புதன், 10 ஜூன், 2009

அமுது



பொங்கல் பிறந்தது பூமிஇலே -உளம்
பொங்கி ஆடிட வா குயிலே

திங்களை உழவரை கும்பிடுவோம் -தமிழ்
திக்கெட்டும் ஆண்டிட நம்பிடுவோம்

புதிய பானை அரிசி வைத்து -சுவை
பொங்கி வழிந்திடும் அமுதமைத்து
இதய நன்றி செலுத்திடுவோம் -அந்த
இன்பத்தில் வாழ்வினை கழித்திடுவோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக