வெள்ளி, 22 ஜூன், 2018

மூகாம்பிகை 487

                                     பல்லவி
உலகாளும்  உமையே  உயர்  கயிலை  வாசி --உம்
அருளை ப்  பெறவே  தினம்  உருகுகினோம்  அம்மா  (உலகாளும் )
                                     அனுபல்லவி
நிலம்  காக்க  வந்துமே  எங்கள்  நெஞ்சிலே  நின்றாய் --என்றும்
நினைத்தவர்  தமக்கே வாழ்வினில்  நிம்மதி  யருள்வாய்  (உலகாளும் )
                                      சரணங்கள்
கலங்கிடும்  மாந்தரைக்  காப்பதுவும்  நீயே --பிறர்க்கு
கற்பக விருட்சமாய்  கனிந்திடும்  தாயே
விளங்கிடும்  வாழ்விற்கு   விடி வெள்ளி  அன்றோ --நீ
வேதாந்த  ஞானமே   விமலனின்  துணையே    (உலகாளும் )

ஆனைமுகன்  வேலவன்  அழகிய  தாயே --இங்கு
அன்பர்கள்  உன்பாதம்  அடைக்கலம்  அம்மா
ஞானங்களை  வழங்கிடும்  நாயகி  அன்றோ --உம்மை
நம்பினோர்  நலிந்ததாக  நாட்டினில்  உண்டோ    (உலகாளும் )

நால் வகை  வேதங்கள்  நடுவிலே  இருப்பாய் --மண்ணில்
நவ ராத்திரி  கொலுவினில்  நாயகியாய்த்  தெரிவாய்
நூல்களும்  போற்றிடும்  நுண்  பொருள்  கலையே --நின்னை
தொழுதவர்  சுகம்பெற   நீயருள்  புரிகுவாய்       (உலகாளும் )

சக்தியின்  வடிவம்   சங்கரித்   தாயே  --அன்று
சமரினில்  வென்றவள்  சாயுக்தம்  அருள்வாய்
முத்தியை  யருளிடும்  மூகாம்பிகைத்  தாயே  --நாங்கள்
முழுவதும்  நம்பினோம்  மோட்சமும்  அருள்வாய்   (உலகாளும் )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக