பல்லவி
எட்டுக்குடி வேலவன் என்றும் இனிய குணசீலன் --அவனை
இதயத்தில் நினைத்தால் எல்லாமும் பெறலாம் (எட்டுக்குடி )
அனுபல்லவி
கட்டி என்னை அணைத்து என் கன்னமதில் முத்தம் இட்டான் --என்னை
கலவியே தினமும் ககனத்தில் பறக்க விட்டான் (எட்டுக்குடி )
சரணங்கள்
அட்டியின்றி சேடியே அன்பனை அழைத்து வாடி --என்
அருகினில் இருந்தால் எந்தன் ஆவி நிலைக்குமடி
வெட்ட வெளியினிலும் வேலனையே நினைத்தேன் --வரும்
விரக தாபத்திலும் வெம்பியே தவிக்கிறேண்டி (எட்டுக்குடி )
நட்டமடைய வைத்து எனது நாயகன் சென்றானடி --இந்த
நங்கை உருகுவது எனோ நாளும் புரியவில்லை
விட்டெனைப் பிரிந்திட வினையென்ன நான் செய்தேன் --என்
வேதனை போக்கிட விரைந்து அழைத்து வாடி (எட்டுக்குடி )
அள்ளியெனை யெடுத்து அன்பு மழை பொழிந்தான் --எனது
அணுக்கள் அனைத்திலும் அவனே நிறைந்து விட்டான்
வள்ளிதனை மணந்த வள்ளலாம் நமது குகன் --அந்த
வடிவழகன் முருகனை தினமும் வாழ்த்தியே பாடுங்கடி (எட்டுக்குடி )
நல்லவன் அவனென்றால் இந்த நாயகியிடம் வரட்டும் --என்னை
நல்லபடி மணந்து என்றும் இல்லற சுகம் தரட்டும்
கள்ளமறியா எனக்கு காதலன் கந்தனே கணவனடி --அவன்
காலடி பணிபவர் கண்களில் காண்பது அற்புதமே (எட்டுக்குடி )
எட்டுக்குடி வேலவன் என்றும் இனிய குணசீலன் --அவனை
இதயத்தில் நினைத்தால் எல்லாமும் பெறலாம் (எட்டுக்குடி )
அனுபல்லவி
கட்டி என்னை அணைத்து என் கன்னமதில் முத்தம் இட்டான் --என்னை
கலவியே தினமும் ககனத்தில் பறக்க விட்டான் (எட்டுக்குடி )
சரணங்கள்
அட்டியின்றி சேடியே அன்பனை அழைத்து வாடி --என்
அருகினில் இருந்தால் எந்தன் ஆவி நிலைக்குமடி
வெட்ட வெளியினிலும் வேலனையே நினைத்தேன் --வரும்
விரக தாபத்திலும் வெம்பியே தவிக்கிறேண்டி (எட்டுக்குடி )
நட்டமடைய வைத்து எனது நாயகன் சென்றானடி --இந்த
நங்கை உருகுவது எனோ நாளும் புரியவில்லை
விட்டெனைப் பிரிந்திட வினையென்ன நான் செய்தேன் --என்
வேதனை போக்கிட விரைந்து அழைத்து வாடி (எட்டுக்குடி )
அள்ளியெனை யெடுத்து அன்பு மழை பொழிந்தான் --எனது
அணுக்கள் அனைத்திலும் அவனே நிறைந்து விட்டான்
வள்ளிதனை மணந்த வள்ளலாம் நமது குகன் --அந்த
வடிவழகன் முருகனை தினமும் வாழ்த்தியே பாடுங்கடி (எட்டுக்குடி )
நல்லவன் அவனென்றால் இந்த நாயகியிடம் வரட்டும் --என்னை
நல்லபடி மணந்து என்றும் இல்லற சுகம் தரட்டும்
கள்ளமறியா எனக்கு காதலன் கந்தனே கணவனடி --அவன்
காலடி பணிபவர் கண்களில் காண்பது அற்புதமே (எட்டுக்குடி )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக