வெள்ளி, 12 ஜூன், 2009

அடிமைப்பெண் -வெற்றிவிழா



அண்ணன் பெற்ற பிள்ளை -அவள்
அழகிற் கீடிணை இல்லை
கண்கள் செய்திட்ட பேறு -மக்கள்
கண்டதும் தீஞ்சுவை நூறு

வள்ளல் மனதில் கருவாய் -தினம்
வளர்ந்தது தாய்மைஇன் உருவாய்
அள்ளித் தருவது வருவாய் -எங்கும்
ஆனந்தம் பொங்குது நிறைவாய்

கொட்டகை வழிந்திடும் கூட்டம் -குறை
சொல்ல வந்தவர் ஓட்டம்
தொட்டது துலங்கிடும் காட்சி -திரை உலகில்
தொடர்வது அண்ணனின் ஆட்சி

பாலைவன மணலிலும் நடந்து -வைத்த
பரீட்சை யாவையும் கடந்து
நாளைய சரித்திரம் கொண்டாள் -தமிழ் -
நாட்டையே வெற்றி கண்டாள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக