கலைந்தோடும் மேகங்கள் கதை சொல்லுமா --என்
கண்ணாளன் இடம் சென்று நலம் கேட்குமா
அலைந்தாடும் மனதில் அவர் ஆட்சியே --அன்பரை
அடைந்தாலோ என்வாழ்வில் துயர் மீட்சியே
நினைவாலே அவரையே தினம் காணுவேன் --அந்த
இன்பத்தை நினைத்தே நலம் பேணுவேன்
கனவெல்லாம் நனவாக காலம் தரலாம் --என்
காதலன் கரம் பற்ற நல்ல வேளை வரலாம்
மூடாத விழிகளில் என் மோகம் தெரியும் --என்
முன்னாலே அவர் வந்தால் முகம் நிலவாகுமே
தேடாத வழியில்லை இங்கே தினம்தோறுமே --நீயும்
தரிசனம் தந்தால் தான் என்மனம் ஆறுமே
பெண்ணாகப் பிறந்து எனோ பேதை ஆகினேன் --அவர்
பின்னாலே சென்றதால் பெரும் பிழை தாங்கினேன்
எந்நாளும் வருகவென நான் பாடுவேன் --எனது
இமைகள் மூடும்வரை அவரை நித்தம் தேடுவேன்
இளமானைத் தேடியே அவரும் வரவேண்டுமே --என்னோடு
இணைகின்ற சுகவாழ்வு நான் பெற வேண்டுமே
களவினில் கலந்து விட்டேன் அந்தக் கள்வனிடமே --அவரை
கண்டதும் துயர் தீரும் காதல் சுவை கூடுமே
கண்ணாளன் இடம் சென்று நலம் கேட்குமா
அலைந்தாடும் மனதில் அவர் ஆட்சியே --அன்பரை
அடைந்தாலோ என்வாழ்வில் துயர் மீட்சியே
நினைவாலே அவரையே தினம் காணுவேன் --அந்த
இன்பத்தை நினைத்தே நலம் பேணுவேன்
கனவெல்லாம் நனவாக காலம் தரலாம் --என்
காதலன் கரம் பற்ற நல்ல வேளை வரலாம்
மூடாத விழிகளில் என் மோகம் தெரியும் --என்
முன்னாலே அவர் வந்தால் முகம் நிலவாகுமே
தேடாத வழியில்லை இங்கே தினம்தோறுமே --நீயும்
தரிசனம் தந்தால் தான் என்மனம் ஆறுமே
பெண்ணாகப் பிறந்து எனோ பேதை ஆகினேன் --அவர்
பின்னாலே சென்றதால் பெரும் பிழை தாங்கினேன்
எந்நாளும் வருகவென நான் பாடுவேன் --எனது
இமைகள் மூடும்வரை அவரை நித்தம் தேடுவேன்
இளமானைத் தேடியே அவரும் வரவேண்டுமே --என்னோடு
இணைகின்ற சுகவாழ்வு நான் பெற வேண்டுமே
களவினில் கலந்து விட்டேன் அந்தக் கள்வனிடமே --அவரை
கண்டதும் துயர் தீரும் காதல் சுவை கூடுமே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக