செவ்வாய், 5 ஜூன், 2018

செங்கமலம் 470

 கணை  வீசிக்  கொல்ல  காரிகை  வந்தாள் --அவள்
காதலில்  விழுந்தேன்  கவலையில்  மிதந்தேன்
அணையாத  ஜோதி  எனக்கு  அழகான  தோழி --என்றும்
இணைகின்ற  நாளும்  இனிமேல்  வருமோ

சிரித்தாலே    முத்து  வந்திட்ட  சீதனச்  சொத்து  --அவளது
செந்நிறக்  கைகள்  செங்காந்தள்  மலர்கள்
விரிக்கின்ற  தோகை  விண்ணோரை  அழைக்கும் --நான்
விரும்பியே  வந்தும்   எனோ  விலகியே  போனாள்

மலைபோல  செல்வம்   மகிழ்வான  இல்லம் --இள
மானின்  மையலில்  இந்த  மாமனும்  தருவான்
கலையாத  நிலவே   கண்கவர்  அழகே  --உறவில்
கலந்திட  நினைக்கையில்  கனியெங்கே  போனாய்

தேடியும்  அலைந்தேன்  தெருவினில்  திரிந்தேன் --அவள்
தேராக  வந்தாள்    தரிசனம்  தந்தாள்
விடிகின்ற   வரையில்  வானில்  விண்மீன்கள்  சிரிக்கும் --என்
வேதனை   போக்கவே  இன்றே  விரைந்தோடி  வருவாய்

இருக்கின்ற  வரையில்  என்வாழ்வு  அவள் தான் --தினம்
இழித்தாலும்  பழித்தாலும்  எனக்கவள்  தேன்  தான் 
சிறப்பான  வாழ்வினை   என்செல்வமே  தருவாள்  --என்
சிந்தையை  கவர்ந்த  அந்த  செங்கமலம்  வருவாள்





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக