பல்லவி
சொல்லி அழைத்து வாடி தோழி --என்
சுந்தரனை வேலவனை சுப்பிரமணிய சீலனை (சொல்லி )
அனுபல்லவி
புள்ளி மயில் ஏறிவரும் வள்ளி மணவாளன் --என்றும்
புன்னகை தவழும் கந்தனெனும் நேசன் (சொல்லி )
சரணங்கள்
ஆளான நாள் முதலாய் அவன்மேல் ஆசை வைத்தேன் --நான்
அனுதினம் தவறாது அன்பாக பூசை செய்தேன்
வேலன் வருகவென விரதங்களும் இருந்தேன் --அந்த
விண்ணவர் தலைவனை எந்தன் விழிகள் காணவில்லை (சொல்லி )
சந்தனம் மணக்கின்ற ஷண்முகன் வருவான் --எந்தன்
சஞ்சலம் தீர்த்திட சரசங்கள் தினம் புரிவான்
பந்தத்தை நினைந்து பாவை மனம் துடிக்குதே --அந்த
பரம சிவன் மகன் எனைப் பார்த்திட வந்தால் என்னடி (சொல்லி )
கூப்பிட்ட குரலுக்கு என்குமரனும் வருவான் --என்
கொவ்வை இதழினில் குளிர் மழை பொழிவான்
காப்பிய நாயகன் கண்கவர் அழகன் --எந்தன்
கந்தனை கனக வேலனைகண்டு ரசிக்க வென்றே (சொல்லி )
இரவென்றும் பகலென்றும் எதுவும் தெரியவில்லை --என்
இளமை விடுகின்ற மூச்சின் ஏக்கம் புரியவில்லை
உறவினைப் பெரிதாக்க என் உத்தமன் வருவானோடி --நான்
உழன்று தவிப்பதை உரியவரிடம் போய் இன்றே (சொல்லி )
சொல்லி அழைத்து வாடி தோழி --என்
சுந்தரனை வேலவனை சுப்பிரமணிய சீலனை (சொல்லி )
அனுபல்லவி
புள்ளி மயில் ஏறிவரும் வள்ளி மணவாளன் --என்றும்
புன்னகை தவழும் கந்தனெனும் நேசன் (சொல்லி )
சரணங்கள்
ஆளான நாள் முதலாய் அவன்மேல் ஆசை வைத்தேன் --நான்
அனுதினம் தவறாது அன்பாக பூசை செய்தேன்
வேலன் வருகவென விரதங்களும் இருந்தேன் --அந்த
விண்ணவர் தலைவனை எந்தன் விழிகள் காணவில்லை (சொல்லி )
சந்தனம் மணக்கின்ற ஷண்முகன் வருவான் --எந்தன்
சஞ்சலம் தீர்த்திட சரசங்கள் தினம் புரிவான்
பந்தத்தை நினைந்து பாவை மனம் துடிக்குதே --அந்த
பரம சிவன் மகன் எனைப் பார்த்திட வந்தால் என்னடி (சொல்லி )
கூப்பிட்ட குரலுக்கு என்குமரனும் வருவான் --என்
கொவ்வை இதழினில் குளிர் மழை பொழிவான்
காப்பிய நாயகன் கண்கவர் அழகன் --எந்தன்
கந்தனை கனக வேலனைகண்டு ரசிக்க வென்றே (சொல்லி )
இரவென்றும் பகலென்றும் எதுவும் தெரியவில்லை --என்
இளமை விடுகின்ற மூச்சின் ஏக்கம் புரியவில்லை
உறவினைப் பெரிதாக்க என் உத்தமன் வருவானோடி --நான்
உழன்று தவிப்பதை உரியவரிடம் போய் இன்றே (சொல்லி )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக