பல்லவி
உலகாளும் உமையே உயர் கயிலை வாசி --உம்
அருளை ப் பெறவே தினம் உருகுகினோம் அம்மா (உலகாளும் )
அனுபல்லவி
நிலம் காக்க வந்துமே எங்கள் நெஞ்சிலே நின்றாய் --என்றும்
நினைத்தவர் தமக்கே வாழ்வினில் நிம்மதி யருள்வாய் (உலகாளும் )
சரணங்கள்
கலங்கிடும் மாந்தரைக் காப்பதுவும் நீயே --பிறர்க்கு
கற்பக விருட்சமாய் கனிந்திடும் தாயே
விளங்கிடும் வாழ்விற்கு விடி வெள்ளி அன்றோ --நீ
வேதாந்த ஞானமே விமலனின் துணையே (உலகாளும் )
ஆனைமுகன் வேலவன் அழகிய தாயே --இங்கு
அன்பர்கள் உன்பாதம் அடைக்கலம் அம்மா
ஞானங்களை வழங்கிடும் நாயகி அன்றோ --உம்மை
நம்பினோர் நலிந்ததாக நாட்டினில் உண்டோ (உலகாளும் )
நால் வகை வேதங்கள் நடுவிலே இருப்பாய் --மண்ணில்
நவ ராத்திரி கொலுவினில் நாயகியாய்த் தெரிவாய்
நூல்களும் போற்றிடும் நுண் பொருள் கலையே --நின்னை
தொழுதவர் சுகம்பெற நீயருள் புரிகுவாய் (உலகாளும் )
சக்தியின் வடிவம் சங்கரித் தாயே --அன்று
சமரினில் வென்றவள் சாயுக்தம் அருள்வாய்
முத்தியை யருளிடும் மூகாம்பிகைத் தாயே --நாங்கள்
முழுவதும் நம்பினோம் மோட்சமும் அருள்வாய் (உலகாளும் )
உலகாளும் உமையே உயர் கயிலை வாசி --உம்
அருளை ப் பெறவே தினம் உருகுகினோம் அம்மா (உலகாளும் )
அனுபல்லவி
நிலம் காக்க வந்துமே எங்கள் நெஞ்சிலே நின்றாய் --என்றும்
நினைத்தவர் தமக்கே வாழ்வினில் நிம்மதி யருள்வாய் (உலகாளும் )
சரணங்கள்
கலங்கிடும் மாந்தரைக் காப்பதுவும் நீயே --பிறர்க்கு
கற்பக விருட்சமாய் கனிந்திடும் தாயே
விளங்கிடும் வாழ்விற்கு விடி வெள்ளி அன்றோ --நீ
வேதாந்த ஞானமே விமலனின் துணையே (உலகாளும் )
ஆனைமுகன் வேலவன் அழகிய தாயே --இங்கு
அன்பர்கள் உன்பாதம் அடைக்கலம் அம்மா
ஞானங்களை வழங்கிடும் நாயகி அன்றோ --உம்மை
நம்பினோர் நலிந்ததாக நாட்டினில் உண்டோ (உலகாளும் )
நால் வகை வேதங்கள் நடுவிலே இருப்பாய் --மண்ணில்
நவ ராத்திரி கொலுவினில் நாயகியாய்த் தெரிவாய்
நூல்களும் போற்றிடும் நுண் பொருள் கலையே --நின்னை
தொழுதவர் சுகம்பெற நீயருள் புரிகுவாய் (உலகாளும் )
சக்தியின் வடிவம் சங்கரித் தாயே --அன்று
சமரினில் வென்றவள் சாயுக்தம் அருள்வாய்
முத்தியை யருளிடும் மூகாம்பிகைத் தாயே --நாங்கள்
முழுவதும் நம்பினோம் மோட்சமும் அருள்வாய் (உலகாளும் )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக