பல்லவி
நிலையான செல்வம் நீங்காத கல்வி இவை--எமக்கு
அடைந்திட வேண்டி நீயும் அருள்வாயே அம்மா (நிலை )
அனுபல்லவி
கலை மேவும் எழிலே எங்கள் கற்பகச் செல்வி --நீ
கண்ணாலே பார்த்தாலே காலங்கள் இனிக்கும் (நிலை )
சரணங்கள்
வறுமைகள் இல்லாத நல் வளமையைக் கொடுப்பாய் --இங்கு
வாரியே வழங்கினால் இந்த வையகம் செழிக்கும்
திறமையினால் அன்றோ செல்வங்கள் சேரும் --எங்கள்
தேவியவள் நினைத்திடில் மண்ணில் தேனாறு பாயும் (நிலை )
தாய்க்குலம் உயர்ந்திட தரணியை ஆள்வாய் --வீண்
தருக்கரை எல்லாம் சமரினில் வென்றாய்
வாய் விட்டுச் சொல்ல தமிழில் வார்த்தைகள் எது --எம்
வல்லமைத் தாயே வந்தே அருள் செய்வாயே (நிலை )
உலகாளும் உமையே உன்பாதம் பணிவோம் --தினம்
உழைப்பதின் மூலமே உன்னருள் பெறுவோம்
வளமான சுகவாழ்வு வரமாகத் தருவாய் --உன்னை
வணங்கினோர் வாழ்வுயர நல்ல உரமாக நிற்பாய் (நிலை )
திருவே உன்திருப்பெயர் தேசமெங்கும் ஒலிக்கும் --வரும்
தீமைகள் எல்லாம் உன்னால் திசை மாறி யோடும்
உறுதுணையாக வந்தே இங்குள்ள உயிர்களைக் காப்பாய் --மக்கள்
உள்ளங்கள் கோவிலாக நாளும் ஓம்சக்தி அமர்வாய் (நிலை)
நிலையான செல்வம் நீங்காத கல்வி இவை--எமக்கு
அடைந்திட வேண்டி நீயும் அருள்வாயே அம்மா (நிலை )
அனுபல்லவி
கலை மேவும் எழிலே எங்கள் கற்பகச் செல்வி --நீ
கண்ணாலே பார்த்தாலே காலங்கள் இனிக்கும் (நிலை )
சரணங்கள்
வறுமைகள் இல்லாத நல் வளமையைக் கொடுப்பாய் --இங்கு
வாரியே வழங்கினால் இந்த வையகம் செழிக்கும்
திறமையினால் அன்றோ செல்வங்கள் சேரும் --எங்கள்
தேவியவள் நினைத்திடில் மண்ணில் தேனாறு பாயும் (நிலை )
தாய்க்குலம் உயர்ந்திட தரணியை ஆள்வாய் --வீண்
தருக்கரை எல்லாம் சமரினில் வென்றாய்
வாய் விட்டுச் சொல்ல தமிழில் வார்த்தைகள் எது --எம்
வல்லமைத் தாயே வந்தே அருள் செய்வாயே (நிலை )
உலகாளும் உமையே உன்பாதம் பணிவோம் --தினம்
உழைப்பதின் மூலமே உன்னருள் பெறுவோம்
வளமான சுகவாழ்வு வரமாகத் தருவாய் --உன்னை
வணங்கினோர் வாழ்வுயர நல்ல உரமாக நிற்பாய் (நிலை )
திருவே உன்திருப்பெயர் தேசமெங்கும் ஒலிக்கும் --வரும்
தீமைகள் எல்லாம் உன்னால் திசை மாறி யோடும்
உறுதுணையாக வந்தே இங்குள்ள உயிர்களைக் காப்பாய் --மக்கள்
உள்ளங்கள் கோவிலாக நாளும் ஓம்சக்தி அமர்வாய் (நிலை)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக