பல்லவி
கயிலையை ஆளும் எங்கள் கனகசபேசா --உந்தன்
காலடி பணிந்திடில் நலமருள் காருண்ய நேசா (கயிலை )
அனுபல்லவி
பயமினி இல்லையே என்றும் பரம்பொருள் துணையே --நமக்கு
பலம் தரும் நலம் வரும் பறந்திடும் வினையே (கயிலை )
சரணங்கள்
சிவமெனச் சொன்னால் நம் ஜீவனுக்கு முக்தி --பரம
சிவனைத் தொழுதிட சேர்ந்திடும் சக்தி
நயமுடன் வாழ்ந்திட நல்வழி பக்தி --இந்த
நானிலம் ஒலித்திடும் நாமமே ஓம்சிவசக்தி (கயிலை )
தனக்கென வாழ்ந்திடா தந்தையும் அவனே --நம்
தமிழினைக் காத்திடும் குகனவன் மகனே
உனக்கென உள்ளது உலகினில் என்ன --நீ
உற்றதும் பெற்றதும் கற்றதும் தானே (கயிலை )
திரு நீறணிந்திட வந்த தீவினை அகலும் --தினம்
அவன் பெயர் சொல்ல திரண்டிடும் செல்வம்
உருவினில் பெரியவன் ஓதிடும் மறையவன் --உலகினில்
உள்ளவன் நல்லவன் உள்ளொளி தருபவன் (கயிலை )
பார்வதி பாதியாய் நற் பழமாய் இனிப்பான --அவனை
பணிந்தவர் கேட்பதை பதமாய்த் தருவான்
ஆர்த்திடும் அலையாம் அவனது நடனம் --இந்த
அகிலம் வாழ்வது அவனது அருட்குணமே (கயிலை )
கயிலையை ஆளும் எங்கள் கனகசபேசா --உந்தன்
காலடி பணிந்திடில் நலமருள் காருண்ய நேசா (கயிலை )
அனுபல்லவி
பயமினி இல்லையே என்றும் பரம்பொருள் துணையே --நமக்கு
பலம் தரும் நலம் வரும் பறந்திடும் வினையே (கயிலை )
சரணங்கள்
சிவமெனச் சொன்னால் நம் ஜீவனுக்கு முக்தி --பரம
சிவனைத் தொழுதிட சேர்ந்திடும் சக்தி
நயமுடன் வாழ்ந்திட நல்வழி பக்தி --இந்த
நானிலம் ஒலித்திடும் நாமமே ஓம்சிவசக்தி (கயிலை )
தனக்கென வாழ்ந்திடா தந்தையும் அவனே --நம்
தமிழினைக் காத்திடும் குகனவன் மகனே
உனக்கென உள்ளது உலகினில் என்ன --நீ
உற்றதும் பெற்றதும் கற்றதும் தானே (கயிலை )
திரு நீறணிந்திட வந்த தீவினை அகலும் --தினம்
அவன் பெயர் சொல்ல திரண்டிடும் செல்வம்
உருவினில் பெரியவன் ஓதிடும் மறையவன் --உலகினில்
உள்ளவன் நல்லவன் உள்ளொளி தருபவன் (கயிலை )
பார்வதி பாதியாய் நற் பழமாய் இனிப்பான --அவனை
பணிந்தவர் கேட்பதை பதமாய்த் தருவான்
ஆர்த்திடும் அலையாம் அவனது நடனம் --இந்த
அகிலம் வாழ்வது அவனது அருட்குணமே (கயிலை )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக