பல்லவி
சரவண பவ குக எனத் தினம் ஓது --மனம்
கனிந்திடும் நிறைந்திடும் கந்தன் அன்போடு (சரவண)
அனுபல்லவி
நிரந்தரம் அவனே நம் நிர்மலன் மகனே --அவனை
நினைத்தவர் உலகினில் நிம்மதி பெறுவார் (சரவண )
சரணங்கள்
குற வள்ளி திருமணம் நம் குஞ்சரன் செய்தார் --பல
குடும்பங்கள் வாழ்ந்திட திருவருள் புரிவார்
சிரமங்கள் வந்திடில் சீர்பெற வைப்பார் --அவரை
சென்னியில் வைத்தே சீலனைத் துதிப்போம் (சரவண )
ஆறிரு கையன் நல்ல அன்பர்க்கு மெய்யன் --என்றும்
அடியவர்க்கு அருளினை அள்ளியே தருவான்
கோரிடும் குறைகளைக் கொய்தே களை வான் --அவன்
குன்றினில் நின்றாலும் நீயும் கூப்பிட வருவான் (சரவண )
குஞ்சரி மணாளன் குணத்தினில் சீலன் --நம்
கோதை வள்ளி தன்னைக் குலவிடும் நேசன்
வெஞ்சமர் தன்னிலோ வெற்றி வீரன் --அந்த
வேலனை சிவபாலனை வேண்டுவோம் தினமே (சரவண )
இதம் தரும் சொல்லினால் ஏழையர் காப்பான் --நம்
எல்லோர் உள்ளத்தில் இடமும் பிடிப்பான்
பதம் தரும் அவன் திருவடி பற்றிடு மனமே --அவனே
பரம்பொருள் என்று குகனைப் பாடிடு தினமே (சரவண )
சரவண பவ குக எனத் தினம் ஓது --மனம்
கனிந்திடும் நிறைந்திடும் கந்தன் அன்போடு (சரவண)
அனுபல்லவி
நிரந்தரம் அவனே நம் நிர்மலன் மகனே --அவனை
நினைத்தவர் உலகினில் நிம்மதி பெறுவார் (சரவண )
சரணங்கள்
குற வள்ளி திருமணம் நம் குஞ்சரன் செய்தார் --பல
குடும்பங்கள் வாழ்ந்திட திருவருள் புரிவார்
சிரமங்கள் வந்திடில் சீர்பெற வைப்பார் --அவரை
சென்னியில் வைத்தே சீலனைத் துதிப்போம் (சரவண )
ஆறிரு கையன் நல்ல அன்பர்க்கு மெய்யன் --என்றும்
அடியவர்க்கு அருளினை அள்ளியே தருவான்
கோரிடும் குறைகளைக் கொய்தே களை வான் --அவன்
குன்றினில் நின்றாலும் நீயும் கூப்பிட வருவான் (சரவண )
குஞ்சரி மணாளன் குணத்தினில் சீலன் --நம்
கோதை வள்ளி தன்னைக் குலவிடும் நேசன்
வெஞ்சமர் தன்னிலோ வெற்றி வீரன் --அந்த
வேலனை சிவபாலனை வேண்டுவோம் தினமே (சரவண )
இதம் தரும் சொல்லினால் ஏழையர் காப்பான் --நம்
எல்லோர் உள்ளத்தில் இடமும் பிடிப்பான்
பதம் தரும் அவன் திருவடி பற்றிடு மனமே --அவனே
பரம்பொருள் என்று குகனைப் பாடிடு தினமே (சரவண )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக