கண்ணாலே வந்த காதல் கைகூடுமா --என்
கண்ணாளன் கணவனாக நன்னாள் வருமா
உண்ணாமல் உறங்காமல் உயிர் வாழ்கிறேன் --நான்
உன்னையன்றி வேறு யாரை இங்கினி நம்புவேன்
மலரோடு சேர்ந்த மணம் ஆகினோம் --திரு
மணத்தாலே புதுவாழ்வு நாம் வாழுவோம்
நினைத்தாலே என்நெஞ்சம் நிறைவாகுமே --என்
நேசன் நீ வந்தால் நிம்மதி உருவாகுமே
கரை காணா எல்லை நம் காதல் ஆகுமே --வந்த
கவலைகள் ஒருநாள் எங்கோ பறந்தோடுமே
நிறைவான பேரின்பம் நீ தந்தது --உன்னை
நினைத்தாலே எனதுள்ளம் துள்ளி யாடுது
ஒன்றாக இணைந்து புது உலகம் உருவாக்குவோம் --அதில்
உண்மை அன்பு நெறிகளை வழியாக்குவோம்
நன்றி என்ற சொல்லே நமக்கு மந்திரம் --இங்கு
நானும் நீயும் என்றுமே கதா பாத்திரம்
நம் காதலின் சான்று நாளை வரலாம் --அதனை
நல்லபடி வளர்த்தால் நன்மை பெறலாம்
தெம்பாக உழைத்தால் நம் தேசம் உயரலாம் --அந்த
தேவனவன் நினைத்தால் தான் தினம் மகிழலாம்
கண்ணாளன் கணவனாக நன்னாள் வருமா
உண்ணாமல் உறங்காமல் உயிர் வாழ்கிறேன் --நான்
உன்னையன்றி வேறு யாரை இங்கினி நம்புவேன்
மலரோடு சேர்ந்த மணம் ஆகினோம் --திரு
மணத்தாலே புதுவாழ்வு நாம் வாழுவோம்
நினைத்தாலே என்நெஞ்சம் நிறைவாகுமே --என்
நேசன் நீ வந்தால் நிம்மதி உருவாகுமே
கரை காணா எல்லை நம் காதல் ஆகுமே --வந்த
கவலைகள் ஒருநாள் எங்கோ பறந்தோடுமே
நிறைவான பேரின்பம் நீ தந்தது --உன்னை
நினைத்தாலே எனதுள்ளம் துள்ளி யாடுது
ஒன்றாக இணைந்து புது உலகம் உருவாக்குவோம் --அதில்
உண்மை அன்பு நெறிகளை வழியாக்குவோம்
நன்றி என்ற சொல்லே நமக்கு மந்திரம் --இங்கு
நானும் நீயும் என்றுமே கதா பாத்திரம்
நம் காதலின் சான்று நாளை வரலாம் --அதனை
நல்லபடி வளர்த்தால் நன்மை பெறலாம்
தெம்பாக உழைத்தால் நம் தேசம் உயரலாம் --அந்த
தேவனவன் நினைத்தால் தான் தினம் மகிழலாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக