புதன், 6 ஜூன், 2018

என் காதலி 471

நிலவும்  எனக்கு  நிம்மதி  தருமா --என்னை
நினைந்தே  அருகினில்  நீயும்   வா   வா
கலையும்  கனவாய்  என்  காதலும்  போகுமோ --என்
காதலி  செல்வமே  கொஞ்சம்  கருணை புரிவாய்

கண்ணீர்  மழையில்  என் காதலை  வைத்தாய் --உன்
பின்னால்  அலைந்தது  பெரும்  பிழை  தானோ
கண்ணே  மணியே  எந்தன்  கலைமாமணியே --நான்
உன்னையே  நினைத்தேன்  உயிரினில் கலந்தேன்

எல்லாம்  தெரிந்தும்  எங்கு நீ   போனாய் -எனது
ஏக்கம்  தாபம்  இன்னும்  உனக்கில்லையோ
பொல்லா  உலகம்  புரட்டுகள்  பேசும் --உனது
பூரித்த  இளமையோ   எனக்குப்  போதையை  தந்திடும்

தனியாய்  இருந்தால்  தணலாய்த்  தகிப்பாய் --உன்னை
தாவியே  அணைத்தால்  தாகமும்  தணியும்
கனியும்  இதழால்   என்னைக்  கடித்து  தின்பாய் --நான்
கண்களை  மூடினால்  கனவினில்  வருவாய்

காலங்கள்  போயினும்  நம் காதல்  வாழும் -நாம்
கலந்து   இருந்திட  பல கவிதைகள்  பிறக்கும்
நாளும்  கோளும்  நன்மையே  செய்யும் --இள
நங்கை  உறவால்  எனது  நாட்களும்  நீளும்

மண்ணில்  காதல்  மரமாய்  வளரும் --சாதி
மயக்கம்  எல்லாம்  சருகாய்  உதிரும்
கண்ணில்  உதிப்பது  காதல்  என்பேன் --இதனை
கருத்தில்  கொண்டால்  வந்த  காரிருள்  விலகும்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக