திங்கள், 18 ஜூன், 2018

தேவன் 481

 கண்ணாலே  வந்த  காதல்  கைகூடுமா --என்
கண்ணாளன்  கணவனாக  நன்னாள்  வருமா
உண்ணாமல்  உறங்காமல்  உயிர்  வாழ்கிறேன் --நான்
உன்னையன்றி  வேறு  யாரை  இங்கினி  நம்புவேன்

மலரோடு  சேர்ந்த  மணம்    ஆகினோம் --திரு
மணத்தாலே  புதுவாழ்வு  நாம்  வாழுவோம்
நினைத்தாலே  என்நெஞ்சம்  நிறைவாகுமே --என்
நேசன்  நீ  வந்தால்  நிம்மதி  உருவாகுமே

கரை காணா   எல்லை  நம்  காதல்  ஆகுமே --வந்த
கவலைகள்  ஒருநாள்  எங்கோ  பறந்தோடுமே
நிறைவான  பேரின்பம்   நீ   தந்தது --உன்னை
நினைத்தாலே  எனதுள்ளம்  துள்ளி  யாடுது

ஒன்றாக  இணைந்து  புது உலகம்  உருவாக்குவோம் --அதில்
உண்மை  அன்பு  நெறிகளை  வழியாக்குவோம்
நன்றி  என்ற  சொல்லே  நமக்கு  மந்திரம் --இங்கு
நானும்  நீயும்   என்றுமே   கதா பாத்திரம்

நம் காதலின்  சான்று   நாளை  வரலாம் --அதனை
நல்லபடி  வளர்த்தால்  நன்மை  பெறலாம்
தெம்பாக  உழைத்தால்  நம் தேசம்  உயரலாம் --அந்த
தேவனவன்   நினைத்தால்  தான்   தினம்  மகிழலாம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக