---ஆனால்
பகைவரை      அழிப்பதில்       வலியவன்

கண்ணனின்    பேரைச்      சொல்லுவோம்   ---வரும்
கவலைகள்     எல்லாவையும்     வெல்லுவோம்
மன்னவன்       புகழினைப்        பாடுவோம்    --அவரை
மனதில்        நினைத்து       மகிழுவோம்

(23-08-2019   வெள்ளிக்  கிழமை     கோகுலாஷ்டமி      தினம் )



புதன், 21 ஆகஸ்ட், 2019

கன்னித் தமிழ் 7 6 5

தமிழராக        உலகில்         வாழுங்கள்   ---நம்
தாய்த்      தமிழில்      எங்கும்    பேசுங்கள்
அமுதமான      மொழி     நமதல்லவா   ---அதனை
அகிலமெங்கும்   பரவச்   செய்தல்   முறையல்லவா

முன்னாள் முதல்     முழங்கிவரும்     மொழியல்லவா   ---நம்
மூவேந்தர்       செய்து  வைத்த       வழியல்லவா
இந்நாளில்      வெறுத்து விடல்    நியாயமில்லையே   ---இங்கு
தமிழை      விட்டால்      உங்களுக்கு     கதியில்லையே

சிவனாரின்     திருமகனாம்   செந்தில்  வேலன்    ---அவர்
சீரிளமை    முயற்சியினால்    செழுமை     பெற்றது
அரணாக      காப்பதற்கு    அணியாகச்   சேருங்கள்   ---நம்
அன்னைத்    தமிழ்      வாழ்கவென   நீங்கள்   கூறுங்கள்

பேசப்      பேச     தமிழென்று ம்    இனிமையானது  ---மன
வேதனையை     தீர்க்க     என்றும்     மருந்தானது
சோதனைகள்     வந்த    போதும்    வென்று   நிலைத்தது   ---மதுரை
சோமசுந்தரர்    தலைமையிலே  தமிழ்  சங்கம்    கண்டது

உலக நூலாம்      திருக்குறளே      தமிழில்   உள்ளது   ---அதனை
உணர்ந்து     கொண்ட     உலகமே    வியந்து    போனது
கலக  எண்ணம்     கொண்டவர்கள்    காற்றில்    ஓடுவார்   ---நம்
கன்னித்    தமிழ்    வாழ்கவெனக்     களிப்பில்லாடுவோம் 

குலசாமி 7 6 4

பெண்ணாக       உலகில்      பிறப்பதற்கு   ---நீ
பெரும்       தவம்      செய்திட    வேண்டுமம்மா
மண்ணகம்     செழிப்புற      வாழ்வதற்கு  ---இங்கு
மங்கையர்      காரணம்    என்பதை    அறிவாயோ

அன்பு        வளர்ந்தது      யாராலே    ---நல்
அறிவு       செழித்தது      எவராலே
பண்பினை     பாலுடன்     ஊட்டுகிறார்   ---நம்
பாரதம்       சிறந்திட       வாழுகிறார்

கணவன்      முகமும்     கோணாமல்   --பிள்ளைகள்
கல்விச்       செல்வமும்      குறையாமல்
தன்னை யே     உருக்கிடும்     தியாகி யம்மா   ---அவள்
தணலில்       போட்டாலும்  தங்கமம்மா

வாழும்      முறைகளைச்      சொல்லி     வைத்து    ---நாம்
வல்லமை       பெற்றிட     உழைக்கின்றாள்
நாளும்      நமக்காய்      கண்   விழிப்பாள்   ---செய்த
நன்றியை      எந்நாளும்      நினைக்கின்றாள்

கும்பிடும்       தெய்வம்      கோவிலில்      இல்லை   ---என்றும்
கோதையர்     குலமே     நமது      குலசாமி  யம்மா
நம்பிய       பேர்களை    நன்கு     வாழவைப்பாள்   ---இந்திய
நாட்டையே      உலகினில்     சிறக்க     வைப்பாள்

இத்தனை      சிறப்புகள்     கொண்ட     பெண்ணை  ---நம்
இதயத்தில்    வைத்துப்      போற்றிட   வேண்டுமம்மா
புத்தன்       பிறந்த      நம்      திரு நாட்டில்   ---இனியேனும்
புதுமைப்         பெண்கள்     வாழ்ந்திட    வழி  விடுவோம்  

திங்கள், 19 ஆகஸ்ட், 2019

சிங்கங்களே 7 6 3

செந்தமிழ்     நாட்டுச்      சிறுவர்களே    ---இங்கு
சீறிப்        பாய்ந்திடும்     சிங்கங்களே
ஒன்றென    எங்கிலும்     கூடுவீர்   ---இந்தியா
உயர்க       வென்றே      பாடுவீர்
நாடு      என்பது      நம்    வீடு  ---அது
நலம்   பெற    வேண்டி     நீ பாடு
ஏடுகள்    சொல்வதும்     இதையே   ---எண்ணி
உழைத்திடில்    மாறிடும்     கதையே
காலையில்     சீக்கிரம்      எழுவாய்    ---பின்
கடமையாய்    பள்ளிக்குச்    செல்வாய்
மாலையில்     கொஞ்சம்     விளையாட்டு  ---இதை
மனசில்      வைக்கணும்     தலையாட்டு
சோம்பல்      என்பது    கூடாது    ---அது
சுகத்தை     அழிக்கும்     பொல்லாது
நாமிங்கு      ஒன்றாய்ப்    பாடுபட்டால்   --நம்
நாடு       உயர்ந்திடும்       அறிவாயோ
பெண்களைத்    தாயென    மதித்துவிடு   ---அவர்
பெருமையாய்     உலகினில்     வாழவிடு
கண்களைப்     போலப்      போற்றிவிடு   ---உனக்கு
கடமைகள்     இருப்பதைப்     புரிந்துவிடு
இந்தியனாக      என்றும்    வாழ்ந்துவிடு  ---உழைக்கும்
ஏழைக்கும்       முடிந்தால்     வாழ்வு கொடு
சுதந்திரம்       என்பதைக்     காத்துவிடு   ---உன்னை
சூழ்ந்திடும்      வெற்றிகள்     மகிழ்ந்துவிடு 

நிலா 7 6 2

நெஞ்சினில்       புகுந்தாள்     ---என்
நினைவினில்      கலந்தாள்
வஞ்சி       மகளிவள்     யாரோ    ---இவள்
மதனை    வெல்லவே    பிறந்தாளோ

புன்னகை      புரிவாள்  ---காதல்
புதுமலர்      சொரிவாள்
கன்னியிவள்    மனதில்   ---உள்ள
கள்வனும்       யாரோ

நீரெனக்        குளிர்வாள்    ---சுடு
நெருப்பென க்   கொதிப்பாள்
ஊரினில்    இவள் பெயர் என்ன   ---இதை
உணரணும்    இனிமேல்    மெல்ல

இரவினில்     வருவாள்    ---நல்
இன்பங்கள்    தருவாள்
உறவுக்கு     அவளே  எல்லை  ---இதனை
உணர்ந்திடில்   இல்லையே   தொல்லை

பாதியில்      தேய்வாள்    ---பின்பு
மீதியில்       வளர்வாள்
மேதினியில்     அவள்    பெயரென்ன    ---அட
மின்னிடும்     வானில்   வருகின்ற     நிலா 

ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2019

ரட்சகன் 7 6 1

கண்        உறங்கும்        நேரத்திலே    ---ஒரு
கன்னி மகள்        வந்தாள்
அன்னம்        போன்ற      நடை   ---அவளோ
ஆட்களைக்     கொல்லும்      படை

கண்களைக்     கட்டியே        விட்டாள்    ---அவள்
காதலை      நெஞ்சில்  கூட்டி    விட்டாள்
பெண்ணிவள்    செய்த      வேலை   ---என்னை
பேதலிக்க        விட்டதால்    தொல்லை

எட்டி       யிவள்      நடக்கையில்    ----இங்கு
இளையோர்    மனதும்    நொறுங்கிடுமே
கட்டியே       அணைக்க  வந்தால்   --அந்த
காமன்    இவளிடம்    மயங்கி    நிற்பான்

வில்லை     வளைத்து     அடித்திட   --என்
விலா       எலும்புகள்     உடைந்தனவே 
பல்லைக்    காட்டி     நின்றேன்   ---அவளோ
பரிதவிக்க     விட்டு     விட்டாள்

சொல்லி      நானும்      அழுதிடவே    ---எனக்கு
சொந்தம்      என்று      ஒன்றுமில்லை
கள்ள ச்      சிறையினிலே    கண்மூடி    வீழ்ந்தேனே   ---என்னை
காத்து      ரட்சிக்க    அந்தக்      கடவுளே     வரவேண்டும் 

கணபதி 7 6 0

அரசும்      வேலும்       அருகிருக்க   --அழகாய்
அமர்ந்த     திருமுகம்      யார்
வேலனின்    அண்ணன்   விமலனின்   மைந்தன்   --அவர்
தாளடி      பணிந்திடத்      தன்னருள்    மிகுமே

தாயைப்      போல      பெண்     பிள்ளை  --தனக்கு
வேண்டுமெனத்     தினமும்     தவம்    புரிவார்
வாயினைத்    திறந்து  எதுவும்    பேசாது   --எதிரில்
வருவாளா     என்றே   ஆசையுடன்    காத்திருப்பார்

மோனைப்       பொருளின்      மூலவராம்  --உலகில்
முழு  முதற்     கடவுள்    என்றும்    அவர்தானே
பானை      வயிற்றுத்     தொந்தி    யுடன்    --நமக்கு
பலன்கள்   நிறையவே     அள்ளித்     தந்திடுவார்

அப்பம்     பொரி     கடலை      அவலோடு    --அழகாய்
செய்து     வைத்த     இனிப்புக்     கொழுக் கட்டை
பக்தியுடன்     நாமும்     அவர்க்குப்    படைத்தாலே  ---அவர்
பரவசம்     கொண்டு      நல்வரம்     தருவார்

அன்னை      தந்தை     தான்      உலகமென   ---அன்று
அறிவுடன்     சுற்றி     வந்து     கனி  பெற்றார்
முன்னை       முதலுமாய்     என்றும்  இருப்பவராம்   ---அந்த
மூஷிக        கணபதியை ப்     போற்றி     வணங்கிடுவோம் 

சனி, 17 ஆகஸ்ட், 2019

காயம் 7 5 9

கண்ணில்        வந்தது        காதல்     ---என்னை
கண்டால்      உனக்கு       மோதல்
என்ன     செய்வேன்     மானே     ---நீ
இனிக்கும்     கொம்புத்    தேனே

இரவு       வந்தால்     ஏக்கம்  --என்
இமைகள்   இரண்டிலும்     வீக்கம்
உறவு      தேடும்     நோக்கம்    ---தினம்
உன்னால்     எனக்கு     தாக்கம்

காலை      மாலை      பூசை   ---உன்னை
கட்டி      யணைத்திட    ஆசை
வேலை    இதுவே      பெண்ணே  ---நீ
விரும்பி     வருவாய்    கண் ணே

பின்னல்     சடை      ஆடும்   ---இந்த
பேதை      மனம்     வாடும்
கன்னல்     மொழி      சொல்லு   ---என்
காதலைச்    சொல்லுவேன்     நில்லு

காதல்        என்றால்      மாயம்    ---இந்த
காளை       பட்டதோ    காயம்
வேதம்       சொல்லும்     நீதி  ---நீயே
வெற்றியைத்      தந்திடும்      ஜோதி 

புகலிடம் 7 5 8

காய்ந்து        போய்        நின்றேன்   ----அவள்
கனியாக     கண்  எதிரில்    வந்தாள்
பூங்குழல்     அழகி   பொன் நிற     செல்வி   ---இந்த
புவியினை    அழித்திட    புறப்பட்ட     புயலோ

பல்லினைக்     காட்டிட    பரவசம்      ஊறும்   ----அவள்
பாதங்கள்       கண்டால்      பனிமலை    உருகும்
சொல்லினில்     அடங்கா த    சொர்க்கம்    என்பேன்   ---இந்த
சுந்தரி     எனக்கு     நிறைவான    சுகம்    அருள்வாளா 

இருப்பதைக்     கேட்டிட     இல்லையே     என்றாள்  ---அதனால்
இருவிழி கள்    கண்ணீர்    எந்நாளும்       சொரியும்
விருப்பத்தை     அறிந்ததால்   வெஞ்சினம்    கொண்டாள்  ---என்னை
விரட்டுவதில்      ஏனோ      குறியாக       நின்றாள்

இளமையில்       காதல்      எல்லோர்க்கும்      கொடிது   ---அது
இல்லையேல்    மாந்தர்கள்      ஏங்கியே      போவார்
பழமையில்       கூட       பால்மணம்     உண்டு   ---இதனை
பார்த்து   அறிந்து      புரிந்து      பாவை    நீயும்     தெளிக

இருப்பதைக்       கொடுத்தால்    எடுத்ததை     தருவேன்   ---உன்
இதயத்தில்      ஓரிடம்      எனக்கெனத்     தருவாய் 
பொறுப்பினை     உணர்ந்து      புன்னகை     புரிவாய்  ---இந்த
பூமியில்      உன்னிடம்     நான்      புகலிடம்     பெறுவேன் 

வெள்ளி, 16 ஆகஸ்ட், 2019

பிரிய சகி 7 5 7

நிலவாக          அவள்        வந்ததா   ---இல்லை
அவள்       நினைவாலே      நான்     நொந்ததா
உலாவரும்    மெல்லிய    பூங்காற்றே    ---நீ
உண்மை      என்னவென்று     சொல்லு

குளிர்        நீரைப்      போலாவாள்   ---எனோ
கொதி     நீரினைப்     போலானாள்
தளிர்       போன்ற     பொன்னுடலை  ---நான்
தாவியே     அணைத்திட     வேண்டும்

இசைவாக     நடந்தாலே      இன்பம்  ---அதுவே
ஏதுக்கு        மாறானால்      எந்நாளும்    துன்பம்
வசை பாடி      தினமென்னை    வறுப்பாள்  ---இந்த
வழக்கிலே    வெற்றியை    நானென்று  காண்பேன்

திருநாளும்      எனக்காக      வேண்டும்   ---அந்த
தேவியின்     துணையாக     நானாக   வேண்டும்
பெருவாழ்வு     நானும்    வாழ்ந்திட    வேண்டும்   ---என்
பிரியசகி     உன்னுடன்     பேறு பல     வேண்டும்

காத்திட       வேண்டி      எங்கண்ணனை    அழைப்பேன்  ---அவர்
காலடி      வணங்கி     நல்வாழ்த்துக்கள்   பெறுவேன்
பூத்திடும்     வாழ்வுக்கு    புன்னகையே     சாட்சி   ---இந்த
பு வனம்      முழுவதும்      கண்ணனின்     ஆட்சி 

வியாழன், 15 ஆகஸ்ட், 2019

வரலாறு 7 5 6

இந்தியத்      திருநாடு    ----இது
நம்   இதயத்தின்     கூடு
நன்றியைப்       பாடு  ---அது
நலம்      தரும்     தேடு

அனைவரும்      நமது     சொந்தமே   ---நாம்
அண்ணன்     தம்பி    யெனும்    பந்தமே
முனைப்புடன்     ஒன்றாய்     செயலாற்ற    ----இங்கே
முடியாது       என்பதும்      கிடையாதே

மொழி வழி     நாமன்று    பிரிந்தாலும்   ---மன
உணர்வில்      நாமென்றும்   ஒன்றாவோம்
விழியென      நாட்டினைக்   காத்திடவே   ----இங்கு
வீட்டுக்கு      ஒருவரென     வரலாமே

சத்திய       நெறிவழி       நமதாகும்   ---என்றும்
சமத்துவம்      என்பது     உயிராகும்
புத்தன்        பிறந்த     திரு நாட்டில்   ---வீணே
போர்கள்       ஏற்பட      விடலாமா

ஒன்றென       நினைத்து     உயர்வாவோம்   ---தேச
ஒற்றுமையே     நமக்குள்     பலமாகும்
என்றும்        முதலிடம்      பெறலாமே    ---நாம்
இந்தியன்      என்பதே      வரலாறே 

        (    சுதந்திரத்    திருநாள்     சிறப்புப்    பாடல்   15-8-2019  )

புதன், 14 ஆகஸ்ட், 2019

சரித்திரம் 7 5 5

கண்ணில்        வந்தாய்         மானே    ---உன்
காதல்        என்றும்        தேனே
பின்னல்     போட்டு     வளைத்தாய்   ---என்னை
பேச விடாது     சிறையில்    வைத்தாய்

குற்றம்       என்ன       செய்தேன்    ---என்
கொஞ்சும்     கிளியே     சொல்லு
பற்று       வைப்பது     பாபமா   ---நல்ல
பதிலை     எனக்கு    சொல்லு    நீயம்மா

அழகை      அள்ளிக்      கொடுத்தானே   ---நீயும்
அதனால்      பிறரையும்   வதைக்கிறாயே
பழ க      வந்தாலோ      தண்டனை   ---அன்பு
பாசம்       காட்டினால்    நிந்தனை

இரக்கம்        என்பது      இல்லையே    ---உன்
இளமை       எவர்க்கும்     தொல்லையே
உறக்கம்      மறந்தவர்     நாங்களே   ---இதனை
உணர்ந்து      கொள்ளணும்     பெண்களே

காதல்         உலகினில்      வாழுமே   ---அது
கால        காலமாய்        நீளுமே
சாதல்      எனக்கு  மட்டும்      ஏனடி    ---புதிய
சரித்திரம்       படைப்போம்     நாமடி 

கள்ளன் 7 5 4

காற்றைப்         போல      வந்தாய்   ---இந்த
கன்னி       மலரைக்       கொய்தாய்
தோற்றுப்     போனேன்    நானே    ---உந்தன்
தோளில்       சாய்ந்தேன்   இனிதாய்

கலைகள்      யாவும்      கற்றோம்    ---தினம்
காதலை      நெஞ்சினில்     வளர்த்தோம்
விலைகள்    என்பது     இதற்கு      ஏது    ---என்றும்
விலகிச்       செல்லுதல்     தீது

ஒன்றில்       ஒன்று        என்றேன்    ---நீயோ
உடனே       மழலை      என்றாய்
அன்பு      தந்த       பாடம்    ---என்
அங்கம்      முழுதும்     பரவும்

நீரில்        நீந்தி      மகிழ்வோம்   ---அந்த
நிலவில்     இறங்கி     உலாவுவோம்
ஊர்கள்       தோறும்      போவோம்   ---ஒரு
உன்னத       நிலையை     அடைவோம்

கண்கள்        செய்த       மாயம்   ---என்
கள்ளன்       தந்த       காயம்
இன்னும்       என்ன     சொல்ல    ---நீ
இன்றே       வந்திடு    என்னை அள்ள 

பொன்மான் 7 5 3

கண்ணாலே            என்னை        வென்றாள்  --நான்
காணாமல்       எங்கோ       சென்றாள்
பொன்மானைத்     தேடுவேன்     இன்று   --அவள்
போன  இடம்     தெரிந்தா  லே      நன்று

சொல்லாமல் போயே     விட்டாள் --நானோ
சுரம்    தவறும்     தாளம்      ஆனேன்
எல்லாமே      விதியின்    செயலோ    ---இனி
விடியும்     காலம்    என்று     வருமோ

வழி யில்     தப்பிப்     போனாளோ   --இல்லை
திரும்பி     வரவேண்டாம்   என்றே    நினைவா
பழி சுமத்தல்    சரியோ     பெண்ணே  ---நல்ல
பதிலாக      வருவாய்     எந்தன்     முன்னே

ஊரார்கள்       எதிர்த்த      போதும்   ---என்
உறவின்       முறை    வெறுத்த   போதும்
வேறு இடம்    எனக்கேது     பெண்ணே   ---என்
எதிர்காலம்     உந்தன்     கையில்   கண்ணே

கண் காணா     இடங்கள்      போவோம்  --நாம்
காதல்        வானில்      ஒன்றாய்ப்    பறப்போம்
கண்ணோடு    இமையாய்      வாழ்வோம்   ---இனி
காதலின்      எல்லை        காண்போம் 

ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2019

குளிர்மழை 7 5 1

கண்ணாலே           காதல்         சொன்னாய்    ---என் 
கருத்தினில்       மாயம்        செய்தாய் 
பின்னாலே       அலைய     விட்டுப்   --பிறகு 
எங்கோ       ஒளிந்து      கொண்டாய் 

காற்றாக       நீயே     வந்தாய்    --எனோ 
கனலாக       மாறிப்     போனாய் 
நேற்று       நடந்த       வேலை   ---உனது 
நினைவுக்கும்      எனோ      வரவில்லையே 

ஊரெல்லாம்       தூதுகள்      விட்டேன்   ---அடியே 
உன்னாலே      நானும்      கெட்டேன் 
வேரோடு        சாய்த்து     விட்டாய்    ---என் 
விழிநீரில்      கப்பல்      விட்டாய் 

ஆற்றாது       அழுத         கண்ணீர்   ---இங்கு 
ஆறாக         ஓடுவது       ஏனடி 
பார்க்காதே      என்றே      போனாய்   ---இனி 
பாவி       நான்        எங்கு    போவேன் 

வாழ்வுக்கு     உன்னையன்றி     வழியேதும்   இல்லையடி  --நீ 
வந்தாலே       வசந்தமாய்      ஆகும்      பொழுது 
கேலிகள்      பேசி      கெடுத்திட   வேண்டாம்    பெண்ணே  ---உன் 
கோல      முகம்     காட்டி     குளிர்  மழை    பொழிவாய்   கண்ணே 

செல்லக் கண்ணு 7 5 0

அவன்   ---கதிரை        அறுக்க      வந்த      புள்ளே  ---வீணா
                    வெட்டிப்      பேச்சு      என்ன      புள்ளே
                     கதிரை      எடுத்துப்     போடுவியா    களத்திலே  ---உன்
                     கவனமெல்லாம்     போகுதம்மா    வெளியிலே

அவள் ----வேலையில்       கவனம்       உண்டு   ---நாங்க
                   வேணுமட்டும்      உனக்குத்     தொண்டு
                  ஆளைச்   சும்மா     விரட்டலாமா     ஐயாவே    ---நாங்க
                  அக்கறையா      வேலை    செய்வோம்     மெய்யாவே

அவன் ----ஜம்பப்       பேச்சில்    குறைச்சல்     இல்லை---இங்கு
                  அறுத்து      சாய்ஞ்ச    கதிரை   எடுக்கவில்லே
                  ஒம்பது        மணிக்கி     வேலைக்கு    வந்தியா  ---நீ
                 உள்ளூக்குள்ளெ    சிரிப்பதென்ன     கேலியா

அவள் ---வேணாம்      சாமி       ஆளை    விடு   ---நீ
                விரும்பினாக்க    எனக்கு     வேலை     கொடு
               மேனாமினிக்கி      நாங்களிலை    தெரியுமா   ---நீ
               மேலத்      தெருவில்     போயிக்   கேளு   புரியுமே

அவன் --களைப்பு      நீங்க     கடிச்சு     வச்சேன்     --உழைக்க
              காசு        பணம்     நிறையத்      தாறேன்
            வருத்தப்பட்டு      போயிடாதே  செல்லக்கண்ணு   ---இனி
           வாரிக்       குவிச்ச     நெல்லை      அள்ளு    நல்லக்   கண்ணு




நெஞ்சம் 7 4 9

கண்ணில்          உன்னைக்       காவல்     வைத்தேன்   ---உன்னை 
காலை       மாலை       பூசை        செய்தேன் 
என்னில்      பாதி      உனக்கே     என்றேன்    ---நீ 
எனோ       வெறுத்தாய்     இந்த நாளில் 

சொத்து       சுகம்       கேட்கவில்லை     ---நான் 
சொந்த      பந்தம்      பார்க்கவில்லை 
பித்தம்      உன்னால்     வந்ததம்மா    ---இந்த 
பேதை       மனம்       வாடுதம்மா 

நிலவு       வரும்   வேளை  தனிலே    ---என் 
நெஞ்சம்     வெம்பிப்     போகுதம்மா 
உலவி வரும்     காற்றைக்     கூட ---உனக்கு 
தூது      சொல்லி    அனுப்பட்டுமா 

கண்களில்      நீர்     அருவியாச்சு    ---உனது 
கடைக்கண்     தானே   எனது     மூச்சு 
பெண்களில்     நீயோ    தேவதை    ---எனோ 
பிரிவு       என்பது      சித்ர வதை 

மனம்        இருந்தால்      வந்து  விடு   ---இந்த 
மனிதனையு ம்       நன்கு     வாழவிடு 
பணம்   தானே      பெரிது     என்றால்   ---இனி 
பார்க்காதே     என்னை  நீ     மறந்துவிடு 

அழகி 7 4 8

கள்ளச்            சிரிப்பழகி    ----பெரிய
காசளவு        பொட்டழகி
மெல்ல நீ     வருகையில்    ---என்
மேனியே      சிலிர்க்குதடி

தாவணியில்     பார்க்கையிலே ---மனசு
தாவித்      தாவிக்     குதிக்குதடி
ஆவியோ       துடிக்குதடி    ----உன்மேல்
ஆசை     வச்சேன்    பெண்மயிலே

சித்திரை      பொறந்தாலே    ---நமக்கு
சிறப்பாகக்      கல்யாணம்
முத்திரைப்      பவுனிலே   ---உனக்கு
முன்னூறு       போட்டிடுவேன்

காஞ்சிவரம்       சென்று    ---உனக்கு
கச்சிதமாய்      வண்ணப்  பட்டு
வாங்கி      வரட்டுமாடி    ----ஒரு
வார்த்தைக     சொல்லேண்டி
ஏங்கியே       அழுகின்றேனே   ---இது
உனக்கு      கேக்கலியா
தூங்கி     பல    நாளாச்சு   ---அடி
சோறு  கூட    திங்கவில்லையே
கண்களைத்     திறந்து     ---நீயும்
கருணை மழை     பெய்யோணும்
புண்பட்ட       என்மனசுக்கு    ---நீ
புதையலாய்    வரவேணும்

பெருமாள் 7 4 7

என் ஜோட்டுப்        பொண்டுகளா    ---அட
இளம்         பருவ      மொட்டுகளா
பஞ்செனும்      கால்      எடுத்து    ----நீங்க
பக்குவமா      வரிசையா       ஆடுங்கடி

அய்யனார்      கோவில்      அருகே   ---நமக்கு
அமமைஞ்ச       பெரிய     பொட்டல்வெளி
பையவே      சேர்ந்து      பதமாக    ஆடுங்கடி  ---இன்று
பக்குவமா      ஆடி     நல்ல     பெயர்     வாங்குங்கடி

மாசம்      முழுதும்      மழைக     பொழியோனும்    ---இந்த
பாரெல்லாம்       செழிச்சு    நம்     பஞ்சம்    தீரோனும்
அழகாவே     அடியெடுத்து    அம்மனை    வணங்குங்கடி  --அவ
அன்பாலே      தானே     நாம  அனைவரும்    வாழோனும்

செந்நெல்      விளைஞ்சு     செங்கதிர்       சாயுமே   ---இளம்
கன்னியர்கள்    மனசு    வைச்சா     கல்லும்    கரையுமே
பொங்கல்      இட்டு     வைச்சு     பூசைக     செய்யோனும்   ---நீங்க
திங்கள்     இருக்கும்     திசை      நோக்கிப்     பாடுங்கடி

ஊருக்கே     படி யளக்கும்    உத்தமர்கள்     நாமல்லவோ   ---இந்த
உழவுத்     தொழிலை  விட     உசந்தது      உண்டோடி
பேரு     பெத்தவங்க     நாம   பெருமைகளைக்    காப்பவங்க    ---நம்ம
பெருமாளை     நினைச்சு      பிரியமாய்      ஆடுங்கடி 

வியாழன், 8 ஆகஸ்ட், 2019

வாழி 7 4 6

கண்ணான     கண்ணன்      வந்தார்   ---தன 
கரங்களால்       ஏந்திக்      கொண்டார் 
அந்நாளில்       அவர் தோளில்    ---தோழி 
சொல்ல         ஆனந்தம்      எந்நாளும்      வாழி 

பின்னாலே      இடையைத்      தொட்டார்  ---நான் 
பேதமை        எண்ணம்        விட்டேன் 
கண்ணாலே     கதைகள்     சொன்னார்   ---தோழி 
கண்ணாளன்     புகழ்       என்றும்     வாழி 

இரவோடு        உறவும்       தந்தார்   ---என்னையே 
அவர்க்கு       அன்பாய்த்    தந்தேன் 
மறவாமல்  இங்கு  வருவாரோ   தோழி  --என் 
மணவாளன்    பெயர்    என்றும்     வாழி 

முத்தான      முத்தம்      தந்தார்   ---நானோ 
முழுதாக       அவர்க்குத்    தந்தேன் 
அத்தான்      என்று    அழைக்கலாமா  --தோழி 
அன்பான     காதலர்    என்றும்     வாழி 

வாவென்று      அணைத்துக்    கொண்டார்  ---எனக்கு 
வற்றாத          இன்பம்       தந்தார் 
நானென்று      என்னை     ஆண்டார்   ---தோழி 
நாயகன்        புகழ்      என்றுமே      வாழி 

     


முத்தான      முத்தம்      தந்தார்   ---நானோ 
முழுதாக       என்னையே    தந்தேன் 
அத்தானென  

புதன், 7 ஆகஸ்ட், 2019

வேட்கை 7 4 5

சிலையைப்            போல         அழகு     ----நீ
சிரித்து          என்னிடம்       பழகு
கலைகள்      தவழும்       நெற்றி     ---உன்னை
கண்டதால்       எனக்கே     வெற்றி

தனியாய்        வந்தால்       வருவேன்    ---உனை
தழுவி        அணைக்க      நினைப்பேன்
மண நாள்    மேடையில்    தொடர்வேன்    ---புது
மஞ்சத்தில்      ஆசையில்    படர்வேன்
காணக்    கிடைக்காத    அமுதம்  ---எனது    
கண்களில்       பட்டதே       குமுதம்
தேனைப்       போலவே      இனிப்பு   ---உன்னை
தேடி        அலைவதால்     களைப்பு

இருவரும்      ஒருவர்       ஆவோம்   ---நாம்
இணைந்து     சுகமும்      காண்போம்
பருவம்       செய்கிற     பாடம்     ---நல்ல
பதிலைச்    சொல்லுங்க     போதும்

நாட்கள்      தோறும்     அலைந்தேன்   ---என்
நாயகி       எங்கே  நீ     தொலைந்தாய் 
வேட்கை    மீறுதே       எனக்கு    ---இனியும்
வேண்டாமே     உனக்கு      வீண் பிணக்கு 

செவ்வாய், 6 ஆகஸ்ட், 2019

முன்னேறு 7 4 4

நிலவில்          சந்திப்போம்      ---காதல்
நினைவை     சிந்திப்போம்
கலையில்       ஒன்றிப்போம்   ---நல்ல
கவிதை        என்றாவோம்

மலரில்    மணமாவோம்     ---பிற ர்
மகிழ்வே    குணமாவோம்
சீலம்       வழியாவோம்  ---பலர்
சிரமத்தில்    துணையாவோம்

உழைத்தால்      முன்னேற்றம்   --இதை
உணர்ந்தால்     நன்றாகும்
களைத்தால்       வாழ்வேது     ---கொண்ட
கடமையே         பெரிதாகும்

அள்ளிக்       கொடுக்கையிலே     ---நாமும்
அடைவோம்      ஆனந்தம்
பள்ளியில்      படித்தவற்றை   ---வாழ்வில்
பார்த்து         நடந்திடனும்

இளமை       நில்லாது    ---அது
இயற்கை     தரும்     சேதி
சொல்லில்      அடங்காது     ---நாம்
சுகம்பெற      முன்னேறு 

ராதே 7 4 3

மனமெச் னும்      கோவிலிலே     ராதே   --நான்
மகிழ்வுடன்    தினம்     பூசை   செய்வேன்
கனவிலும்      உன்னை     மறவேன்    ---ராதே
கண்மணி        நீயன்றோ    ராதே

கள்ள       சிரிப்பினிலே     ராதே    ---நீயெனை
கவர்ந்து     இழுத்து    வைத்தாயே
அள்ளி      அணைத்திடவோ      ஆசை  --ராதே
அருகினில்     வருவாயோ      ராதே

சின்னம்      சிறு      வயதில்    ---ராதே
சேர்ந்து      அலைந்து     திரிவோமே
எண்ணம்      வரவில்லையோ ராதே  ---இந்த
ஏழைக்கும்     அருள்     செய்ய    வா

மாடி    மனை      சொந்தமில்லை   --எனக்கு
மக்கள்      சொந்தம்     யாருமில்லை
தேடிஉன்னை      சரண்     அடைந்தேன்   ---ராதே
தெருவில்       விட்டுப்      போவாயோ   ராதே

கூட்டை        விட்டுப்       போனாலும்  --இங்கு
கோடி         காலம்       ஆனாலும்
உன்வீட்டை    சுற்றி   வருவேனே  ---ராதே
உன்னையே      மணப்பேன்    ராதே     

நல்ல பதில் 7 4 2

கண்        உறக்கம்       இல்லையடி   ---காதல்
வந்தால்     மிகவும்      தொல்லையடி
எந்தன்        மனம்      வெள்ளையடி   ---வீணே
ஏங்க        விடுதல்    நியாயமோடி

விடியும்       வரையில்     விழிப்பு   ---அதனால்
விரைந்து     வருகுது      களைப்பு
மடியில்      சாய்ந்த     நினைப்பு   ---எந்தன்
மன்னன்    மனதிலேன்    வெறுப்பு

அள்ளி      யள்ளிக்       கொடுத்தேனே   ---என்
அன்பை     வாரி      இறைத்தேனே
பள்ளிப்     பாடம்     மறந்தாரே    ---இந்த
பாவையை     எதற்கு     வெறுத்தாரோ

கண்ணாலே      காதல்      சொன்னேன்  --என்
கண்ணீரில்     கடிதம்     வரைந்தேன்
சொன்னாலும்    அவர்க்குப்   புரியவில்லை  --வந்த
சோகம்        இன்னும்      விலகவில்லை

தேம்பி       அழுகின்ற      மனதிற்கு   ----அவர்
தேறுதல்     சொல்லிட    வருவாரா
நம்பிக்கைத்தர     நாயகன்   வரவேண்டும்   ---வரும்
நாளிலே     நல்ல    பதில்    நானும்     பெறவேண்டும்  

திங்கள், 5 ஆகஸ்ட், 2019

வாலைக் குமரி 7 4 1

கண்ணில்       உன்னைக்      கண்டேன்    ---காதல்
நெஞ்சில்       இன்று      கொண்டேன்
மண்ணில்     வானம்      கண்டேன்   ---உனை
மணக்க          ஆசை      வைத்தேன்

எண்ண        என்ன       இன்பம்   ---அடி
ஏனோ       என்மேல்      கோபம்
கன்னி      மலரே      வாயேன்   ---எனக்கு 
காதல்       தேனைத்     தாயேன்

சொன்ன     விதமாய்     நடப்பேன்   ---தினம்
சுற்றி      சுற்றியே       கிடப்பேன்
கண்ணைப்      போல    நினைப்பேன்   ---உன்
கடைக்கண்     பார்வையில்    துடிப்பேன்

கால      காலங்கள்      காப்பேன்    ---உன்னை
காவல்      காத்து      மகிழ்வேன்
வாலைக்  குமரியும்      நீதான்   ---எனக்கு
வாழ்த்து       சொல்லேன்     இனிதான்

அன்பு        கொண்டு       வாழ்வோம்   ---பல
ஆசைக்      கனவுகள்        காண்போம்
பண்பில்      சிறந்து       உயர்வோம்   ---நாம்
பலருக்கும்      உதவிகள்     செய்வோம்   

நியாயம் 7 4 0

அவன் ---கண்ணாலம்       கட்டினாக்க கொண்டாட்டம்   தான்  --நீ
                   கைவிட்டுப்       போனாக்க     திண்டாட்டம்   தான்
                   சொன்னதைக்      கேக்கலியே     ஏனடி      ---எனக்கு
                   சொர்க்கத்தை     யள்ளித்   தரும்     தேனடி
அவள் --- பல்லைக்     காட்டி    பசப்புறியே     நியாயமா  --உன்
                   பவுசுகளைக்    கேட்டு    மயங்க   நானும்    மூடமா
                  கல்லை     யெடுத்தா     தாங்க   மாட்டே   போயிடு   -- உம
                  கவுரவத்தை      போக்கிடுவேன்     ஓடிப்போயிடு
அவன் --நாளும்     கிழமையும்     பாத்துப்புட்டேன்  --நான்
                 நாடி      ஜோசியம்    கூட     கேட்டுக்கிட்டேன்
                 ஆளைப்     பாத்தா     துரத்துறியே    கோவமா  ---உன்
                 அத்தை     மவன்    என்னிடமே    வீரமா
அவள் --சொந்தம்     என்பதை     தூக்கிப்     போடு   ---நீ
              சுதந்திரமா     வாழ      வழியைத்     தேடு
              பந்து      சனம்      கூட்டி   விட்டாப்    போதுமா  --உனக்கு
              பாய்     விரிக்க      நானும்      என்ன     கேனமா
அவன் --ஊரு  மெச்ச      உழைக்கப்     போறேன்  --உன்னோடு
               உடலும்     உயிரா      வாழப்    போறேன்
             பேரு       நல்லாத்      தேடிக்குவேன்     போதுமா ---நீ
            பெரிய      மனசு      செய்ய வேணும்    நியாயமா
இருவரும்  ---நிலைமையை      நாங்க      புரிஞ்சு கிட்டோம் --காதல்
                     நெனப்பில்    தானே       சண்டை     போட்டோம்
                    அழகாக       கல்யாணம்    செஞ்சுக்குவோம்   ---பின்பு
                    அளவோடு     பிள்ளைகளை   பெத்துக்குவோம்


ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2019

காவிரி 7 3 9

  அன்பினால்     உலகை    ஆள்வதற்கு   ---நம்
அன்னை       காவிரி      புறப்பட்டாள்
தென்னகம்     வாழ்வில்    சிறந்திடவே    ---இந்த
தெய்வ       மங்கை     வெளிப்பட்டாள்

குறுகி       வளைந்து     குதிக்கின்றாள்   ---சிறு
குமரி         போல்     சிரிக்கின்றாள்
அருவியாய்ப்     பொங்கி   வழிகின்றாள்   ---நாம்
அருகினில்     வந்திட     அழைக்கின்றாள்

மண்ணைப்        பொன்னாய்    மாற்றுகிறாள்    ---பெரும்
மகசூல்        அள்ளித்        தருகின்றாள்
கண்களைப்    போன்றவள்    காவிரியே   ---அவள்
கருணையில்     வாழ்வது      நம்குலமே

உழவர்       கண்களில்      தாயாவாள்   ---தமிழர்
உள்ளங்களில்     என்றும்     சேயாவாள்
புலவர்       பாடிடும்      பொருளாவாள்   ---இந்த
புவனம்       காக்கும்      அருளாவாள்

நதிகள்       எல்லாம்       பொது உடமை   ---அவளை
நன்றாய்ப்      புரிந்திடல்     நம்கடமை
சதிகள்       செய்வது      சரியில்லை    ---இதனை
சகலரும்      உணர்ந்தால்    பகையில்லை 

கரும்பு 7 3 8

அவன் --- சின்னாளப்  பட்டி     சேலையைக்     கட்டி  --நல்ல
                    சீதனமா     நிறைய    நகைகளைப்   பூட்டி
                    கண்ணாலம்    செய்திடவா    கண்ணம்மா   ---நீ
                    கச்சிதமா     நல்ல    பதிலைச்    சொல்லம்மா
அவள்  ----அரும்பு    மீசை     குறும்புக்காரா   ---உன்மேல்
                     ஆசை     வச்சேன்    நானும்    ரொம்ப    நாளா
                     கரும்பு     திங்கக்     கூலியெனக்கு   வேணுமா  ---உன்
                     காதலுக்கு     சம்மதம்    தான்     போதுமா
அவன்  ----சொன்ன     சேதி     எனக்கு     சொர்க்கம்   ஆச்சு  ---வந்த
                     சோக     மெல்லாம்     விலகிப்      போச்சு
                     இன்னும்      உனக்கு    ஏதேனும்     வேணுமா   ---என்னிடம்
                     இருக்கு       பணம்    சேர்த்து    வச்சேன்   ரொம்ப  காலமா
அவள்  ----சிக்கனமா      செலவு      செய்யி   ---நாம
                    செல்வம்         இன்னும்     சேக்க     வோணும்
                   அக்கறையா      பாடுபட்டா    அத்தானே   ---வீணா
                   அவஸ்தை     யெல்லாம்     வாராது    மச்சானே
அவன்  ---ஆவணியில்     கண்ணாலம்    செய்வோம்   --நமக்கு
                  அளவாகப்      பிள்ளை      வேணும்
                தாவணியில்     கண்டபோது     செல்லம்மா  --உன்னை
               தழுவிப்      பிடிக்க     ஆசை வச்சேன்    நல்லம்மா
அவள்  --வேலி      போட்டு       காவல்      செய்யி    --- நீ
                விடிய      விடிய       ஆட்டம்     போடு   -
                ஜாலியாகப்      பொழுது     போகும்    மச்சானே    ---நம்ம
                சரசக்        கதை       ரொம்ப      நீளம்      அத்தானே 




வள்ளல் 737

 கனிந்திடும்        அழகு      அவள்  கண்களில்    தெரிந்தது   --அவளை
கண்டதும்     எனக்குக்      காதல்      வந்தது
நினைந்திடும்     மனதிற்கு    நிம்மதி      தந்தாள்    ---அந்த
நேரிழை        என்னிடம்      போரிட    வந்தாள்

கணைகளை      எடுத்து     கவனமாய்      தொடுத்தால்   --அவளது
காமபாண மோ    எனது      கருத்தைப்      பறித்தது
சிலையென     நின்றதால்      சித்தமும்     போனது    ---அந்த
சீதள  முகத்திலே    சிருங்காரம்     மலர்ந்தது

வாவெனக்     கூப்பிட்டு      வளைத்தன      கரங்கள்    ---அந்த
வஞ்சியின்  உடலில்       எத்தனை      சுரங்கள்
தாவெனக்      கேட்டதால்     தந்தது      அமுதம்    ---நான்
தழுவி      அணைக்கையில்    தாங்குமோ    குமுதம்

பொன்னுலகப்      பாதை      புரிந்தது      அவளால்  ---எனக்கு
புதையலே      கடைத்தது     பூமகள்     வரவால்
கண்மணி      உறவால்     கவிஞனும்     ஆனேன்    ---அவளது
கட்டழகை      சுவைத்தால்     கசந்திடும்    தேனும்

வாழ்வினில்      கிடைத்த      வசந்தம்      என்பேன்  ---எனக்கு
வாரி       வழங்குவதால்    அவளை      வள்ளலாய்    ஏற்பேன்
ஏழு      பிறவிகளில்      எனக்கவள்      வேண்டும்     ---அவளுடன்
இன்பமாய்       வாழ்ந்து      சுகம்     பெற     வேண்டும்