
கட்டவிழும் மொட்டவிழும்
கட்டை விரல் கோலமிடும்
போட்டு வளர் நெற்றியிலே
பூங்குழல்கள் மெல்ல ஆடும்
கண் இரண்டும் கவி பாடும்
காலிரண்டும் நடை போடும்
எண்ணமெல்லாம் சுழன்றாடும்
ஏந்திழையாள் மனம் வாடும்
தென்றல் அங்கு மெல்ல வரும்
சேதி ஒன்றை கொண்டு வரும்
ஒன்றி விட்ட காதல் நெஞ்சம்
வுவகைஇல் துள்ளி எழும்
தொட்ட இடம் சொர்க்கமாகும்
தோகை முகம் வெட்கமாகும்
பட்டு மலர் மேனிஇலோ
பாச சுமை ஏறிவிடும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக