வெள்ளி, 29 ஜூன், 2018

நல்ல பிள்ளை 494

 அழகினைக்  கண்டேன்   அமுதமாய்க்  கொண்டேன் --நான்
பழகவே  நினைத்து   அவளது  பக்கம்  சென்றேன்
விழிகளை  உருட்டி    என்னையே  விரட்டி  யடித்தாள் --அந்த
வெற்றி  செல்வியை   விரும்புதல்  என்ன  தவறா ?

களி நடம்  புரிவாள்   எந்தன்   கனவினில்  வருவாள் --துணை
எனக்கு  வாழ்விலே  அவளது  தோழமை  வருமா
தனியாய்  திரிந்தேன்  தவிப்பினில்  மிதந்தேன் --நல்
தாமரை  மலராள்   என்னைத்  தழுவிடத்  தயக்கமா

இரவினில்  நடப்பேன்  இனி துயில்  மறந்தேன் --அவள்
உறவை  நினைப்பேன்  உள்ளம்  மகிழ்வேன்
ஊரார்  நகைப்பார்   உடலும்  நொந்தேன் --நானோ
வேறோர்  பெண்ணை   விரும்பிட  மாட்டேன்

கண்ணீர்  மழைதனில்  கரைந்திட  வைப்பேன் --என்
காதலைச்  சொல்லி   அவள்  கவனம்  இழுப்பேன்
என்னுள்  அவளே  எங்கிலும்  நிறைந்தாள் --தினம்
இருகரம்  கொண்டு  இழுத்து  அணைப்பேன்

உறவினில்  கலந்து  என்றும்  ஒன்றாய்  இருப்போம் --நிதம்
இளமை  விருந்தினை  இருவரும்  நன்றாய்  ருசிப்போம்
பேரினைச்  சொல்லிட எமக்கு  நல்ல  பிள்ளை  பிறப்பான் --அவனை
பேணிக்  காத்துமே  உலகினில்  பெரும்  புகழினை  அடைவோம்  

வியாழன், 28 ஜூன், 2018

ஓம்சரவணபவ493

                                                   பல்லவி
நிம்மதி  யருளிட  நீயே  வருவாய்  முருகா --உன்னை
நினைத்தவர்  நிலைபெற   வரமதை  தருவாய்  (நிம்மதி )
                                                   அனுபல்லவி
உன்பதம்  தொழுதவர்  என்றும்  உன்னதம்  பெறலாம் --அவர்
உயர்ந்திட  நல்வழி  வாழ்வினில்  நித்தமும்  வரலாம்  (நிம்மதி )
                                                  சரணங்கள்
கனிந்திடும்  உன்னுள்ளம்  பொங்கும்  கடல்  அல்லவா --நீ
கதிர் காமம் தன்னில்  உறையும்   கந்த  வேள்  அல்லவா
பணிந்திடும்  எமதுள்ளம்  எங்கிலும்  நிறைந்திடும்  பரவசமே --தினம்
பக்தியில்  திளைத்திடும்  அடியார்  நற்பதங்களை  அடைவார்  (நிம்மதி )

துணையுடன்  வருவாய்  எங்கள்  தோழனே  வேலா --உனை
துதித்தவர்  வரும்  வினைதனை   வென்றவர்  அன்றோ
இணை  சொல்ல  முடியாத  ஏழையர்  தலைவா --நாங்கள்
இகபர  சுகம்பெற   இன்றே  இன்னருள்  புரிவாய் (நிம்மதி )

மழை தினம்  பெய்திட  இந்த  மண்ணகம்   மணக்கும் --நீங்கள்
மனதினில்  சற்றே  நினைத்தால்  எங்களகம்  குளிரும்
பிழைகளை  மறந்து  எம்மேல்  பேரருள்  புரிவாய் --எம்
பெம்மான்  ஆறுமுகன்  அந்தப்  பித்தனின்  மகனே   (நிம்மதி )

சரவண பவ   என்றிட  வந்த  சங்கடம்   விலகும் --உமது
சந்நிதி  வந்திட  எமக்கு  சகலமும்  செழிக்கும்
உறவென  சொல்லிட  இங்கே  உள்ளவன்  முருகன் --உலகினில்
உத்தமன்  சத்தியன்  நம்  உமை   பெற்ற   அருள்  சீலனே  (நிம்மதி )

புதன், 27 ஜூன், 2018

பிரியமானவள் 492

 விண்ணிலோடும்  வெண்ணிலவிற்கு  விழிகள்  தெரியுமா --அது
விரைந்து  எங்கோ  போவதாலே  வழிகள்  புரியுமா
பெண்ணிலாடும்  மனதின்  ஆழம்  புரிய  முடியுமா --வீணே
வேலையின்றி  சுற்றுவதால்   யாருக்கு  லாபமோ

கண்கள்  தொட்டதால்    களிப்பில்  மிதந்தேன் --அதில்
காதலென்ற  பயிரினை  நன்றாய்  வளர்த்தேன்
எண்ணமதைச்  சொல்லிடவே  நானும்  பயந்தேன் --நீ
இருப்பதற்கு  வேண்டுமென  என்னிதயம்  திறந்தேன்

நாளும்  நான்  உன்னைத்  தினமும்  தொடர்ந்தேன் --நடு
இரவில்  புது  உறவில்  நலமாய்ப்  படர்ந்தேன்
வேளை  வந்தது  என்றுதானே  நினைத்தேன் --எனோ
சிலர்  விரித்து  வைத்த  வலையினில் விழுந்து  விட்டேன்

உன்னை  விட்டு  வெகு  தூரம்  எங்கோ  பறந்தேன் --இனிய
உறவினை   எதனாலோ  நானும்  மறந்தேன்
பொன்னினைப்  புழுதியில்  தூக்கி  எறிந்தேன் --அன்று
புத்தி   கெட்டுப்  போனதாலே  புலம்பித்  தவித்தேன்

காதல்  கொண்ட  மனமோ  கலக்கம்  கொண்டது --உனது
கட்டழகை  மனதில்  நினைத்து  கதறி  யழுகுது
கோதையே  என்னைக்  காக்க  உனக்கு  பிரியமில்லையோ --அன்று
பிரிந்தவர்கள்  ஒன்று  சேர   நல்ல  வழியும்  இல்லையா



  

செவ்வாய், 26 ஜூன், 2018

ஓம்சக்தி 491

                                        பல்லவி
நிலையான  செல்வம்   நீங்காத  கல்வி  இவை--எமக்கு
அடைந்திட  வேண்டி  நீயும்  அருள்வாயே  அம்மா   (நிலை )
                                        அனுபல்லவி
கலை  மேவும்  எழிலே  எங்கள்  கற்பகச்  செல்வி  --நீ
கண்ணாலே  பார்த்தாலே  காலங்கள்  இனிக்கும்  (நிலை )
                                        சரணங்கள்
வறுமைகள் இல்லாத  நல்  வளமையைக்  கொடுப்பாய் --இங்கு
வாரியே  வழங்கினால்  இந்த  வையகம்  செழிக்கும்
திறமையினால்  அன்றோ  செல்வங்கள்  சேரும் --எங்கள்
தேவியவள்  நினைத்திடில்  மண்ணில்  தேனாறு   பாயும்  (நிலை )

தாய்க்குலம்  உயர்ந்திட  தரணியை  ஆள்வாய் --வீண்
தருக்கரை  எல்லாம்  சமரினில்   வென்றாய்
வாய்  விட்டுச்  சொல்ல  தமிழில்  வார்த்தைகள்  எது --எம்
வல்லமைத்  தாயே   வந்தே  அருள்  செய்வாயே  (நிலை )

உலகாளும்  உமையே  உன்பாதம்  பணிவோம் --தினம்
உழைப்பதின்  மூலமே   உன்னருள்   பெறுவோம்
வளமான  சுகவாழ்வு   வரமாகத்  தருவாய் --உன்னை
வணங்கினோர்  வாழ்வுயர   நல்ல  உரமாக  நிற்பாய்  (நிலை )

திருவே  உன்திருப்பெயர்  தேசமெங்கும்  ஒலிக்கும் --வரும்
தீமைகள்   எல்லாம்  உன்னால்  திசை மாறி  யோடும்
உறுதுணையாக  வந்தே இங்குள்ள  உயிர்களைக்  காப்பாய் --மக்கள்
உள்ளங்கள்   கோவிலாக    நாளும்  ஓம்சக்தி  அமர்வாய்  (நிலை)





திங்கள், 25 ஜூன், 2018

மும்மாரி 490

                                       பல்லவி
கலை ஞான  முதல்வன்  நம்  கண்களுக் கழகன்  --அவன்
கைவேலுடன்  வந்தே  கருணையைப்  பொழிவான்  (கலை )
                                     அனுபல்லவி
அழகான  தெய்வமாம்  நமக்கு  அன்பான  துணைவனாம் --இங்கு
அடியவர்  நலம்  பெறவே  பெரும்  ஆற்றலைத்  தருபவன்  (கலை )
                                      சரணங்கள்
தமிழாக  வாழ்பவன்  தருக்கரை  அழித்தவன் --மண்ணில்
புயலாக  வருபவன்  புல்லர்களை  ஒழித்தவன்
பயமினி  இல்லை  பரம்  பொருள்  துணையுண்டு --உலகில்
இணை சொல்ல  முடியாத   இன்னருள்  செல்வமே  (கலை )

வடிவேலன்  வந்தால்  வாழ்வினில்  வசந்தமே  --உடலில்
வல்லமை  பெருகுமே  வளங்களும்  நிறையுமே
இடிபோல  இன்னல்கள் எதிரிலே  வந்தாலும்  புள்ளி
மயிலோன்   மனம்  வைத்தால்  மண்ணாகிப்  போகுமே  (கலை )

கனி தந்து  அவ்வைக்கு  கருணையைப்  புரிந்தவன்  --தன
காலடி  பணிந்தோரைக்  காப்பாற்றும்  இறையவன்
இனிதாக  உலகில்  என்றுமே  வாழ்பவன் --அவனே
இயல்  இசை  நாடகத்தின்  இலக்கணமாய்த்  திகழ்பவன்  (கலை ) 

ஒருநாளும்  மறவோமே  உனது  திருப்பெயர்  சொல்ல --அதனால்
உற்ற  துயர்  தீரும்  நமது  உள்ளம்  தெளிவாகும்
முருகாவென  அழைத்தால்  மனதில்  மோகங்கள்  விலகும் --அவன்
முன்வந்து  நின்றாலே   மாதம்  மும்மாரி  பொழியும்  (கலை )

சனி, 23 ஜூன், 2018

நேசம் 489

 என்னருந்தேவி  இயல்  இசை  வாணி --உன்
கரம்  பற்றிட  உவகை  கொண்டேன்
தென்னவன்  மகளே  தீதிலா  நிலவே --நீயும்
என்னிலே  பாதியே  இல்லற  ஜோதியே

கன்னம்  சுவையே  கரு  நாவற்  பழமே --தினம்
எண்ணி  இளைத்தேன்  இதயம்  துடித்தேன்
பின்னல்  சடையினில்  பேதமை  கொண்டேன் --உன்னை
என்று    மணப்பேன்   இனிமை   பெறுவேன்

நீராய்  வடித்தேன்  காதல்  நெருப்பால்  தகித்தேன் --கண்ணில்
பாராது  துடித்தேன்   பனியாய்க்  கரைந்தேன்
கூரெனும்  விழிகளால்  என்னை  கொள்ளை  யடித்தாய் --எனோ
இதுவும்  சரியா  உனக்கு  இதயமே  இல்லையா

சிரித்து  சிரித்துமே   எந்தன்  ஜீவனைக்  கொன்றாய் --நான்
சிக்கித்  தவிக்கையில்  சினமுடன்  சென்றாய்
எரிக்குமே  நிலவு   உன்னால்  இரவினில்  தொல்லை --நாம்
இணைவது  என்பது  இனிமேல்  இல்லையோ

வாசலில்  நின்றே   உனது  வருகை  காண்பேன் --நம்
வண்டமிழ்  மொழியினில்  வாழ்த்துகள்  படிப்பேன்
நேசம்  நினைத்து   இங்கே  நீயும்  வர  வேண்டும் --எந்தன்
நெஞ்சினில்  வைத்து  உன்னை  நித்தமும்  ரசிப்பேன்  

சத்ய சாய் பாபா 488

                                    பல்லவி
பாபங்கள்  தீர்த்திட  மண்ணிலே  பிறந்தீர் --நம்
பகவானின்  அருட் தூதராக  கண்களில்  நின்றீர்   (பாபங்கள் )
                                  அனுபல்லவி
தாகத்தை  தீர்க்கும்  நல்ல  தண்ணீர் --ஐயா
உன் தயவினை  எண்ண  எண்ண  ஆனந்தக்  கண்ணீர்  (பாபங்கள் )
                                  சரணங்கள்
அருளாலே  ஜொலிக்கின்ற  அன்பெனும்  உடல் --நீ
அருகினில்  நின்றாலே  ஆர்ப்பரிக்கும் கடல்
இருள்  நீக்கிட  வருகிற   எழிலான  விளக்கு  --சற்று
இமை  திறந்து  பார்த்தாலே  இன்பங்கள்  கணக்கு   (பாபங்கள் )

எல்லோர்க்கும்  இனியவர்   நம் இறை  செல்வர்  பாபா --ஏழைகள்
காத்திட  என்றும்  இங்கு   ஓடி நீ     வா வா   பாபா
கல்லாத  பேருக்கும்  கை  கொடுத்த  பாபா --உந்தன்
காலடி  தொழுதாலே  வந்த  கவலைகள்  பறக்கும்   (பாபங்கள் )

தனக்கென  எதுவுமிலா  தத்துவமே  பாபா --தன்னிடம்
வந்தவர்க்கு  தண்ணருளைத்  தருபவர்  பாபா
நினைக்கின்ற  மாந்தரிடம்  நேரிலே  வருவார் --அவர்கள்
நெஞ்சிலுள்ள  குறைகளை  நிச்சயம்  களைவார்   (பாபங்கள் )

பாபா  செய்தார்  பல பேர்க்குத்  தொண்டு --அதன்
பலனை  அடைந்தவர்   பல கோடி  உண்டு
நாவாலே  சொல்லி   நாம  பஜனை  செய்வோம்  --அந்த
நாயகன்  அருளாலே    நல் வாழ்வு  பெறுவோம்  (பாபங்கள் )

                                     ஓம்   சத்ய  சாய்   பாபா 

வெள்ளி, 22 ஜூன், 2018

மூகாம்பிகை 487

                                     பல்லவி
உலகாளும்  உமையே  உயர்  கயிலை  வாசி --உம்
அருளை ப்  பெறவே  தினம்  உருகுகினோம்  அம்மா  (உலகாளும் )
                                     அனுபல்லவி
நிலம்  காக்க  வந்துமே  எங்கள்  நெஞ்சிலே  நின்றாய் --என்றும்
நினைத்தவர்  தமக்கே வாழ்வினில்  நிம்மதி  யருள்வாய்  (உலகாளும் )
                                      சரணங்கள்
கலங்கிடும்  மாந்தரைக்  காப்பதுவும்  நீயே --பிறர்க்கு
கற்பக விருட்சமாய்  கனிந்திடும்  தாயே
விளங்கிடும்  வாழ்விற்கு   விடி வெள்ளி  அன்றோ --நீ
வேதாந்த  ஞானமே   விமலனின்  துணையே    (உலகாளும் )

ஆனைமுகன்  வேலவன்  அழகிய  தாயே --இங்கு
அன்பர்கள்  உன்பாதம்  அடைக்கலம்  அம்மா
ஞானங்களை  வழங்கிடும்  நாயகி  அன்றோ --உம்மை
நம்பினோர்  நலிந்ததாக  நாட்டினில்  உண்டோ    (உலகாளும் )

நால் வகை  வேதங்கள்  நடுவிலே  இருப்பாய் --மண்ணில்
நவ ராத்திரி  கொலுவினில்  நாயகியாய்த்  தெரிவாய்
நூல்களும்  போற்றிடும்  நுண்  பொருள்  கலையே --நின்னை
தொழுதவர்  சுகம்பெற   நீயருள்  புரிகுவாய்       (உலகாளும் )

சக்தியின்  வடிவம்   சங்கரித்   தாயே  --அன்று
சமரினில்  வென்றவள்  சாயுக்தம்  அருள்வாய்
முத்தியை  யருளிடும்  மூகாம்பிகைத்  தாயே  --நாங்கள்
முழுவதும்  நம்பினோம்  மோட்சமும்  அருள்வாய்   (உலகாளும் )

வியாழன், 21 ஜூன், 2018

ம் ) அம்மையப்பன் 486

                        பல்லவி
எனையாளும்  ஈசனே  இனிய  கயிலை  வாசனே --என்றும்
துணை  நீயே  துயர் தீர  வருவாயே  (எனையாளும் )
                      அனுபல்லவி
கனவிலும்  மறவோம்  எங்கள்  கங்காதரனே --உம்மை
காண்பவர்  மனதில்   தெம்புகள்  நிறையும்  (எனையாளும் )
                       சரணங்கள்
சித்தமதை  ஆளும்   சிவலிங்கம்   நீயே --உந்தன்
சீரடி  தொழுதிடில்   ஜென்மமும்  தேறும்
அத்தனும்  நீயே  எங்கள்  அப்பனும்  நீயே --நீங்கள்
ஆடிய   சிவ தாண்டவம்   அனைவர்க்கும்  விருந்து  (எனையாளும் )

தில்லையில்  வாழும்  திகம்பரம்   நீயே --நாவில்
தேனாய்  இனித்திடும்   திருவாசகப்  பொருளே
எல்லையிலா  கருணையினை  இறைவனே  அருள்வாய் --ஏழையர்
படும்  துயர்  உலகினில்   இல்லாது  செய்வாய்  (எனையாளும் )

மதுரை  மீனாட்சி   மனதினை  ஆளுவாய் --இந்த
மண்ணகம்  வளமுற  மழைதனைப்  பொழிவாய்
ஓதிடும்  அடியவர்  உன்புகழ்  பாடுவார்  --அவர்
உய்திட  நாளும்   சிவனுனை  நாடுவார்  (எனையாளும் )

கலைகளில்  சிறந்தவன்  கண்களுக்  கினியவன் --உலகில்
கற்பகத்  தருவாய்  கருணையில்  ஜொலிப்பவன்
அற்புதம்  செய்பவன்  இந்த  அகிலத்தை  ஆள்பவன் --என்றும்
அன்பர்கள்  மனதில்  ஆனந்தமாய்  நிறைபவன் (எனையாளு ம் )

புதன், 20 ஜூன், 2018

வளர்மதி 485

 வானில்  உலவிடும்  வளர்மதியே --உன்னை
வாரியே  அணைத்திட  நிம்மதியே
பாவில்  மலர்ந்திடும்  பனிமலரே --நான்
பறித்து  மகிழ்ந்திட   சம்மதியே (ன் )

காதல்   எக்காலமும்  வாழுமே --நல்ல
கவிதைகள்  நெஞ்சினை  ஆளுமே
பேதம்  மறைந்து  போகுமே --ஒரு
புதுமை  உலகம்  தோன்றுமே

இல்லை  என்றிடும்  சொல்லையே --இனி
இல்லை இல்லையென  மாற்றுவோம்
வெள்ளை  மனதுடன்  வாழுவோம்  --நாம்
வெற்றிகள்  பலவும்  காணுவோம்

கலைகள் பொங்கிப்  பெருகுமே  --வரும்
கவலைகள்   தீர்ந்து  போகுமே
விலைகள்  நாட்டில்  குறையுமே --மண்ணில்
விவசாயம்  செழித்து வளருமே

இறைவன்  கருணையைப்  பொழியலாம் --நம்
இந்தியா   சிறந்து  விளங்கலாம்
குறைகள்  உலகினில்  மறையலாம் --உலகில்
கோடி  இன்பங்கள்  நிறையலாம் 

செவ்வாய், 19 ஜூன், 2018

நல்லவை 484

 வாழும்  காலம்  சிறிது --நமக்கு
வகுத்த  கடமை  பெரிது
நாளும்   இதனை  நினைப்பாய் --நமது
நாடு   செழிக்க  உழைப்பாய்

அன்னை  தந்தையும்  தெய்வம் --நல்ல
அறிவு  தந்திட்ட  ஆசான்
கண்ணைப்  போல  மதிப்பாய் --அவர்கள்
காட்டிடும்  வழிதனில்  செல்வாய்

கூடியே  வாழ்ந்திடல்  வேண்டும் --உன்
குணத்தினில்  நல்லவை  வேண்டும்
தேடியே  அலைந்து  உழைத்து --நீயும்
திரட்டிய  செல்வத்தைக்  காப்பாய்

பெண்களை  மதித்திட  வேண்டும் --அவர்
பின்னாலே  சென்றிட  வேண்டாம்
கற்பு நெறி  மனதில்  நிலைப்பாய் --எங்கும் 
கண்ணியம்  தவறாது  நடப்பாய

பணத்தில்  பேராசை  மிகவும்  தீது --அதனை
பதுக்க   நினைப்பதுவும்   சூது
குணத்தில்  குன்றென  நில்லு --வரும்
கொடுமையை  எதிர்த்து  வெல்லு

சொல்வதை  மனதில்  வாங்கு --ஏழை
சுகமாய்  வாழ்ந்திட  ஏங்கு
உள்ளத்தில்  உண்மையை  வளர்ப்பாய் --இந்த
உலகத்தில்   என்றைக்கும்  ஜொலிப்பாய் 

என் மனம் 483

நினைவா   அல்லது  இது  கனவா --அவள்
நேரினில்  வந்தது   நிஜமா
கணமும்  சிறிது  நினையாது --அன்று
காதலில்  விழுந்தது  சரியா

படைகள்  சுமந்து  வந்தாள் --அதில்
பருவச்  சுமைகள்  அதிகம்
தடைகள்  எதுவும்  வரினும் --என்
தங்கம்  அவளையே  மணப்பேன்

கொடையில்   அவளோ  கர்ணன் --கன்னி
கொவ்வை  இதழ்கள்  அழகு
விடைகள்  தெரியாத  கேள்வி --நானும்
விவரம்  அறியாத   இளைஞன்

இரவும்  பகலும்   நினைப்பேன்  --அந்த
இளமை   அழகை  ரசிப்பேன்
உறவு  கொண்டிட  நினைப்பேன் --காதல்
உணர்வுகள்  பொங்கிடக்  கிடப்பேன்

வருவாளென  வாசலில்  நிற்பேன்  --வஞ்சி
கரம் பற்றி   வாலிபத்தை  ருசிப்பேன்
உருவான  காதல்  இங்கு  நிஜமே --நாளும்
உருகியேத்  தவிக்குது   என்மனமே 

திங்கள், 18 ஜூன், 2018

இமைகள் 482

 கலைந்தோடும்  மேகங்கள்  கதை  சொல்லுமா --என்
கண்ணாளன்  இடம்  சென்று   நலம்  கேட்குமா
அலைந்தாடும்  மனதில்  அவர்  ஆட்சியே --அன்பரை
அடைந்தாலோ  என்வாழ்வில்  துயர்  மீட்சியே

நினைவாலே  அவரையே  தினம்  காணுவேன் --அந்த
இன்பத்தை  நினைத்தே  நலம்  பேணுவேன்
கனவெல்லாம்  நனவாக  காலம்  தரலாம் --என்
காதலன்  கரம் பற்ற  நல்ல வேளை  வரலாம்

மூடாத  விழிகளில்  என் மோகம்  தெரியும் --என்
முன்னாலே  அவர் வந்தால்  முகம்  நிலவாகுமே
தேடாத  வழியில்லை  இங்கே  தினம்தோறுமே --நீயும்
தரிசனம்  தந்தால்  தான்  என்மனம்  ஆறுமே

பெண்ணாகப்  பிறந்து  எனோ  பேதை  ஆகினேன்  --அவர்
பின்னாலே  சென்றதால்  பெரும்  பிழை  தாங்கினேன்
எந்நாளும்  வருகவென  நான்  பாடுவேன் --எனது
இமைகள்  மூடும்வரை அவரை  நித்தம்  தேடுவேன்

இளமானைத்  தேடியே  அவரும்  வரவேண்டுமே --என்னோடு
இணைகின்ற  சுகவாழ்வு  நான்  பெற  வேண்டுமே
களவினில்  கலந்து  விட்டேன்   அந்தக்  கள்வனிடமே --அவரை
கண்டதும்  துயர்  தீரும் காதல்  சுவை  கூடுமே 

தேவன் 481

 கண்ணாலே  வந்த  காதல்  கைகூடுமா --என்
கண்ணாளன்  கணவனாக  நன்னாள்  வருமா
உண்ணாமல்  உறங்காமல்  உயிர்  வாழ்கிறேன் --நான்
உன்னையன்றி  வேறு  யாரை  இங்கினி  நம்புவேன்

மலரோடு  சேர்ந்த  மணம்    ஆகினோம் --திரு
மணத்தாலே  புதுவாழ்வு  நாம்  வாழுவோம்
நினைத்தாலே  என்நெஞ்சம்  நிறைவாகுமே --என்
நேசன்  நீ  வந்தால்  நிம்மதி  உருவாகுமே

கரை காணா   எல்லை  நம்  காதல்  ஆகுமே --வந்த
கவலைகள்  ஒருநாள்  எங்கோ  பறந்தோடுமே
நிறைவான  பேரின்பம்   நீ   தந்தது --உன்னை
நினைத்தாலே  எனதுள்ளம்  துள்ளி  யாடுது

ஒன்றாக  இணைந்து  புது உலகம்  உருவாக்குவோம் --அதில்
உண்மை  அன்பு  நெறிகளை  வழியாக்குவோம்
நன்றி  என்ற  சொல்லே  நமக்கு  மந்திரம் --இங்கு
நானும்  நீயும்   என்றுமே   கதா பாத்திரம்

நம் காதலின்  சான்று   நாளை  வரலாம் --அதனை
நல்லபடி  வளர்த்தால்  நன்மை  பெறலாம்
தெம்பாக  உழைத்தால்  நம் தேசம்  உயரலாம் --அந்த
தேவனவன்   நினைத்தால்  தான்   தினம்  மகிழலாம் 

அருளாளன் 480

                          பல்லவி
கயிலையை  ஆளும்  எங்கள்  கனகசபேசா --உந்தன்
காலடி  பணிந்திடில்  நலமருள்  காருண்ய  நேசா  (கயிலை )
                           அனுபல்லவி
பயமினி  இல்லையே  என்றும்  பரம்பொருள்  துணையே --நமக்கு
பலம்  தரும்  நலம்  வரும்  பறந்திடும்  வினையே   (கயிலை )
                           சரணங்கள்
சிவமெனச்  சொன்னால்  நம்  ஜீவனுக்கு  முக்தி --பரம
சிவனைத்  தொழுதிட   சேர்ந்திடும்  சக்தி
நயமுடன்  வாழ்ந்திட   நல்வழி  பக்தி --இந்த
நானிலம்  ஒலித்திடும்  நாமமே  ஓம்சிவசக்தி  (கயிலை )

தனக்கென  வாழ்ந்திடா  தந்தையும்  அவனே --நம்
தமிழினைக்  காத்திடும்  குகனவன்  மகனே
உனக்கென  உள்ளது  உலகினில்  என்ன --நீ
உற்றதும்  பெற்றதும்  கற்றதும்  தானே (கயிலை )

திரு நீறணிந்திட  வந்த  தீவினை  அகலும் --தினம்
அவன் பெயர்  சொல்ல  திரண்டிடும்  செல்வம்
உருவினில்  பெரியவன்  ஓதிடும்  மறையவன் --உலகினில்
உள்ளவன்  நல்லவன்  உள்ளொளி  தருபவன்  (கயிலை )

பார்வதி  பாதியாய்  நற்  பழமாய்  இனிப்பான --அவனை
பணிந்தவர்  கேட்பதை  பதமாய்த்  தருவான்
ஆர்த்திடும்  அலையாம்   அவனது  நடனம் --இந்த
அகிலம்  வாழ்வது   அவனது  அருட்குணமே (கயிலை )


மலைத்தேன் 479

நெஞ்சில்  வந்தது  நினைப்பு --உன்னால்
நேற்று  முழுதும்  சிரிப்பு
மஞ்சம்  நிறையும்  களிப்பு --இந்த
மங்கை  உடலினுள்  சிலிர்ப்பு

காமன்  கணைகள்  வேகம்  --அதில்
கலந்து   இருப்பது  மோகம்
சோகம்  போக்கிடும்  ஜாலம் --இந்த
சுகமும்  எனக்கெத்தனைக்  காலம்

இரவு  நிறைய  எங்கிலும்  ஆட்டம் --அங்கு
இளமை  குலுங்கிடும்  தோட்டம்
உறவுகள்  பிரிந்தால்  வாட்டம் --சிலர்
உடனே  எடுப்பார்   ஓட்டம்

கலைகள்  கற்றிட்ட  மன்னன் --அதில்
காமன்  இவருக்கு  அண்ணன்
சிலையைப்  போல  இருந்தேன் --என்னை
சிற்றுளி  கொண்டு  வடித்தான்

கொடுத்த  இன்பங்கள்  கோடி --அவன்
குபேரனாய்  என்றுமே  வாழி
எடுத்துக்  கொடுத்து இளைத்தேன் --இன்னும்
எங்கும்  காணாமல்  மலைத்தேன்

தேடி  வருவான்  அவனே --காதல்
தரிசனம்  எனக்கு  சுகமே
வாடிடும்  பயிருக்கு  நீராய் --நீயும்
என்னிடம் வந்திடுவாயே  நேராய்

இன்பம் 478

நிலவில்  ஆடித் திரிந்தேன் --அந்த 
நீல  வானில்  மிதந்தேன் 
கனவில்  இதனைக்  கணடேன் --எனோ 
காதல்  வலையில்  விழுந்தேன் 

இழுத்து  என்னையும்  அணைத்தாய் --என் 
இதழ்களில் முத்தங்கள்  பதித்தாய் 
பழுத்த  பழமாய்  நினைத்தாய் --என்னை 
பகலும்  இரவுமாய்  புசித்தாய் 

இருப்பை  எடுத்துக்  கொடுத்தாய் --எனது 
இதயத்தில்  இடமும்  கொடுத்தேன் 
கருப்பை  வளர்ந்திடும்  காலம் --எனக்கு 
காமன்  தந்தது  இக்கோலம் 

என்ன  சொல்லி  நான்  அழுவேன் --உன்னை 
இறைவனாய்  எண்ணித்  தொழுவேன் 
கண்ணில்  கருணையைக்  காட்டு --என்னிடம் 
காதல்  வீணையை  நீ  மீட்டு 

பெண்ணாகப்  பிறந்தது  பாபம --எடுத்த 
பிறவி  மேலும்  கோபம் 
எண்ணியே  இளைத்து  மெலிந்தேன்  --உனக்கே 
இதயக்  கதவுகள்  திறந்தேன் 

தேடியே  வந்திடு   என் செல்வமே --நினைத்து 
தேம்பி  அழுவது  என் உள்ளமே 
நாடியே  வருவாய்  நண்பனே --அந்த 
நாளும்   எனக்கு    நல்லின்பமே 

ஞாயிறு, 17 ஜூன், 2018

மலரம்புகள் 477

நெஞ்சில்  ஆடும்   நினைவுகள் --அதை
நினைக்க  நினைக்க  கனவுகள்
மஞ்சம்  காணா  இரவுகள் --என்
மனதை  வாட்டும்  மலரம்புகள்

சேர்ந்து  வாழ்ந்த  காலமே --எனக்கு
தேவா லோக சொர்க்கமே
ஊர்வலம்  நாம்  போனதும் --நம்
உள்ளம்  கொள்ளை  போனதே

எடுத்துக்  கொடுத்தேன்  என்னையே --உனக்கு
என்றும்  இளைய  கன்னியே
விடுத்துப்  பிரிந்ததும்  ஏனடா --நீ
விரும்பிக்  குடிக்கும்  தேனடா

இருக்கும்  உயிரைக்  காத்திடு --இனி
இரவை  இன்பமாய்  மாற்றிடு
கரும்பு  தின்னவே  கசக்குமா --எனது
காதல்  உனக்கு  வெறுக்குமா

வாழும்  காலங்கள்  வாழலாம் --நம்
வாழ்வில்  வசந்தங்கள்  கூடலாம்
சூழும்  துன்பங்கள்  மாறிடும் --உன்
தோளினில்  என்னுடல்  சாய்ந்திடும்

அள்ளித்  தந்தேன்  நிறையவே --என்
அல்லல்  என்றுதான்  மறையுமோ
உள்ளம்  கோவில்   ஆனதே --உன்
உறவு  என்னையே  வாட்டுதே 

இரவும் பகலும் 476

 நிலவுக்கு  காதல்  நம்  நினைவுக்கு  மோதல் --ஆயினும்
நித்தம்  நீயும்  நானும்  ஒன்றடி  நினைத்திட  நன்றடி
நெஞ்சுக்குள்  புகுந்து  நிஜமாய்க்  கலந்தாய் --இதனை
நீயே  உணர்வாய்  எனக்கு  நிம்மதி  தருவாய்

உறவினில்  நெருக்கம்  உள்ளத்தில்  கலக்கம் --நம்
உணர்வுகள்  பொங்கி உடலினுள்  வழியுதே
உன்னை நினைத்து  நான்  என்னை  நினைத்து  நீ --இனி
ஒவ்வொரு  கணமும்   வீணாய்க்  கழியுதே

மணந்திட  ஆசை  அந்த  மன்மதன்  பூசை --இந்த
மயக்கமும்  அதிகமாய்  சேர்ந்து  கொண்டதே
குணத்தினை  நினைவாய்  நீ  கொடி  போல்  படர்வாய் --வரும்
கொள்ளை  இன்பமும்  எனக்குப்  பல கோடியே

தனியாய்  பிறந்தோம்  நம்  தமிழாய்  இணைவோம் ==நீ
தத்துவம்  போதிக்கும்  காதல்  ஞானியே
இனியென்ன  சொல்ல  உன் இடை யினை  அள்ள --என்னை
ஏங்கிட  விடுவது  உனக்கு  என்ன  லாபமோ

கண்கள்  மலர்வாய்  கதவினைத்  திறவாய் --ஓடிடும்
காலத்தை  மறந்து  காதல்  பயணம்  போகலாம்
இன்ப நினைவுகள்  நம்  இளமையை  மீட்டும் --இனி
இரவும்  பகலும்  என்றுமே  ஒன்றுதான் 

பாதமலர் 475

                            பல்லவி
கற்பனைக் கெட்டாத  அற்புதம்  நீயே --என்றும்
கனிந்திடும்  மனத்தால்   எமையும்  காத்திடுவாயே  (கற்பனை )
                            அனுபல்லவி
உற்றது  எல்லாம்  உம்  செயல்  அன்றோ --நாங்கள்
உய்வதும்   உணர்வதும்   உன் அருளால்  அன்றோ  (கற்பனை )
                           சரணங்கள்
காலம்  முழுதும்  உந்தன்  காலடி  சரணம் --நீ விர்
கண்கள்  மலர்ந்தால்   க்ளிப்புகள்  சேரும்
வேழ முகத்தினன்   உன்னரும்  செல்வமே  --உம்மை
விரும்பித்  தொழுதிட  விழையுது  மனமே  (கற்பனை )

காலினைத்  தூக்கி    களிநடம்  ஆடினாய் --வற்றாத
கங்கையை  உம  சிரசினில்  கருத்தாக  சூடினாய்
நால்வகை  வேதங்கள்  நல்கிய   நாதனே --என்றும்
நம சிவாய  ஒலியே   நல்லருள்  கூட்டுமே    (கற்பனை )

இல்லை  என்பவர்க்கு  இருப்பதைக்  காட்டினாய் --தினம்
இறஞ்சித்  தொழுவார்க்கு  இன்பத்தை  ஊட்டினாய்
தில்லையில்  சபைகளை  திறம்பட  நிறுவினாய் --மகா
தேவனே  சிவனே    திருக்கண்  மலர்வாய்   (கற்பனை )

பார்வதி  நேசனே  பக்தர்கள்  விசுவாசனே --அந்த
பனிமலையில்  வாழும்  பரம்பொருள்  நீங்களே
பாரினைக்  காத்திட   பரிவுடன்  வருவாய் --உமது
பாத மலர்  தொழுதே  நற்பதங்களைப்  பெறுவோம்  (கற்பனை )

சனி, 9 ஜூன், 2018

அற்புதம் 474

                                பல்லவி
எட்டுக்குடி  வேலவன்  என்றும்  இனிய  குணசீலன் --அவனை
இதயத்தில்  நினைத்தால்  எல்லாமும்  பெறலாம்  (எட்டுக்குடி )
                               அனுபல்லவி
கட்டி  என்னை  அணைத்து   என் கன்னமதில்  முத்தம்  இட்டான் --என்னை
கலவியே   தினமும்   ககனத்தில்  பறக்க  விட்டான்  (எட்டுக்குடி )
                               சரணங்கள்
அட்டியின்றி  சேடியே  அன்பனை  அழைத்து  வாடி --என்
அருகினில்  இருந்தால்  எந்தன்  ஆவி  நிலைக்குமடி
வெட்ட  வெளியினிலும்  வேலனையே  நினைத்தேன் --வரும்
விரக தாபத்திலும்  வெம்பியே  தவிக்கிறேண்டி  (எட்டுக்குடி )

நட்டமடைய  வைத்து  எனது  நாயகன்  சென்றானடி  --இந்த
நங்கை  உருகுவது  எனோ   நாளும்  புரியவில்லை
விட்டெனைப்  பிரிந்திட  வினையென்ன  நான்  செய்தேன் --என்
வேதனை  போக்கிட   விரைந்து  அழைத்து   வாடி  (எட்டுக்குடி )

அள்ளியெனை  யெடுத்து  அன்பு மழை  பொழிந்தான் --எனது
அணுக்கள்  அனைத்திலும்  அவனே  நிறைந்து  விட்டான்
வள்ளிதனை  மணந்த   வள்ளலாம்    நமது  குகன்  --அந்த
வடிவழகன்   முருகனை  தினமும்  வாழ்த்தியே  பாடுங்கடி  (எட்டுக்குடி )

நல்லவன்  அவனென்றால்  இந்த  நாயகியிடம்  வரட்டும் --என்னை
நல்லபடி  மணந்து   என்றும்  இல்லற  சுகம்  தரட்டும்
கள்ளமறியா  எனக்கு   காதலன்  கந்தனே  கணவனடி  --அவன்
காலடி  பணிபவர்   கண்களில்  காண்பது  அற்புதமே  (எட்டுக்குடி )

வெள்ளி, 8 ஜூன், 2018

ஆலயம் 473

                              பல்லவி
இறைவா  முருகா  இனிதே  வருவாய் --உன்னை
இரவும்  பகலும்   நினைப்பவர்  நெஞ்சினில்  {இறைவா }
                             அனுபல்லவி
கரை  காண   முடியாக்  கருணைக்  கடலே  --உந்தன்
கழலடி  பற்றினால்  இனிமேல்  கவலைகள்  இல்லையே  {இறைவா }
                              சரணங்கள்
அமிழ்தாய்  இனிப்பாய்  தூய  அழகால்  சிரிப்பாய் --தொழும்
அடியவர்  மனதினில்   ஆலயம்  அமைப்பாய்
தமிழாய்  இருந்தே  இந்த  தரணியை  ஆள்வாய் --அன்று
தாயு மானவர்  தந்திட்ட  தண்ணொளிச்  சுடரே  (இறைவா )

கனிக்காக  அன்றுநீ  சினமுடன்  தனியே  போனாய் --கதறிடும்
ஏழையர்க்கு  உதவிடும்  நல்ல  துணையும்   ஆனாய்
கனிந்த  மனத்தால்  கருணையைப்  பொழிவாய் --அருள்
கந்தனே  வேலனே   நீயும்  கண்மலர்  திறவாய்  (இறைவா )

உலகம்  நலமுற   மாந்தர்  உழைத்திட  வேண்டும் --அதில்
உள்ளவர்  யாவரும்  நலம்  பெற  வேண்டும்
நிலவிடும்  கொடுமைகள்  நீங்கிட  வேண்டும் --உன்னை
நினைப்பவர்  முன்னே   நீயும்   வர  வேண்டும்  (இறைவா )

தமிழினில்  பாடி  உனது  தாளடி  பணிவோம் --எமக்கு
தருவதை  நிறைவாய்  என்றும்  தந்திட  வேண்டும்
இணையடி  தொழுபவர்  எந்நாளும்  உயர்வார் --எங்கள்
ஈசனே  நேசனே  உமையவள்  பாலனே  (இறைவா )

வியாழன், 7 ஜூன், 2018

காப்பிய நாயகன் 472

                                   பல்லவி
சொல்லி   அழைத்து  வாடி   தோழி --என்
சுந்தரனை  வேலவனை  சுப்பிரமணிய  சீலனை  (சொல்லி )
                                   அனுபல்லவி
புள்ளி மயில்  ஏறிவரும்  வள்ளி மணவாளன் --என்றும்
புன்னகை  தவழும்   கந்தனெனும்  நேசன் (சொல்லி )
                                    சரணங்கள்
ஆளான  நாள்  முதலாய் அவன்மேல்  ஆசை  வைத்தேன் --நான்
அனுதினம்  தவறாது   அன்பாக  பூசை  செய்தேன்
வேலன்  வருகவென  விரதங்களும்  இருந்தேன்  --அந்த
விண்ணவர்  தலைவனை எந்தன்  விழிகள்  காணவில்லை (சொல்லி )

சந்தனம்  மணக்கின்ற   ஷண்முகன்   வருவான் --எந்தன்
சஞ்சலம்  தீர்த்திட   சரசங்கள்   தினம்  புரிவான்
பந்தத்தை  நினைந்து  பாவை  மனம்  துடிக்குதே --அந்த
பரம சிவன்  மகன்  எனைப்  பார்த்திட  வந்தால்  என்னடி  (சொல்லி )

கூப்பிட்ட  குரலுக்கு  என்குமரனும்  வருவான் --என்
கொவ்வை  இதழினில்  குளிர் மழை  பொழிவான்
காப்பிய  நாயகன்  கண்கவர்  அழகன் --எந்தன்
கந்தனை   கனக வேலனைகண்டு  ரசிக்க வென்றே  (சொல்லி )

இரவென்றும்  பகலென்றும்  எதுவும்  தெரியவில்லை --என்
இளமை  விடுகின்ற  மூச்சின்  ஏக்கம் புரியவில்லை
உறவினைப்  பெரிதாக்க  என் உத்தமன்  வருவானோடி --நான்
உழன்று  தவிப்பதை  உரியவரிடம்  போய்   இன்றே  (சொல்லி ) 

புதன், 6 ஜூன், 2018

என் காதலி 471

நிலவும்  எனக்கு  நிம்மதி  தருமா --என்னை
நினைந்தே  அருகினில்  நீயும்   வா   வா
கலையும்  கனவாய்  என்  காதலும்  போகுமோ --என்
காதலி  செல்வமே  கொஞ்சம்  கருணை புரிவாய்

கண்ணீர்  மழையில்  என் காதலை  வைத்தாய் --உன்
பின்னால்  அலைந்தது  பெரும்  பிழை  தானோ
கண்ணே  மணியே  எந்தன்  கலைமாமணியே --நான்
உன்னையே  நினைத்தேன்  உயிரினில் கலந்தேன்

எல்லாம்  தெரிந்தும்  எங்கு நீ   போனாய் -எனது
ஏக்கம்  தாபம்  இன்னும்  உனக்கில்லையோ
பொல்லா  உலகம்  புரட்டுகள்  பேசும் --உனது
பூரித்த  இளமையோ   எனக்குப்  போதையை  தந்திடும்

தனியாய்  இருந்தால்  தணலாய்த்  தகிப்பாய் --உன்னை
தாவியே  அணைத்தால்  தாகமும்  தணியும்
கனியும்  இதழால்   என்னைக்  கடித்து  தின்பாய் --நான்
கண்களை  மூடினால்  கனவினில்  வருவாய்

காலங்கள்  போயினும்  நம் காதல்  வாழும் -நாம்
கலந்து   இருந்திட  பல கவிதைகள்  பிறக்கும்
நாளும்  கோளும்  நன்மையே  செய்யும் --இள
நங்கை  உறவால்  எனது  நாட்களும்  நீளும்

மண்ணில்  காதல்  மரமாய்  வளரும் --சாதி
மயக்கம்  எல்லாம்  சருகாய்  உதிரும்
கண்ணில்  உதிப்பது  காதல்  என்பேன் --இதனை
கருத்தில்  கொண்டால்  வந்த  காரிருள்  விலகும்  

செவ்வாய், 5 ஜூன், 2018

செங்கமலம் 470

 கணை  வீசிக்  கொல்ல  காரிகை  வந்தாள் --அவள்
காதலில்  விழுந்தேன்  கவலையில்  மிதந்தேன்
அணையாத  ஜோதி  எனக்கு  அழகான  தோழி --என்றும்
இணைகின்ற  நாளும்  இனிமேல்  வருமோ

சிரித்தாலே    முத்து  வந்திட்ட  சீதனச்  சொத்து  --அவளது
செந்நிறக்  கைகள்  செங்காந்தள்  மலர்கள்
விரிக்கின்ற  தோகை  விண்ணோரை  அழைக்கும் --நான்
விரும்பியே  வந்தும்   எனோ  விலகியே  போனாள்

மலைபோல  செல்வம்   மகிழ்வான  இல்லம் --இள
மானின்  மையலில்  இந்த  மாமனும்  தருவான்
கலையாத  நிலவே   கண்கவர்  அழகே  --உறவில்
கலந்திட  நினைக்கையில்  கனியெங்கே  போனாய்

தேடியும்  அலைந்தேன்  தெருவினில்  திரிந்தேன் --அவள்
தேராக  வந்தாள்    தரிசனம்  தந்தாள்
விடிகின்ற   வரையில்  வானில்  விண்மீன்கள்  சிரிக்கும் --என்
வேதனை   போக்கவே  இன்றே  விரைந்தோடி  வருவாய்

இருக்கின்ற  வரையில்  என்வாழ்வு  அவள் தான் --தினம்
இழித்தாலும்  பழித்தாலும்  எனக்கவள்  தேன்  தான் 
சிறப்பான  வாழ்வினை   என்செல்வமே  தருவாள்  --என்
சிந்தையை  கவர்ந்த  அந்த  செங்கமலம்  வருவாள்





திங்கள், 4 ஜூன், 2018

திருமுருகன் 469

                             பல்லவி
வரம்  தரு  முருகனை  அந்த  வள்ளி  மணாளனை --மனதில்
நினைந்திடில்  அவனே  நம்மிடம்  நேரில்  வருவான் (வரம் )
                           அனுபல்லவி
பதம் தரும்  சுகம் தரும்   பக்தியால்  சிறக்கும் --அவன்
பக்தர்கள்  பாடல்   பாரெங்கும்  ஒலிக்கும்   (வரம் )
                            சரணங்கள்
மயிலினில்  ஏறியோன்  நம் மனக்குறை  தீர்ப்பான் --நல்
மனைகளில்  செல்வங்கள்  மலையாய்க்  குவிப்பான்
பயமினி  ஏது  அவனடி  போற்றிடும்  போது --அந்த
பரமனின்  மகனே   நற்பதங்களும்  அருள்வான்      (வரம் )

வேலினை  யெடுத்தவன்  வெற்றிகள்  தருவான் --நாம்
வேண்டினால்  அவனும்  சந்தனமாய்   மணப்பான்
 பாலினைத்  தோற்றிடும்  பாங்கான  உள்ளம் --அவனை
பணிந்தவர்  தனக்குப்   பாயுமவன்  அருள்வெள்ளம்   (வரம் )

அருணகிரி  வணங்கும்  அம்பிகை  மைந்தன்  --நம்
அல்லல்கள்  போக்கிடும்  ஆறுமுகச்  செல்வன்
வறியவர்  செழிப்பினில்  வாழ்ந்திட  வைப்பான் --அந்த
வள்ளலை  நினைத்து   நம்  வாழ்வில்  முன்னேறுவோம்  (வரம் )

திருமுருகன்  நாமம்   திக்கெல்லாம்   கேட்கும் --வரும்
தீவினைகள்  யாவும்  திரும்பியே  ஓடும்
திருப்புகழ்  பாடுவோம்   தினமும்  நாம்  அன்போடு --அந்த
திருமால்  மருகன்  நமைத்  தேடியே   வருவான்  (வரம் )

நற்பலன் 468

                               பல்லவி
இதுவும்   சரியோ  நியாயமோ  இறைவா நீ சொல்லு --இனி
என்ன  செய்யவோ   நீயும்  அண்ணல்  அல்லவோ  (இதுவும் )
                                அனுபல்லவி
புதுமை  செய்திட வா   நீயே  புனிதன்  அல்லவா --புலம்பும்
என்குரல்   உனக்கு  இன்னமும்  புரியவில்லையோ  (இதுவும் )
                                 சரணங்கள்
நீ  வருவாயென  நானும்  நித்தமும்  நினைத்தேனே --நல்ல
நெடு முடி  வேந்தனே   நிர்மல  சீலனே
வரந்தர  இங்கு  வந்தால்  தானென்ன --உலகில்
வள்ளல்  என்றாலே   வழங்கிட  வருவாய்  (இதுவும் )

கனிவாய்  என்று  நான்  காத்தது  உண்மை  --உந்தன்
கண்களில்  பட்டால்   வந்திடும்  நன்மை
தணியாத   தாகம்   தவிக்கிறேன்  ஐயா --நீ யும்
தன்னருள்  காட்டியெனைத்  தடுத்தாள  வேண்டும்  (இதுவும் )

கழுத்தினில்   நீலம்  உனது  கண்களில்  ஞாலம் --தூய
காலடி  பற்றிட  கனியுமோ   நற்காலம்
நிலைத்திடும்  செல்வம்  நீயே  அல்லவா --என்
நிர்மல வேணியனே   உன்  புகழ்  சொல்லவா   (இதுவும் )

பார்வதி  மணாளா  சிவபக்தர்கள்   தலைவனே  --இன்றே
பரிவுடன்  காத்திட   ஏழையர்  பக்கமும்  வருவாய்
வேருக்குள்  நீரையும்  விரும்பிடும்  சிவனே --உன்னை
வேண்டிடும்  அடியவர்   பெறுவார்  நற்பலனே  (இதுவும் )

ஞாயிறு, 3 ஜூன், 2018

பரம்பொருள் 467

                           பல்லவி
சரவண பவ குக  எனத்  தினம்  ஓது --மனம்
கனிந்திடும்  நிறைந்திடும்  கந்தன்  அன்போடு  (சரவண)
                            அனுபல்லவி
நிரந்தரம்  அவனே   நம்  நிர்மலன்  மகனே --அவனை
நினைத்தவர்  உலகினில்  நிம்மதி  பெறுவார்  (சரவண )
                           சரணங்கள்
குற வள்ளி   திருமணம்  நம்  குஞ்சரன்  செய்தார் --பல
குடும்பங்கள்   வாழ்ந்திட  திருவருள்  புரிவார்
சிரமங்கள்  வந்திடில்  சீர்பெற  வைப்பார் --அவரை
சென்னியில்  வைத்தே  சீலனைத்  துதிப்போம்    (சரவண )

ஆறிரு கையன்   நல்ல  அன்பர்க்கு  மெய்யன் --என்றும்
அடியவர்க்கு  அருளினை  அள்ளியே  தருவான்
கோரிடும்  குறைகளைக்  கொய்தே  களை வான் --அவன்
குன்றினில்  நின்றாலும்  நீயும்  கூப்பிட  வருவான் (சரவண )

குஞ்சரி  மணாளன்  குணத்தினில்   சீலன் --நம்
கோதை  வள்ளி   தன்னைக்  குலவிடும்  நேசன்
வெஞ்சமர்  தன்னிலோ  வெற்றி  வீரன் --அந்த
வேலனை   சிவபாலனை  வேண்டுவோம்  தினமே  (சரவண )

இதம் தரும்  சொல்லினால்  ஏழையர்  காப்பான் --நம்
எல்லோர்  உள்ளத்தில்  இடமும்  பிடிப்பான்
பதம் தரும்  அவன்  திருவடி  பற்றிடு   மனமே  --அவனே
பரம்பொருள்  என்று  குகனைப்  பாடிடு  தினமே  (சரவண ) 

தேவனே 466

 ஊரை  யடிச்சுமே  வுலையிலே  போடுறான் --நல்ல
உத்தமன்  போலவே  வெளிவேஷம்  செய்கிறான்
பேரைக்  கெடுத்துமே  பல  பேதங்கள்  மூட்டுறான் --எனோ
பித்தனாக  மாறியே   நர்த்தனம்  ஆடுறான்

காசுகள்   சேர்த்திட  பலர்  கழுத்தை  அறுக்கிறான் --தினம்
கஞ்சனாக  மாறியே  வஞ்சனைகள்  புரிகிறான்
மாசில்லாத  மக்களை  ஏசவும்   செய்கிறான்  --தன்னை
மன்னனாக  எண்ணியே   தன்னிலை  மறக்கிறான்

கற்பென்னும்  பொருளினை  கடை சரக்காய்  நினைக்கிறான் --நல்ல
காவலை  மறந்து  மன ஆவலுக்குள்  போகிறான்
கற்பனையில்  கோட்டை  கட்டி  கர்வமாகப்  பேசுறான் --காசு
தினம்  சேர்ப்பதற்கு   பலர்  காலிலே  விழுகிறான்

நன்றாகப்  பேசுறான்   நரியாக   மாறுறான் --அவனை
நம்பினோர்  வாழ்விலே  நயவஞ்சகம்  புரிகிறான்
கன்றையும்  தாயையும்  கச்சிதமாய்ப்  பிரிக்கிறான் --அந்த
கடவுளையும்  மறந்து   கள்வனாய்  திருடுறான்

நாட்டினை  மறந்து   இங்கு  நாடகம்  போடுறான் --செய்த
நன்றிதனை  மறந்து  நஞ்சாக  மாறுறான்
தேட்டையை  போட்டு   தினமும்  வாழ்கிறான் -இந்த
திருடர்கள்  திருந்திட  தேவனே நீ   வழி காட்டு 

வெள்ளி, 1 ஜூன், 2018

காதல் விளக்கு 465

 அலைபாயும்  கண்ணில்  அசைந்தாடும்  மீனோ --உன்னால்
நிலை  மாறிப்  போனேன்  நித்தமும்  நானே
கலை மேனி  முழுதும்  கம்பன்  சொல்லும்  சிலையோ --என்
கண்ணாட்டி  மணவாட்டி   நீயும்  இல்லாத  விலையோ

சிரித்தாலும்  புதுமை  நீ  சீனர்கள்  பதுமை --அதை
விரிவாகச்  சொன்னால்  எனக்கு  விளையாட்டுப்  பொம்மை
எரிகின்ற  மனதை  இதமாக  மாற்று --இனி
இரவினில்  காதல்  விளக்கினை  ஏற்று

பிரிகின்ற  எண்ணம்  கூடாது  பெண்ணே --உன்
பின்னாலே  அலைவேன்  பித்தாக  கண்ணே
விடிகின்ற  பொழுதும்  நமக்காக  விடியும் --உன்
விரல்  வீணை  தன்னை  மீட்ட மோகமது  உண்மை

கனவினில்  நீ  வந்தால்  கைகளால்  அணைப்பேன் --உனது
கட்டுடல்  தனிலே   கனியிதழ்  வைப்பேன்
தினமும்  நீஎனக்கு  தேவியாய்த்  தெரிவாய்  --என்
சிங்காரி   ஒய்யாரி   தேனள்ள   வா   வா

நானாக  இருந்தேன்  இன்று  நீயாகிப்   போனேன் --இனி
நம் வாழ்வு  சுகமாக  நாமிணைதல்  வேண்டும்
தேனாக  இனிக்கும்  திரு நாளும்    இதுவே --என்
தெய்வமும்  நீதான்  என்றும்  திகட்டாத   மதுவே