வியாழன், 28 ஜூன், 2018

ஓம்சரவணபவ493

                                                   பல்லவி
நிம்மதி  யருளிட  நீயே  வருவாய்  முருகா --உன்னை
நினைத்தவர்  நிலைபெற   வரமதை  தருவாய்  (நிம்மதி )
                                                   அனுபல்லவி
உன்பதம்  தொழுதவர்  என்றும்  உன்னதம்  பெறலாம் --அவர்
உயர்ந்திட  நல்வழி  வாழ்வினில்  நித்தமும்  வரலாம்  (நிம்மதி )
                                                  சரணங்கள்
கனிந்திடும்  உன்னுள்ளம்  பொங்கும்  கடல்  அல்லவா --நீ
கதிர் காமம் தன்னில்  உறையும்   கந்த  வேள்  அல்லவா
பணிந்திடும்  எமதுள்ளம்  எங்கிலும்  நிறைந்திடும்  பரவசமே --தினம்
பக்தியில்  திளைத்திடும்  அடியார்  நற்பதங்களை  அடைவார்  (நிம்மதி )

துணையுடன்  வருவாய்  எங்கள்  தோழனே  வேலா --உனை
துதித்தவர்  வரும்  வினைதனை   வென்றவர்  அன்றோ
இணை  சொல்ல  முடியாத  ஏழையர்  தலைவா --நாங்கள்
இகபர  சுகம்பெற   இன்றே  இன்னருள்  புரிவாய் (நிம்மதி )

மழை தினம்  பெய்திட  இந்த  மண்ணகம்   மணக்கும் --நீங்கள்
மனதினில்  சற்றே  நினைத்தால்  எங்களகம்  குளிரும்
பிழைகளை  மறந்து  எம்மேல்  பேரருள்  புரிவாய் --எம்
பெம்மான்  ஆறுமுகன்  அந்தப்  பித்தனின்  மகனே   (நிம்மதி )

சரவண பவ   என்றிட  வந்த  சங்கடம்   விலகும் --உமது
சந்நிதி  வந்திட  எமக்கு  சகலமும்  செழிக்கும்
உறவென  சொல்லிட  இங்கே  உள்ளவன்  முருகன் --உலகினில்
உத்தமன்  சத்தியன்  நம்  உமை   பெற்ற   அருள்  சீலனே  (நிம்மதி )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக