ஊரை யடிச்சுமே வுலையிலே போடுறான் --நல்ல
உத்தமன் போலவே வெளிவேஷம் செய்கிறான்
பேரைக் கெடுத்துமே பல பேதங்கள் மூட்டுறான் --எனோ
பித்தனாக மாறியே நர்த்தனம் ஆடுறான்
காசுகள் சேர்த்திட பலர் கழுத்தை அறுக்கிறான் --தினம்
கஞ்சனாக மாறியே வஞ்சனைகள் புரிகிறான்
மாசில்லாத மக்களை ஏசவும் செய்கிறான் --தன்னை
மன்னனாக எண்ணியே தன்னிலை மறக்கிறான்
கற்பென்னும் பொருளினை கடை சரக்காய் நினைக்கிறான் --நல்ல
காவலை மறந்து மன ஆவலுக்குள் போகிறான்
கற்பனையில் கோட்டை கட்டி கர்வமாகப் பேசுறான் --காசு
தினம் சேர்ப்பதற்கு பலர் காலிலே விழுகிறான்
நன்றாகப் பேசுறான் நரியாக மாறுறான் --அவனை
நம்பினோர் வாழ்விலே நயவஞ்சகம் புரிகிறான்
கன்றையும் தாயையும் கச்சிதமாய்ப் பிரிக்கிறான் --அந்த
கடவுளையும் மறந்து கள்வனாய் திருடுறான்
நாட்டினை மறந்து இங்கு நாடகம் போடுறான் --செய்த
நன்றிதனை மறந்து நஞ்சாக மாறுறான்
தேட்டையை போட்டு தினமும் வாழ்கிறான் -இந்த
திருடர்கள் திருந்திட தேவனே நீ வழி காட்டு
உத்தமன் போலவே வெளிவேஷம் செய்கிறான்
பேரைக் கெடுத்துமே பல பேதங்கள் மூட்டுறான் --எனோ
பித்தனாக மாறியே நர்த்தனம் ஆடுறான்
காசுகள் சேர்த்திட பலர் கழுத்தை அறுக்கிறான் --தினம்
கஞ்சனாக மாறியே வஞ்சனைகள் புரிகிறான்
மாசில்லாத மக்களை ஏசவும் செய்கிறான் --தன்னை
மன்னனாக எண்ணியே தன்னிலை மறக்கிறான்
கற்பென்னும் பொருளினை கடை சரக்காய் நினைக்கிறான் --நல்ல
காவலை மறந்து மன ஆவலுக்குள் போகிறான்
கற்பனையில் கோட்டை கட்டி கர்வமாகப் பேசுறான் --காசு
தினம் சேர்ப்பதற்கு பலர் காலிலே விழுகிறான்
நன்றாகப் பேசுறான் நரியாக மாறுறான் --அவனை
நம்பினோர் வாழ்விலே நயவஞ்சகம் புரிகிறான்
கன்றையும் தாயையும் கச்சிதமாய்ப் பிரிக்கிறான் --அந்த
கடவுளையும் மறந்து கள்வனாய் திருடுறான்
நாட்டினை மறந்து இங்கு நாடகம் போடுறான் --செய்த
நன்றிதனை மறந்து நஞ்சாக மாறுறான்
தேட்டையை போட்டு தினமும் வாழ்கிறான் -இந்த
திருடர்கள் திருந்திட தேவனே நீ வழி காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக