பல்லவி
இதுவும் சரியோ நியாயமோ இறைவா நீ சொல்லு --இனி
என்ன செய்யவோ நீயும் அண்ணல் அல்லவோ (இதுவும் )
அனுபல்லவி
புதுமை செய்திட வா நீயே புனிதன் அல்லவா --புலம்பும்
என்குரல் உனக்கு இன்னமும் புரியவில்லையோ (இதுவும் )
சரணங்கள்
நீ வருவாயென நானும் நித்தமும் நினைத்தேனே --நல்ல
நெடு முடி வேந்தனே நிர்மல சீலனே
வரந்தர இங்கு வந்தால் தானென்ன --உலகில்
வள்ளல் என்றாலே வழங்கிட வருவாய் (இதுவும் )
கனிவாய் என்று நான் காத்தது உண்மை --உந்தன்
கண்களில் பட்டால் வந்திடும் நன்மை
தணியாத தாகம் தவிக்கிறேன் ஐயா --நீ யும்
தன்னருள் காட்டியெனைத் தடுத்தாள வேண்டும் (இதுவும் )
கழுத்தினில் நீலம் உனது கண்களில் ஞாலம் --தூய
காலடி பற்றிட கனியுமோ நற்காலம்
நிலைத்திடும் செல்வம் நீயே அல்லவா --என்
நிர்மல வேணியனே உன் புகழ் சொல்லவா (இதுவும் )
பார்வதி மணாளா சிவபக்தர்கள் தலைவனே --இன்றே
பரிவுடன் காத்திட ஏழையர் பக்கமும் வருவாய்
வேருக்குள் நீரையும் விரும்பிடும் சிவனே --உன்னை
வேண்டிடும் அடியவர் பெறுவார் நற்பலனே (இதுவும் )
இதுவும் சரியோ நியாயமோ இறைவா நீ சொல்லு --இனி
என்ன செய்யவோ நீயும் அண்ணல் அல்லவோ (இதுவும் )
அனுபல்லவி
புதுமை செய்திட வா நீயே புனிதன் அல்லவா --புலம்பும்
என்குரல் உனக்கு இன்னமும் புரியவில்லையோ (இதுவும் )
சரணங்கள்
நீ வருவாயென நானும் நித்தமும் நினைத்தேனே --நல்ல
நெடு முடி வேந்தனே நிர்மல சீலனே
வரந்தர இங்கு வந்தால் தானென்ன --உலகில்
வள்ளல் என்றாலே வழங்கிட வருவாய் (இதுவும் )
கனிவாய் என்று நான் காத்தது உண்மை --உந்தன்
கண்களில் பட்டால் வந்திடும் நன்மை
தணியாத தாகம் தவிக்கிறேன் ஐயா --நீ யும்
தன்னருள் காட்டியெனைத் தடுத்தாள வேண்டும் (இதுவும் )
கழுத்தினில் நீலம் உனது கண்களில் ஞாலம் --தூய
காலடி பற்றிட கனியுமோ நற்காலம்
நிலைத்திடும் செல்வம் நீயே அல்லவா --என்
நிர்மல வேணியனே உன் புகழ் சொல்லவா (இதுவும் )
பார்வதி மணாளா சிவபக்தர்கள் தலைவனே --இன்றே
பரிவுடன் காத்திட ஏழையர் பக்கமும் வருவாய்
வேருக்குள் நீரையும் விரும்பிடும் சிவனே --உன்னை
வேண்டிடும் அடியவர் பெறுவார் நற்பலனே (இதுவும் )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக