ஞாயிறு, 3 ஜூன், 2018

தேவனே 466

 ஊரை  யடிச்சுமே  வுலையிலே  போடுறான் --நல்ல
உத்தமன்  போலவே  வெளிவேஷம்  செய்கிறான்
பேரைக்  கெடுத்துமே  பல  பேதங்கள்  மூட்டுறான் --எனோ
பித்தனாக  மாறியே   நர்த்தனம்  ஆடுறான்

காசுகள்   சேர்த்திட  பலர்  கழுத்தை  அறுக்கிறான் --தினம்
கஞ்சனாக  மாறியே  வஞ்சனைகள்  புரிகிறான்
மாசில்லாத  மக்களை  ஏசவும்   செய்கிறான்  --தன்னை
மன்னனாக  எண்ணியே   தன்னிலை  மறக்கிறான்

கற்பென்னும்  பொருளினை  கடை சரக்காய்  நினைக்கிறான் --நல்ல
காவலை  மறந்து  மன ஆவலுக்குள்  போகிறான்
கற்பனையில்  கோட்டை  கட்டி  கர்வமாகப்  பேசுறான் --காசு
தினம்  சேர்ப்பதற்கு   பலர்  காலிலே  விழுகிறான்

நன்றாகப்  பேசுறான்   நரியாக   மாறுறான் --அவனை
நம்பினோர்  வாழ்விலே  நயவஞ்சகம்  புரிகிறான்
கன்றையும்  தாயையும்  கச்சிதமாய்ப்  பிரிக்கிறான் --அந்த
கடவுளையும்  மறந்து   கள்வனாய்  திருடுறான்

நாட்டினை  மறந்து   இங்கு  நாடகம்  போடுறான் --செய்த
நன்றிதனை  மறந்து  நஞ்சாக  மாறுறான்
தேட்டையை  போட்டு   தினமும்  வாழ்கிறான் -இந்த
திருடர்கள்  திருந்திட  தேவனே நீ   வழி காட்டு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக