சனி, 23 ஜூன், 2018

சத்ய சாய் பாபா 488

                                    பல்லவி
பாபங்கள்  தீர்த்திட  மண்ணிலே  பிறந்தீர் --நம்
பகவானின்  அருட் தூதராக  கண்களில்  நின்றீர்   (பாபங்கள் )
                                  அனுபல்லவி
தாகத்தை  தீர்க்கும்  நல்ல  தண்ணீர் --ஐயா
உன் தயவினை  எண்ண  எண்ண  ஆனந்தக்  கண்ணீர்  (பாபங்கள் )
                                  சரணங்கள்
அருளாலே  ஜொலிக்கின்ற  அன்பெனும்  உடல் --நீ
அருகினில்  நின்றாலே  ஆர்ப்பரிக்கும் கடல்
இருள்  நீக்கிட  வருகிற   எழிலான  விளக்கு  --சற்று
இமை  திறந்து  பார்த்தாலே  இன்பங்கள்  கணக்கு   (பாபங்கள் )

எல்லோர்க்கும்  இனியவர்   நம் இறை  செல்வர்  பாபா --ஏழைகள்
காத்திட  என்றும்  இங்கு   ஓடி நீ     வா வா   பாபா
கல்லாத  பேருக்கும்  கை  கொடுத்த  பாபா --உந்தன்
காலடி  தொழுதாலே  வந்த  கவலைகள்  பறக்கும்   (பாபங்கள் )

தனக்கென  எதுவுமிலா  தத்துவமே  பாபா --தன்னிடம்
வந்தவர்க்கு  தண்ணருளைத்  தருபவர்  பாபா
நினைக்கின்ற  மாந்தரிடம்  நேரிலே  வருவார் --அவர்கள்
நெஞ்சிலுள்ள  குறைகளை  நிச்சயம்  களைவார்   (பாபங்கள் )

பாபா  செய்தார்  பல பேர்க்குத்  தொண்டு --அதன்
பலனை  அடைந்தவர்   பல கோடி  உண்டு
நாவாலே  சொல்லி   நாம  பஜனை  செய்வோம்  --அந்த
நாயகன்  அருளாலே    நல் வாழ்வு  பெறுவோம்  (பாபங்கள் )

                                     ஓம்   சத்ய  சாய்   பாபா 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக