
இருண்ட வானம் தெளிந்தது -மக்கள்
இன்பக் கனவு மலர்ந்தது
குலைந்த வாழ்வு மீண்டது -நெஞ்சில்
கொள்ளை இன்பம் வழிந்தது
இதய வாசல் திறந்தது -அங்கு
உதய ராகம் பிறந்தது
உரிமை வேட்கை எழுந்தது -அது
உலக மெங்கும் கலந்தது
களைத்த உள்ளம் நிமிர்ந்தது -முகத்தில்
கருணை ஒளியாய் தெரிந்தது
புரிந்த தர்மம் காத்தது -வானில்
புதிய வெள்ளி முளைத்தது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக