வானில் உலவிடும் வளர்மதியே --உன்னை
வாரியே அணைத்திட நிம்மதியே
பாவில் மலர்ந்திடும் பனிமலரே --நான்
பறித்து மகிழ்ந்திட சம்மதியே (ன் )
காதல் எக்காலமும் வாழுமே --நல்ல
கவிதைகள் நெஞ்சினை ஆளுமே
பேதம் மறைந்து போகுமே --ஒரு
புதுமை உலகம் தோன்றுமே
இல்லை என்றிடும் சொல்லையே --இனி
இல்லை இல்லையென மாற்றுவோம்
வெள்ளை மனதுடன் வாழுவோம் --நாம்
வெற்றிகள் பலவும் காணுவோம்
கலைகள் பொங்கிப் பெருகுமே --வரும்
கவலைகள் தீர்ந்து போகுமே
விலைகள் நாட்டில் குறையுமே --மண்ணில்
விவசாயம் செழித்து வளருமே
இறைவன் கருணையைப் பொழியலாம் --நம்
இந்தியா சிறந்து விளங்கலாம்
குறைகள் உலகினில் மறையலாம் --உலகில்
கோடி இன்பங்கள் நிறையலாம்
வாரியே அணைத்திட நிம்மதியே
பாவில் மலர்ந்திடும் பனிமலரே --நான்
பறித்து மகிழ்ந்திட சம்மதியே (ன் )
காதல் எக்காலமும் வாழுமே --நல்ல
கவிதைகள் நெஞ்சினை ஆளுமே
பேதம் மறைந்து போகுமே --ஒரு
புதுமை உலகம் தோன்றுமே
இல்லை என்றிடும் சொல்லையே --இனி
இல்லை இல்லையென மாற்றுவோம்
வெள்ளை மனதுடன் வாழுவோம் --நாம்
வெற்றிகள் பலவும் காணுவோம்
கலைகள் பொங்கிப் பெருகுமே --வரும்
கவலைகள் தீர்ந்து போகுமே
விலைகள் நாட்டில் குறையுமே --மண்ணில்
விவசாயம் செழித்து வளருமே
இறைவன் கருணையைப் பொழியலாம் --நம்
இந்தியா சிறந்து விளங்கலாம்
குறைகள் உலகினில் மறையலாம் --உலகில்
கோடி இன்பங்கள் நிறையலாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக