திங்கள், 18 ஜூன், 2018

இன்பம் 478

நிலவில்  ஆடித் திரிந்தேன் --அந்த 
நீல  வானில்  மிதந்தேன் 
கனவில்  இதனைக்  கணடேன் --எனோ 
காதல்  வலையில்  விழுந்தேன் 

இழுத்து  என்னையும்  அணைத்தாய் --என் 
இதழ்களில் முத்தங்கள்  பதித்தாய் 
பழுத்த  பழமாய்  நினைத்தாய் --என்னை 
பகலும்  இரவுமாய்  புசித்தாய் 

இருப்பை  எடுத்துக்  கொடுத்தாய் --எனது 
இதயத்தில்  இடமும்  கொடுத்தேன் 
கருப்பை  வளர்ந்திடும்  காலம் --எனக்கு 
காமன்  தந்தது  இக்கோலம் 

என்ன  சொல்லி  நான்  அழுவேன் --உன்னை 
இறைவனாய்  எண்ணித்  தொழுவேன் 
கண்ணில்  கருணையைக்  காட்டு --என்னிடம் 
காதல்  வீணையை  நீ  மீட்டு 

பெண்ணாகப்  பிறந்தது  பாபம --எடுத்த 
பிறவி  மேலும்  கோபம் 
எண்ணியே  இளைத்து  மெலிந்தேன்  --உனக்கே 
இதயக்  கதவுகள்  திறந்தேன் 

தேடியே  வந்திடு   என் செல்வமே --நினைத்து 
தேம்பி  அழுவது  என் உள்ளமே 
நாடியே  வருவாய்  நண்பனே --அந்த 
நாளும்   எனக்கு    நல்லின்பமே 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக