பல்லவி
நிம்மதி யருளிட நீயே வருவாய் முருகா --உன்னை
நினைத்தவர் நிலைபெற வரமதை தருவாய் (நிம்மதி )
அனுபல்லவி
உன்பதம் தொழுதவர் என்றும் உன்னதம் பெறலாம் --அவர்
உயர்ந்திட நல்வழி வாழ்வினில் நித்தமும் வரலாம் (நிம்மதி )
சரணங்கள்
கனிந்திடும் உன்னுள்ளம் பொங்கும் கடல் அல்லவா --நீ
கதிர் காமம் தன்னில் உறையும் கந்த வேள் அல்லவா
பணிந்திடும் எமதுள்ளம் எங்கிலும் நிறைந்திடும் பரவசமே --தினம்
பக்தியில் திளைத்திடும் அடியார் நற்பதங்களை அடைவார் (நிம்மதி )
துணையுடன் வருவாய் எங்கள் தோழனே வேலா --உனை
துதித்தவர் வரும் வினைதனை வென்றவர் அன்றோ
இணை சொல்ல முடியாத ஏழையர் தலைவா --நாங்கள்
இகபர சுகம்பெற இன்றே இன்னருள் புரிவாய் (நிம்மதி )
மழை தினம் பெய்திட இந்த மண்ணகம் மணக்கும் --நீங்கள்
மனதினில் சற்றே நினைத்தால் எங்களகம் குளிரும்
பிழைகளை மறந்து எம்மேல் பேரருள் புரிவாய் --எம்
பெம்மான் ஆறுமுகன் அந்தப் பித்தனின் மகனே (நிம்மதி )
சரவண பவ என்றிட வந்த சங்கடம் விலகும் --உமது
சந்நிதி வந்திட எமக்கு சகலமும் செழிக்கும்
உறவென சொல்லிட இங்கே உள்ளவன் முருகன் --உலகினில்
உத்தமன் சத்தியன் நம் உமை பெற்ற அருள் சீலனே (நிம்மதி )
நிம்மதி யருளிட நீயே வருவாய் முருகா --உன்னை
நினைத்தவர் நிலைபெற வரமதை தருவாய் (நிம்மதி )
அனுபல்லவி
உன்பதம் தொழுதவர் என்றும் உன்னதம் பெறலாம் --அவர்
உயர்ந்திட நல்வழி வாழ்வினில் நித்தமும் வரலாம் (நிம்மதி )
சரணங்கள்
கனிந்திடும் உன்னுள்ளம் பொங்கும் கடல் அல்லவா --நீ
கதிர் காமம் தன்னில் உறையும் கந்த வேள் அல்லவா
பணிந்திடும் எமதுள்ளம் எங்கிலும் நிறைந்திடும் பரவசமே --தினம்
பக்தியில் திளைத்திடும் அடியார் நற்பதங்களை அடைவார் (நிம்மதி )
துணையுடன் வருவாய் எங்கள் தோழனே வேலா --உனை
துதித்தவர் வரும் வினைதனை வென்றவர் அன்றோ
இணை சொல்ல முடியாத ஏழையர் தலைவா --நாங்கள்
இகபர சுகம்பெற இன்றே இன்னருள் புரிவாய் (நிம்மதி )
மழை தினம் பெய்திட இந்த மண்ணகம் மணக்கும் --நீங்கள்
மனதினில் சற்றே நினைத்தால் எங்களகம் குளிரும்
பிழைகளை மறந்து எம்மேல் பேரருள் புரிவாய் --எம்
பெம்மான் ஆறுமுகன் அந்தப் பித்தனின் மகனே (நிம்மதி )
சரவண பவ என்றிட வந்த சங்கடம் விலகும் --உமது
சந்நிதி வந்திட எமக்கு சகலமும் செழிக்கும்
உறவென சொல்லிட இங்கே உள்ளவன் முருகன் --உலகினில்
உத்தமன் சத்தியன் நம் உமை பெற்ற அருள் சீலனே (நிம்மதி )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக