
பிறந்தவர் மண்ணில் இறப்பதுண்டு -சிலர்
பெருமையால் என்றும் இருப்பதுண்டு
எரிப்பினும் புதைப்பினும் அழிவதில்லை -நல்ல
இதயங்கள் அவரினை மறப்பதில்லை
எத்தனை துறைதனை தொட்டாலும் -இருப்பது
அவர் பெயர் முன்னாலே
புத்தரை போன்றிட்ட உருவமையா-இங்கு
பொறுமையில் காந்தியை போன்றதையா
ஆயிரம் ஆண்டிர்கோர் தலைவன் -மக்கள்
அவலத்தை தீர்ப்பதில் பேரிறைவன்
ஈண்டு அணைந்தது மணிவிளக்கு -நம்
இன்னலுக் கில்லையே விதிவிலக்கு
அண்ணன் வழிஇனில் நடந்திடுவோம் -எங்கும்
அன்பெனும் குணத்தை வளர்த்திடுவோம்
கண்ணை போலவே நம் தாயகத்தை -இனி
கடின உழைப்பினில் உயர்த்திடுவோம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக