விண்ணிலோடும் வெண்ணிலவிற்கு விழிகள் தெரியுமா --அது
விரைந்து எங்கோ போவதாலே வழிகள் புரியுமா
பெண்ணிலாடும் மனதின் ஆழம் புரிய முடியுமா --வீணே
வேலையின்றி சுற்றுவதால் யாருக்கு லாபமோ
கண்கள் தொட்டதால் களிப்பில் மிதந்தேன் --அதில்
காதலென்ற பயிரினை நன்றாய் வளர்த்தேன்
எண்ணமதைச் சொல்லிடவே நானும் பயந்தேன் --நீ
இருப்பதற்கு வேண்டுமென என்னிதயம் திறந்தேன்
நாளும் நான் உன்னைத் தினமும் தொடர்ந்தேன் --நடு
இரவில் புது உறவில் நலமாய்ப் படர்ந்தேன்
வேளை வந்தது என்றுதானே நினைத்தேன் --எனோ
சிலர் விரித்து வைத்த வலையினில் விழுந்து விட்டேன்
உன்னை விட்டு வெகு தூரம் எங்கோ பறந்தேன் --இனிய
உறவினை எதனாலோ நானும் மறந்தேன்
பொன்னினைப் புழுதியில் தூக்கி எறிந்தேன் --அன்று
புத்தி கெட்டுப் போனதாலே புலம்பித் தவித்தேன்
காதல் கொண்ட மனமோ கலக்கம் கொண்டது --உனது
கட்டழகை மனதில் நினைத்து கதறி யழுகுது
கோதையே என்னைக் காக்க உனக்கு பிரியமில்லையோ --அன்று
பிரிந்தவர்கள் ஒன்று சேர நல்ல வழியும் இல்லையா
விரைந்து எங்கோ போவதாலே வழிகள் புரியுமா
பெண்ணிலாடும் மனதின் ஆழம் புரிய முடியுமா --வீணே
வேலையின்றி சுற்றுவதால் யாருக்கு லாபமோ
கண்கள் தொட்டதால் களிப்பில் மிதந்தேன் --அதில்
காதலென்ற பயிரினை நன்றாய் வளர்த்தேன்
எண்ணமதைச் சொல்லிடவே நானும் பயந்தேன் --நீ
இருப்பதற்கு வேண்டுமென என்னிதயம் திறந்தேன்
நாளும் நான் உன்னைத் தினமும் தொடர்ந்தேன் --நடு
இரவில் புது உறவில் நலமாய்ப் படர்ந்தேன்
வேளை வந்தது என்றுதானே நினைத்தேன் --எனோ
சிலர் விரித்து வைத்த வலையினில் விழுந்து விட்டேன்
உன்னை விட்டு வெகு தூரம் எங்கோ பறந்தேன் --இனிய
உறவினை எதனாலோ நானும் மறந்தேன்
பொன்னினைப் புழுதியில் தூக்கி எறிந்தேன் --அன்று
புத்தி கெட்டுப் போனதாலே புலம்பித் தவித்தேன்
காதல் கொண்ட மனமோ கலக்கம் கொண்டது --உனது
கட்டழகை மனதில் நினைத்து கதறி யழுகுது
கோதையே என்னைக் காக்க உனக்கு பிரியமில்லையோ --அன்று
பிரிந்தவர்கள் ஒன்று சேர நல்ல வழியும் இல்லையா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக