பல்லவி
கலை ஞான முதல்வன் நம் கண்களுக் கழகன் --அவன்
கைவேலுடன் வந்தே கருணையைப் பொழிவான் (கலை )
அனுபல்லவி
அழகான தெய்வமாம் நமக்கு அன்பான துணைவனாம் --இங்கு
அடியவர் நலம் பெறவே பெரும் ஆற்றலைத் தருபவன் (கலை )
சரணங்கள்
தமிழாக வாழ்பவன் தருக்கரை அழித்தவன் --மண்ணில்
புயலாக வருபவன் புல்லர்களை ஒழித்தவன்
பயமினி இல்லை பரம் பொருள் துணையுண்டு --உலகில்
இணை சொல்ல முடியாத இன்னருள் செல்வமே (கலை )
வடிவேலன் வந்தால் வாழ்வினில் வசந்தமே --உடலில்
வல்லமை பெருகுமே வளங்களும் நிறையுமே
இடிபோல இன்னல்கள் எதிரிலே வந்தாலும் புள்ளி
மயிலோன் மனம் வைத்தால் மண்ணாகிப் போகுமே (கலை )
கனி தந்து அவ்வைக்கு கருணையைப் புரிந்தவன் --தன
காலடி பணிந்தோரைக் காப்பாற்றும் இறையவன்
இனிதாக உலகில் என்றுமே வாழ்பவன் --அவனே
இயல் இசை நாடகத்தின் இலக்கணமாய்த் திகழ்பவன் (கலை )
ஒருநாளும் மறவோமே உனது திருப்பெயர் சொல்ல --அதனால்
உற்ற துயர் தீரும் நமது உள்ளம் தெளிவாகும்
முருகாவென அழைத்தால் மனதில் மோகங்கள் விலகும் --அவன்
முன்வந்து நின்றாலே மாதம் மும்மாரி பொழியும் (கலை )
கலை ஞான முதல்வன் நம் கண்களுக் கழகன் --அவன்
கைவேலுடன் வந்தே கருணையைப் பொழிவான் (கலை )
அனுபல்லவி
அழகான தெய்வமாம் நமக்கு அன்பான துணைவனாம் --இங்கு
அடியவர் நலம் பெறவே பெரும் ஆற்றலைத் தருபவன் (கலை )
சரணங்கள்
தமிழாக வாழ்பவன் தருக்கரை அழித்தவன் --மண்ணில்
புயலாக வருபவன் புல்லர்களை ஒழித்தவன்
பயமினி இல்லை பரம் பொருள் துணையுண்டு --உலகில்
இணை சொல்ல முடியாத இன்னருள் செல்வமே (கலை )
வடிவேலன் வந்தால் வாழ்வினில் வசந்தமே --உடலில்
வல்லமை பெருகுமே வளங்களும் நிறையுமே
இடிபோல இன்னல்கள் எதிரிலே வந்தாலும் புள்ளி
மயிலோன் மனம் வைத்தால் மண்ணாகிப் போகுமே (கலை )
கனி தந்து அவ்வைக்கு கருணையைப் புரிந்தவன் --தன
காலடி பணிந்தோரைக் காப்பாற்றும் இறையவன்
இனிதாக உலகில் என்றுமே வாழ்பவன் --அவனே
இயல் இசை நாடகத்தின் இலக்கணமாய்த் திகழ்பவன் (கலை )
ஒருநாளும் மறவோமே உனது திருப்பெயர் சொல்ல --அதனால்
உற்ற துயர் தீரும் நமது உள்ளம் தெளிவாகும்
முருகாவென அழைத்தால் மனதில் மோகங்கள் விலகும் --அவன்
முன்வந்து நின்றாலே மாதம் மும்மாரி பொழியும் (கலை )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக