செவ்வாய், 26 ஜூன், 2018

ஓம்சக்தி 491

                                        பல்லவி
நிலையான  செல்வம்   நீங்காத  கல்வி  இவை--எமக்கு
அடைந்திட  வேண்டி  நீயும்  அருள்வாயே  அம்மா   (நிலை )
                                        அனுபல்லவி
கலை  மேவும்  எழிலே  எங்கள்  கற்பகச்  செல்வி  --நீ
கண்ணாலே  பார்த்தாலே  காலங்கள்  இனிக்கும்  (நிலை )
                                        சரணங்கள்
வறுமைகள் இல்லாத  நல்  வளமையைக்  கொடுப்பாய் --இங்கு
வாரியே  வழங்கினால்  இந்த  வையகம்  செழிக்கும்
திறமையினால்  அன்றோ  செல்வங்கள்  சேரும் --எங்கள்
தேவியவள்  நினைத்திடில்  மண்ணில்  தேனாறு   பாயும்  (நிலை )

தாய்க்குலம்  உயர்ந்திட  தரணியை  ஆள்வாய் --வீண்
தருக்கரை  எல்லாம்  சமரினில்   வென்றாய்
வாய்  விட்டுச்  சொல்ல  தமிழில்  வார்த்தைகள்  எது --எம்
வல்லமைத்  தாயே   வந்தே  அருள்  செய்வாயே  (நிலை )

உலகாளும்  உமையே  உன்பாதம்  பணிவோம் --தினம்
உழைப்பதின்  மூலமே   உன்னருள்   பெறுவோம்
வளமான  சுகவாழ்வு   வரமாகத்  தருவாய் --உன்னை
வணங்கினோர்  வாழ்வுயர   நல்ல  உரமாக  நிற்பாய்  (நிலை )

திருவே  உன்திருப்பெயர்  தேசமெங்கும்  ஒலிக்கும் --வரும்
தீமைகள்   எல்லாம்  உன்னால்  திசை மாறி  யோடும்
உறுதுணையாக  வந்தே இங்குள்ள  உயிர்களைக்  காப்பாய் --மக்கள்
உள்ளங்கள்   கோவிலாக    நாளும்  ஓம்சக்தி  அமர்வாய்  (நிலை)





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக