நிலவும் எனக்கு நிம்மதி தருமா --என்னை
நினைந்தே அருகினில் நீயும் வா வா
கலையும் கனவாய் என் காதலும் போகுமோ --என்
காதலி செல்வமே கொஞ்சம் கருணை புரிவாய்
கண்ணீர் மழையில் என் காதலை வைத்தாய் --உன்
பின்னால் அலைந்தது பெரும் பிழை தானோ
கண்ணே மணியே எந்தன் கலைமாமணியே --நான்
உன்னையே நினைத்தேன் உயிரினில் கலந்தேன்
எல்லாம் தெரிந்தும் எங்கு நீ போனாய் -எனது
ஏக்கம் தாபம் இன்னும் உனக்கில்லையோ
பொல்லா உலகம் புரட்டுகள் பேசும் --உனது
பூரித்த இளமையோ எனக்குப் போதையை தந்திடும்
தனியாய் இருந்தால் தணலாய்த் தகிப்பாய் --உன்னை
தாவியே அணைத்தால் தாகமும் தணியும்
கனியும் இதழால் என்னைக் கடித்து தின்பாய் --நான்
கண்களை மூடினால் கனவினில் வருவாய்
காலங்கள் போயினும் நம் காதல் வாழும் -நாம்
கலந்து இருந்திட பல கவிதைகள் பிறக்கும்
நாளும் கோளும் நன்மையே செய்யும் --இள
நங்கை உறவால் எனது நாட்களும் நீளும்
மண்ணில் காதல் மரமாய் வளரும் --சாதி
மயக்கம் எல்லாம் சருகாய் உதிரும்
கண்ணில் உதிப்பது காதல் என்பேன் --இதனை
கருத்தில் கொண்டால் வந்த காரிருள் விலகும்
நினைந்தே அருகினில் நீயும் வா வா
கலையும் கனவாய் என் காதலும் போகுமோ --என்
காதலி செல்வமே கொஞ்சம் கருணை புரிவாய்
கண்ணீர் மழையில் என் காதலை வைத்தாய் --உன்
பின்னால் அலைந்தது பெரும் பிழை தானோ
கண்ணே மணியே எந்தன் கலைமாமணியே --நான்
உன்னையே நினைத்தேன் உயிரினில் கலந்தேன்
எல்லாம் தெரிந்தும் எங்கு நீ போனாய் -எனது
ஏக்கம் தாபம் இன்னும் உனக்கில்லையோ
பொல்லா உலகம் புரட்டுகள் பேசும் --உனது
பூரித்த இளமையோ எனக்குப் போதையை தந்திடும்
தனியாய் இருந்தால் தணலாய்த் தகிப்பாய் --உன்னை
தாவியே அணைத்தால் தாகமும் தணியும்
கனியும் இதழால் என்னைக் கடித்து தின்பாய் --நான்
கண்களை மூடினால் கனவினில் வருவாய்
காலங்கள் போயினும் நம் காதல் வாழும் -நாம்
கலந்து இருந்திட பல கவிதைகள் பிறக்கும்
நாளும் கோளும் நன்மையே செய்யும் --இள
நங்கை உறவால் எனது நாட்களும் நீளும்
மண்ணில் காதல் மரமாய் வளரும் --சாதி
மயக்கம் எல்லாம் சருகாய் உதிரும்
கண்ணில் உதிப்பது காதல் என்பேன் --இதனை
கருத்தில் கொண்டால் வந்த காரிருள் விலகும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக