
தையில் வந்திடும் திரு நாள் -இது
தமிழர் வாழ்விற் கொரு நாள்
வையம் வணங்கிடும் பெரு நாள் -ஏழை
வாழ்வில் சிரித்திடும் புதுநாள்
உழவை செய்திடும் உழவர்கள் -மொழியை
உயர்வென கருதிடும் புலவர்கள்
வளமை குழைத்திடும் மாடுகள் -இந்த
வரிசையின் தொடர்ச்சியே பொங்கல்
எங்கும் உணவினை பெருக்குவோம் -அதை
எல்லோர்க்கும் சமமாய் பங்கிடுவோம்
திங்களை ஞாயிறு போற்றுவோம் -தமிழ்
தேனினு மினியதால் வாழ்த்துவோம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக