என்னருந்தேவி இயல் இசை வாணி --உன்
கரம் பற்றிட உவகை கொண்டேன்
தென்னவன் மகளே தீதிலா நிலவே --நீயும்
என்னிலே பாதியே இல்லற ஜோதியே
கன்னம் சுவையே கரு நாவற் பழமே --தினம்
எண்ணி இளைத்தேன் இதயம் துடித்தேன்
பின்னல் சடையினில் பேதமை கொண்டேன் --உன்னை
என்று மணப்பேன் இனிமை பெறுவேன்
நீராய் வடித்தேன் காதல் நெருப்பால் தகித்தேன் --கண்ணில்
பாராது துடித்தேன் பனியாய்க் கரைந்தேன்
கூரெனும் விழிகளால் என்னை கொள்ளை யடித்தாய் --எனோ
இதுவும் சரியா உனக்கு இதயமே இல்லையா
சிரித்து சிரித்துமே எந்தன் ஜீவனைக் கொன்றாய் --நான்
சிக்கித் தவிக்கையில் சினமுடன் சென்றாய்
எரிக்குமே நிலவு உன்னால் இரவினில் தொல்லை --நாம்
இணைவது என்பது இனிமேல் இல்லையோ
வாசலில் நின்றே உனது வருகை காண்பேன் --நம்
வண்டமிழ் மொழியினில் வாழ்த்துகள் படிப்பேன்
நேசம் நினைத்து இங்கே நீயும் வர வேண்டும் --எந்தன்
நெஞ்சினில் வைத்து உன்னை நித்தமும் ரசிப்பேன்
கரம் பற்றிட உவகை கொண்டேன்
தென்னவன் மகளே தீதிலா நிலவே --நீயும்
என்னிலே பாதியே இல்லற ஜோதியே
கன்னம் சுவையே கரு நாவற் பழமே --தினம்
எண்ணி இளைத்தேன் இதயம் துடித்தேன்
பின்னல் சடையினில் பேதமை கொண்டேன் --உன்னை
என்று மணப்பேன் இனிமை பெறுவேன்
நீராய் வடித்தேன் காதல் நெருப்பால் தகித்தேன் --கண்ணில்
பாராது துடித்தேன் பனியாய்க் கரைந்தேன்
கூரெனும் விழிகளால் என்னை கொள்ளை யடித்தாய் --எனோ
இதுவும் சரியா உனக்கு இதயமே இல்லையா
சிரித்து சிரித்துமே எந்தன் ஜீவனைக் கொன்றாய் --நான்
சிக்கித் தவிக்கையில் சினமுடன் சென்றாய்
எரிக்குமே நிலவு உன்னால் இரவினில் தொல்லை --நாம்
இணைவது என்பது இனிமேல் இல்லையோ
வாசலில் நின்றே உனது வருகை காண்பேன் --நம்
வண்டமிழ் மொழியினில் வாழ்த்துகள் படிப்பேன்
நேசம் நினைத்து இங்கே நீயும் வர வேண்டும் --எந்தன்
நெஞ்சினில் வைத்து உன்னை நித்தமும் ரசிப்பேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக