பல்லவி
வரம் தரு முருகனை அந்த வள்ளி மணாளனை --மனதில்
நினைந்திடில் அவனே நம்மிடம் நேரில் வருவான் (வரம் )
அனுபல்லவி
பதம் தரும் சுகம் தரும் பக்தியால் சிறக்கும் --அவன்
பக்தர்கள் பாடல் பாரெங்கும் ஒலிக்கும் (வரம் )
சரணங்கள்
மயிலினில் ஏறியோன் நம் மனக்குறை தீர்ப்பான் --நல்
மனைகளில் செல்வங்கள் மலையாய்க் குவிப்பான்
பயமினி ஏது அவனடி போற்றிடும் போது --அந்த
பரமனின் மகனே நற்பதங்களும் அருள்வான் (வரம் )
வேலினை யெடுத்தவன் வெற்றிகள் தருவான் --நாம்
வேண்டினால் அவனும் சந்தனமாய் மணப்பான்
பாலினைத் தோற்றிடும் பாங்கான உள்ளம் --அவனை
பணிந்தவர் தனக்குப் பாயுமவன் அருள்வெள்ளம் (வரம் )
அருணகிரி வணங்கும் அம்பிகை மைந்தன் --நம்
அல்லல்கள் போக்கிடும் ஆறுமுகச் செல்வன்
வறியவர் செழிப்பினில் வாழ்ந்திட வைப்பான் --அந்த
வள்ளலை நினைத்து நம் வாழ்வில் முன்னேறுவோம் (வரம் )
திருமுருகன் நாமம் திக்கெல்லாம் கேட்கும் --வரும்
தீவினைகள் யாவும் திரும்பியே ஓடும்
திருப்புகழ் பாடுவோம் தினமும் நாம் அன்போடு --அந்த
திருமால் மருகன் நமைத் தேடியே வருவான் (வரம் )
வரம் தரு முருகனை அந்த வள்ளி மணாளனை --மனதில்
நினைந்திடில் அவனே நம்மிடம் நேரில் வருவான் (வரம் )
அனுபல்லவி
பதம் தரும் சுகம் தரும் பக்தியால் சிறக்கும் --அவன்
பக்தர்கள் பாடல் பாரெங்கும் ஒலிக்கும் (வரம் )
சரணங்கள்
மயிலினில் ஏறியோன் நம் மனக்குறை தீர்ப்பான் --நல்
மனைகளில் செல்வங்கள் மலையாய்க் குவிப்பான்
பயமினி ஏது அவனடி போற்றிடும் போது --அந்த
பரமனின் மகனே நற்பதங்களும் அருள்வான் (வரம் )
வேலினை யெடுத்தவன் வெற்றிகள் தருவான் --நாம்
வேண்டினால் அவனும் சந்தனமாய் மணப்பான்
பாலினைத் தோற்றிடும் பாங்கான உள்ளம் --அவனை
பணிந்தவர் தனக்குப் பாயுமவன் அருள்வெள்ளம் (வரம் )
அருணகிரி வணங்கும் அம்பிகை மைந்தன் --நம்
அல்லல்கள் போக்கிடும் ஆறுமுகச் செல்வன்
வறியவர் செழிப்பினில் வாழ்ந்திட வைப்பான் --அந்த
வள்ளலை நினைத்து நம் வாழ்வில் முன்னேறுவோம் (வரம் )
திருமுருகன் நாமம் திக்கெல்லாம் கேட்கும் --வரும்
தீவினைகள் யாவும் திரும்பியே ஓடும்
திருப்புகழ் பாடுவோம் தினமும் நாம் அன்போடு --அந்த
திருமால் மருகன் நமைத் தேடியே வருவான் (வரம் )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக