நிலவில் ஆடித் திரிந்தேன் --அந்த
நீல வானில் மிதந்தேன்
கனவில் இதனைக் கணடேன் --எனோ
காதல் வலையில் விழுந்தேன்
இழுத்து என்னையும் அணைத்தாய் --என்
இதழ்களில் முத்தங்கள் பதித்தாய்
பழுத்த பழமாய் நினைத்தாய் --என்னை
பகலும் இரவுமாய் புசித்தாய்
இருப்பை எடுத்துக் கொடுத்தாய் --எனது
இதயத்தில் இடமும் கொடுத்தேன்
கருப்பை வளர்ந்திடும் காலம் --எனக்கு
காமன் தந்தது இக்கோலம்
என்ன சொல்லி நான் அழுவேன் --உன்னை
இறைவனாய் எண்ணித் தொழுவேன்
கண்ணில் கருணையைக் காட்டு --என்னிடம்
காதல் வீணையை நீ மீட்டு
பெண்ணாகப் பிறந்தது பாபம --எடுத்த
பிறவி மேலும் கோபம்
எண்ணியே இளைத்து மெலிந்தேன் --உனக்கே
இதயக் கதவுகள் திறந்தேன்
தேடியே வந்திடு என் செல்வமே --நினைத்து
தேம்பி அழுவது என் உள்ளமே
நாடியே வருவாய் நண்பனே --அந்த
நாளும் எனக்கு நல்லின்பமே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக