அழகினைக் கண்டேன் அமுதமாய்க் கொண்டேன் --நான்
பழகவே நினைத்து அவளது பக்கம் சென்றேன்
விழிகளை உருட்டி என்னையே விரட்டி யடித்தாள் --அந்த
வெற்றி செல்வியை விரும்புதல் என்ன தவறா ?
களி நடம் புரிவாள் எந்தன் கனவினில் வருவாள் --துணை
எனக்கு வாழ்விலே அவளது தோழமை வருமா
தனியாய் திரிந்தேன் தவிப்பினில் மிதந்தேன் --நல்
தாமரை மலராள் என்னைத் தழுவிடத் தயக்கமா
இரவினில் நடப்பேன் இனி துயில் மறந்தேன் --அவள்
உறவை நினைப்பேன் உள்ளம் மகிழ்வேன்
ஊரார் நகைப்பார் உடலும் நொந்தேன் --நானோ
வேறோர் பெண்ணை விரும்பிட மாட்டேன்
கண்ணீர் மழைதனில் கரைந்திட வைப்பேன் --என்
காதலைச் சொல்லி அவள் கவனம் இழுப்பேன்
என்னுள் அவளே எங்கிலும் நிறைந்தாள் --தினம்
இருகரம் கொண்டு இழுத்து அணைப்பேன்
உறவினில் கலந்து என்றும் ஒன்றாய் இருப்போம் --நிதம்
இளமை விருந்தினை இருவரும் நன்றாய் ருசிப்போம்
பேரினைச் சொல்லிட எமக்கு நல்ல பிள்ளை பிறப்பான் --அவனை
பேணிக் காத்துமே உலகினில் பெரும் புகழினை அடைவோம்
பழகவே நினைத்து அவளது பக்கம் சென்றேன்
விழிகளை உருட்டி என்னையே விரட்டி யடித்தாள் --அந்த
வெற்றி செல்வியை விரும்புதல் என்ன தவறா ?
களி நடம் புரிவாள் எந்தன் கனவினில் வருவாள் --துணை
எனக்கு வாழ்விலே அவளது தோழமை வருமா
தனியாய் திரிந்தேன் தவிப்பினில் மிதந்தேன் --நல்
தாமரை மலராள் என்னைத் தழுவிடத் தயக்கமா
இரவினில் நடப்பேன் இனி துயில் மறந்தேன் --அவள்
உறவை நினைப்பேன் உள்ளம் மகிழ்வேன்
ஊரார் நகைப்பார் உடலும் நொந்தேன் --நானோ
வேறோர் பெண்ணை விரும்பிட மாட்டேன்
கண்ணீர் மழைதனில் கரைந்திட வைப்பேன் --என்
காதலைச் சொல்லி அவள் கவனம் இழுப்பேன்
என்னுள் அவளே எங்கிலும் நிறைந்தாள் --தினம்
இருகரம் கொண்டு இழுத்து அணைப்பேன்
உறவினில் கலந்து என்றும் ஒன்றாய் இருப்போம் --நிதம்
இளமை விருந்தினை இருவரும் நன்றாய் ருசிப்போம்
பேரினைச் சொல்லிட எமக்கு நல்ல பிள்ளை பிறப்பான் --அவனை
பேணிக் காத்துமே உலகினில் பெரும் புகழினை அடைவோம்