சனி, 13 ஜூன், 2009

காதல் நெஞ்சம்



கட்டவிழும்
மொட்டவிழும்
கட்டை விரல் கோலமிடும்
போட்டு வளர் நெற்றியிலே
பூங்குழல்கள் மெல்ல ஆடும்

கண் இரண்டும் கவி பாடும்
காலிரண்டும் நடை போடும்
எண்ணமெல்லாம் சுழன்றாடும்
ஏந்திழையாள் மனம் வாடும்

தென்றல் அங்கு மெல்ல வரும்
சேதி ஒன்றை கொண்டு வரும்
ஒன்றி விட்ட காதல் நெஞ்சம்
வுவகைஇல் துள்ளி எழும்

தொட்ட இடம் சொர்க்கமாகும்
தோகை முகம் வெட்கமாகும்
பட்டு மலர் மேனிஇலோ
பாச சுமை ஏறிவிடும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக