திங்கள், 18 ஜூன், 2018

அருளாளன் 480

                          பல்லவி
கயிலையை  ஆளும்  எங்கள்  கனகசபேசா --உந்தன்
காலடி  பணிந்திடில்  நலமருள்  காருண்ய  நேசா  (கயிலை )
                           அனுபல்லவி
பயமினி  இல்லையே  என்றும்  பரம்பொருள்  துணையே --நமக்கு
பலம்  தரும்  நலம்  வரும்  பறந்திடும்  வினையே   (கயிலை )
                           சரணங்கள்
சிவமெனச்  சொன்னால்  நம்  ஜீவனுக்கு  முக்தி --பரம
சிவனைத்  தொழுதிட   சேர்ந்திடும்  சக்தி
நயமுடன்  வாழ்ந்திட   நல்வழி  பக்தி --இந்த
நானிலம்  ஒலித்திடும்  நாமமே  ஓம்சிவசக்தி  (கயிலை )

தனக்கென  வாழ்ந்திடா  தந்தையும்  அவனே --நம்
தமிழினைக்  காத்திடும்  குகனவன்  மகனே
உனக்கென  உள்ளது  உலகினில்  என்ன --நீ
உற்றதும்  பெற்றதும்  கற்றதும்  தானே (கயிலை )

திரு நீறணிந்திட  வந்த  தீவினை  அகலும் --தினம்
அவன் பெயர்  சொல்ல  திரண்டிடும்  செல்வம்
உருவினில்  பெரியவன்  ஓதிடும்  மறையவன் --உலகினில்
உள்ளவன்  நல்லவன்  உள்ளொளி  தருபவன்  (கயிலை )

பார்வதி  பாதியாய்  நற்  பழமாய்  இனிப்பான --அவனை
பணிந்தவர்  கேட்பதை  பதமாய்த்  தருவான்
ஆர்த்திடும்  அலையாம்   அவனது  நடனம் --இந்த
அகிலம்  வாழ்வது   அவனது  அருட்குணமே (கயிலை )


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக