பல்லவி
எனையாளும் ஈசனே இனிய கயிலை வாசனே --என்றும்
துணை நீயே துயர் தீர வருவாயே (எனையாளும் )
அனுபல்லவி
கனவிலும் மறவோம் எங்கள் கங்காதரனே --உம்மை
காண்பவர் மனதில் தெம்புகள் நிறையும் (எனையாளும் )
சரணங்கள்
சித்தமதை ஆளும் சிவலிங்கம் நீயே --உந்தன்
சீரடி தொழுதிடில் ஜென்மமும் தேறும்
அத்தனும் நீயே எங்கள் அப்பனும் நீயே --நீங்கள்
ஆடிய சிவ தாண்டவம் அனைவர்க்கும் விருந்து (எனையாளும் )
தில்லையில் வாழும் திகம்பரம் நீயே --நாவில்
தேனாய் இனித்திடும் திருவாசகப் பொருளே
எல்லையிலா கருணையினை இறைவனே அருள்வாய் --ஏழையர்
படும் துயர் உலகினில் இல்லாது செய்வாய் (எனையாளும் )
மதுரை மீனாட்சி மனதினை ஆளுவாய் --இந்த
மண்ணகம் வளமுற மழைதனைப் பொழிவாய்
ஓதிடும் அடியவர் உன்புகழ் பாடுவார் --அவர்
உய்திட நாளும் சிவனுனை நாடுவார் (எனையாளும் )
கலைகளில் சிறந்தவன் கண்களுக் கினியவன் --உலகில்
கற்பகத் தருவாய் கருணையில் ஜொலிப்பவன்
அற்புதம் செய்பவன் இந்த அகிலத்தை ஆள்பவன் --என்றும்
அன்பர்கள் மனதில் ஆனந்தமாய் நிறைபவன் (எனையாளு ம் )
எனையாளும் ஈசனே இனிய கயிலை வாசனே --என்றும்
துணை நீயே துயர் தீர வருவாயே (எனையாளும் )
அனுபல்லவி
கனவிலும் மறவோம் எங்கள் கங்காதரனே --உம்மை
காண்பவர் மனதில் தெம்புகள் நிறையும் (எனையாளும் )
சரணங்கள்
சித்தமதை ஆளும் சிவலிங்கம் நீயே --உந்தன்
சீரடி தொழுதிடில் ஜென்மமும் தேறும்
அத்தனும் நீயே எங்கள் அப்பனும் நீயே --நீங்கள்
ஆடிய சிவ தாண்டவம் அனைவர்க்கும் விருந்து (எனையாளும் )
தில்லையில் வாழும் திகம்பரம் நீயே --நாவில்
தேனாய் இனித்திடும் திருவாசகப் பொருளே
எல்லையிலா கருணையினை இறைவனே அருள்வாய் --ஏழையர்
படும் துயர் உலகினில் இல்லாது செய்வாய் (எனையாளும் )
மதுரை மீனாட்சி மனதினை ஆளுவாய் --இந்த
மண்ணகம் வளமுற மழைதனைப் பொழிவாய்
ஓதிடும் அடியவர் உன்புகழ் பாடுவார் --அவர்
உய்திட நாளும் சிவனுனை நாடுவார் (எனையாளும் )
கலைகளில் சிறந்தவன் கண்களுக் கினியவன் --உலகில்
கற்பகத் தருவாய் கருணையில் ஜொலிப்பவன்
அற்புதம் செய்பவன் இந்த அகிலத்தை ஆள்பவன் --என்றும்
அன்பர்கள் மனதில் ஆனந்தமாய் நிறைபவன் (எனையாளு ம் )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக